MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • மொய் பணத்துடன் கூடுதலாக 1 ரூபாய் கொடுப்பது எதற்காக தெரியுமா? பலருக்கும் தெரியாத சுவாரஸ்சிய தகவல்!!

மொய் பணத்துடன் கூடுதலாக 1 ரூபாய் கொடுப்பது எதற்காக தெரியுமா? பலருக்கும் தெரியாத சுவாரஸ்சிய தகவல்!!

திருமண நிகழ்வு நிறைவடைந்த பின்னர் மொய் பணம் கொடுக்கும் போது 101 ரூபாய், 201 ரூபாய் என்று கூடுதலாக 1 ரூபாய் கொடுப்பதற்கு பின்னால் ஒரு சுவாரசியமான காரணம் உள்ளது. 

2 Min read
Author : maria pani
Published : May 23 2023, 05:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

திருமணம், கிரகபிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போதும் பணத்தை மொய்யாக கொடுக்கிறோம். அப்போது கூடுதலாக 1 ரூபாய் வைத்து கொடுப்போம். உதாரணமாக 51, 101, 501, 1001 என மொய் செய்வோம். அதுமட்டுமின்றி நன்கொடையாகக் கொடுக்கப்படும் பணத்தில் கூட ஏன் ஒரு ரூபாய் கூடுதலாக வைக்கப்படுகிறது என்பதற்குப் பின்னால் நம் முன்னோரின் ஆழ்ந்த சிந்தனை இருக்கிறது. இந்த பாரம்பரியத்தின் பின்னால் உள்ள காரணத்தை அறிந்து கொள்வோம்.  

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

நாம் 50 அல்லது 100 ரூபாயை தசமங்களாகக் கொடுக்கும்போது, ​​இந்த எண்கள் பல இலக்கங்களால் வகுக்கப்படும். அதாவது அவை பிரிக்கப்படலாம். மேலும் 51 அல்லது 101 போன்ற 1 ரூபாய் கூடுதலாக வைக்கப்படும் போது இந்த எண் பிரிக்க முடியாததாகிவிடும். அதாவது எந்த இலக்கத்தாலும் வகுபடாது. இதன் உளவியல் அம்சம் என்னவெனில், மொய்யில் கொடுத்த காசு போல, நம் உறவு என்றும் நிலைத்திருக்கும், பிரிந்து விடக்கூடாது என்பது தான். அடடா! உறவை பிரிக்கக் கூடாது என மொய்யில் கூட இவ்வளவு நுணுக்கங்களை முன்னோர் யோசித்திருக்கிறார்களே..

35

விழாக்களில் 51 அல்லது 101 ரூபாயை கொடுப்பதற்குப் பின்னால் இன்னொரு காரணமும் இருக்கிறது. இதன்படி, 50 அல்லது 100 ரூபாயின் கடைசி இலக்கம் பூஜ்ஜியமாகும். ஆனால் அதனுடன் 1 ரூபாய் சேர்ந்தால் அது 51 மற்றும் 101 ஆக மாறும், இதன் கடைசி இலக்கமான 1 என்பது ஒற்றுமையின் சின்னமாகும். உறவுகளில் எப்போதும் ஒற்றுமை இருக்க வேண்டுமே தவிர வெறுமையாக இருக்க கூடாது என்பதே அதன் காரணம். பூஜ்ஜியம் என்பது இறுதிக் குறிகாட்டி. அதே சமயம் 1 தொடக்கக் குறிகாட்டியாகும். தொடர்ச்சியை குறிக்கவே மொய்யில் ரூ. 101 என கொடுக்கிறோம்..

45

சுப நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் மொய் பணம், ஒருவகை முதலீடு. நமக்கு தெரிந்தவர்களுக்கோ, உறவினர்களுக்கோ ஏதேனும் சுபநிகழ்ச்சிகள் வரும்போது, நமது சக்திக்கேற்ப, அவர்களுக்குப் பரிசாகவோ, பணமாகவோ வழங்குகிறோம். அதே நமது குடும்பத்தில் ஒரு சுபநிகழ்ச்சி வரும் போது, ​​இந்த அன்பளிப்புகளும், பணமும் நமக்கே திருப்பித் தரப்படுகிறது, அது அந்த நேரத்தில் நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வழியில் பார்க்கும்போது, ​​​​பரிசு வழங்குவதும் ஒரு வகையான முதலீடாகும்.  

இதையும் படிங்க: சுக்கிரன் பெயர்ச்சி.. இந்த 4 ராசிக்காரர்களுக்கு பொற்காலம்!! எல்லாமே சாதகமாக முடியும்!!

55

நாணயம் பூமியில் இருந்து உருவான உலோகம், செல்வத்தின் கடவுளான லட்சுமியின் உருவகம். எனவே, நாணயங்களை ரூபாய் நோட்டுகளுடன் கொடுக்கிறார்கள். நாம் கொடுக்கும் மொய் காசு பூஜ்ஜியமாகிவிடாமல் தடுக்கும் பொருட்டு 1 ரூபாய் சேர்த்து கொடுக்கப்படுகிறது. இது வளர்ச்சிக்கான விதையாக செயல்படுகிறது. அதனால் தான் இந்தியர்கள் ஒத்தப்படை எண்களில் மொய் பணம் வழங்குகிறார்கள். 

இதையும் படிங்க: வழியில் கிடக்கும் பணத்தை எடுப்பது நல்லதா? கெட்டதா?

About the Author

MP
maria pani
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Purattasi Kolam: புரட்டாசி ஸ்பெஷல் கோலம் டிசைன்.. உங்க வீட்டு வாசலில் ட்ரை பண்ணுங்க!
Recommended image2
Perumal Holy Names: "கோவிந்தா..நாராயணா"..புரட்டாசியில் சொல்ல வேண்டிய பெருமாள் திருநாமங்கள்!
Recommended image3
Purattasi: நாளை புரட்டாசி முதல் நாள்.. வீட்டில் இந்த விஷயங்களை மறக்காமல் செய்யுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved