MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • இதுவரை யாரும் அறிந்திராத ரகசியம் ! கருப்பு கயிறை நமது உடம்பில் எங்கு கட்டினால் ,வீட்டில் பண மழை பொழியும்!

இதுவரை யாரும் அறிந்திராத ரகசியம் ! கருப்பு கயிறை நமது உடம்பில் எங்கு கட்டினால் ,வீட்டில் பண மழை பொழியும்!

கருப்பு கயிறை எங்கு எப்படி கட்டினால் பணவரவை அதிகரிக்க செய்யலாம், எந்தெந்த பிரச்சனைகளை சரி செய்து கொள்ள முடியும் என்பதனை பற்றி இந்த பதிவில் நாம் காண உள்ளோம்

2 Min read
Author : Dinesh TG
Published : Mar 14 2023, 01:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

கருப்பு கயிறு என்பது இன்று, நேற்று வந்த பழக்கம் அல்ல. நம் முன்னோர்கள் காலம் தொட்டே கடைப்பிடிக்கப்பட்ட ஒரு வழக்கம் தான். பிறந்த குழந்தைகள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை இந்த கருப்பு கயிறு கட்டி இருப்பதை பார்த்து இருக்கிறோம். இந்த கருப்பு கயிறு நம் உடம்பில் இருக்கும் போது திருஷ்டி நம்மை நெருங்காது என்ற நம்பிக்கை இன்றும் பலருக்கும் உண்டு.

பொதுவாக இடுப்பில் அரை ஞான் கயிறாக தான் கட்டி இருப்பீர்கள். இது தீய சக்திகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் அரணாக இருக்கும் என்ற காரணத்தினால் தான். இடுப்பில் கட்டப்படும் இந்த கயிறை அரை ஞான் கயிறு என்ற பெயரும் உண்டானது.

இப்போது கருப்பு கயிறை எங்கு எப்படி கட்டினால் பணவரவை அதிகரிக்க செய்யலாம், எந்தெந்த பிரச்சனைகளை சரி செய்து கொள்ள முடியும் என்பதனை பற்றி இந்த பதிவில் நாம் காண உள்ளோம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23

முதலில் கருப்பு கயிற்றை யார் யார் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம். இந்த கருப்பு கயிறை ஆண்கள் வலது கால் அல்லது வலது காலிலும், பெண்கள் இடது கை அல்லது இடது காலிலும் தான் கட்ட வேண்டும்.

இந்த கருப்பு கயிறை யார் எந்த காரணத்திற்காக கட்டினாலும் , அதை காட்டும் முன்பு ஒரு நாள் முழுவதும் ஹனுமன் சன்னதியில் அல்லது ஹனுமன் திருவுருவ படத்தின் கீழ் வைத்து பூஜை செய்த பிறகு தான் கட்ட வேண்டும். பூஜையில் அந்த கயிறு இருக்கும் வேளையில் ஒரு அர்ச்சனையாவது கண்டிப்பாக செய்வது அவசியமாகும். அதற்கு பிறகுத் தான் இதனை பயன்படுத்த வேண்டும். இப்படி தான் கயிறு கட்ட வேண்டும்.அதே போன்று இந்த கருப்பு கயிறனை எந்த பிரச்சனைகளுக்கு எப்படி கட்ட வேண்டும் என்பதை பார்க்கலாம்.

கட்டுவதற்கு முன் கயிறை என்ன செய்ய வேண்டும்:

ஒரு நீளமான கருப்பு கயிறை எடுத்துக் கொண்டு, அதில் 9 முடிச்சுகள் போட வேண்டும். பின் அந்த கயிறை ஒரு நாள் முழுவதும் ஹனுமன் பாதத்தின் கீழ் வைத்த பிறகு, எடுத்து நம் கைகளில் அலல்து கால்களில் கட்டிக் கொள்ள வேண்டும்.

வீட்டில் கடனே இல்லாமல் இருக்க , பணவரவு இருந்து கொண்டே இருக்க பெண்கள் வேண்டிய 5 விஷயங்கள்!

33

கையில் கட்டுவதால் கிடைக்கும் பலன்!

இந்த கருப்பு கயிறை கையில் கட்டும் பொழுது நமக்கு வீட்டில் பணவரவானது அதிகரித்து கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. அதாவது இந்த கயிறு நம் கைகளில் இருக்கும் போது நமக்கு வீண் விரயத்தை தடுத்து, பணவரவை அதிகப்படுத்தி தருவதாக சொல்லப்படுகிறது. மேலும் தீயசக்தி , கண் திருஷ்டி, வேண்டாதவர்களின் செயல்கள் இவற்றில் இருந்தும் நம்மை காத்துக் கொள்ளப் பயன்படுகிறது.

காலில் கட்டுவதால் ஏற்படும் பலன்கள் :

இந்த கருப்பு கயிறானது நம் காலில் இருக்கும் போது நம் உடலில் இருக்கும் வியாதிகள் விரைவாக சரியாகும் என்றும், அதிக நாள் நோய் வாய்ப்பட்டவர்கள் அல்லது விபத்து போன்றவற்றை சந்தித்து கொண்டு இருப்பவர்கள் இந்த கயிறை காலில் கட்டும் போது மேற்கூரிய தொல்லைகளின் தாக்கத்தில் இருந்து காத்துக்கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. தவிர கண் திருஷ்டி , தீய சக்தி போன்றவற்றில் இருந்து நம்மை பாதுக்காக்கும் என்பதால் தான் நம் முன்னோர்கள் இந்தப் பழக்கத்தை பின் பற்றி வந்தார்கள்.

கண்திருஷ்டி போக்கி நம்மை காத்துக் கொள்ள :

வீட்டின் கண் திருஷ்டி போக்க இந்த கருப்பு கயிறை வீட்டின் நிலை வாசலில் கட்டி விடலாம். இதனால் வீட்ற்குள் இருக்கும் கெட்ட சக்திகள் ,மேலும் வெளியில் இருந்து மேற்கொண்டு எந்த கெடுதல் தரும் சக்திகளும் நம்மை தாக்காமலும் இந்த கருப்பு கயிறானது நம்மை காக்கும் பயன்படுத்தலாம்.

About the Author

DT
Dinesh TG
Latest Videos
Recommended Stories
Recommended image1
Chanakya Niti: கணவன்-மனைவிக்கு எவ்வளவு வயசு வித்தியாசம் இருக்கணும்? சாணக்கியர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Astrology : தடைகள் நீங்கும், மாற்றம் வரும்: சிம்ம ராசிக்கு ஜூன் மாதம் ஒரு பொற்காலம்!
Recommended image3
Ariyanathaswamy Temple : குபேரனுக்கே செல்வத்தை அளித்த இடம்! நீங்க இழந்த செல்வம் கண்டிப்பா கிடைக்கும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved