- Home
- Spiritual
- Kubera Kungumam : இதை 41 நாட்கள் பயன்படுத்தினால் பணம் உங்க பின்னாடியே வரும்! பச்சைக் குங்குமப் பலன்கள்!
Kubera Kungumam : இதை 41 நாட்கள் பயன்படுத்தினால் பணம் உங்க பின்னாடியே வரும்! பச்சைக் குங்குமப் பலன்கள்!
Kubera Kungumam : மகாலட்சுமியினுடைய அருளின் குறியீடாக சிவப்பு குங்குமம் போற்றப்படுகிறது. ஆனால், ஆன்மிக உலகில் ஒரு அதிசயமான 'பச்சை குங்குமம்' உள்ளது. இது 'குபேர குங்குமம்' என்று அழைக்கப்படுகிறது. இதன் பின்னணியில் உள்ள ஆன்மிக ரகசியங்களைக் காண்போம்.

பச்சை குங்குமம் என்றால் என்ன?
பொதுவாக நாம் பயன்படுத்தும் குங்குமம் மஞ்சள் மற்றும் சுண்ணாம்பு கலவையில் தயாரிக்கப்படுகிறது. ஆனால், இந்த பச்சை குங்குமம் மகாலட்சுமி மற்றும் குபேர வழிபாட்டிற்கு உகந்த புனித மூலிகைகள் மற்றும் சிறப்புப் பூஜை பொருட்களால் பாரம்பரிய முறையில் தயாரிக்கப்படுகிறது. இது குபேர வழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பச்சை குங்குமம் எங்கு கிடைக்கும்?
தமிழ்நாட்டின் சில முக்கிய தலங்களில் இந்த அரிய வகை பச்சை குங்குமம் பிரசாதமாக வழங்கப்படுகிறது:
1.காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்: இங்குள்ள குபேரன் சன்னதியில், தனது துணைவியார் சித்ரலேகையுடன் தாமரையில் அமர்ந்திருக்கும் குபேரனுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்கு பக்தர்களுக்கு பச்சை குங்குமம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. குறிப்பாக ஒவ்வொரு மாதமும் பூரட்டாதி நட்சத்திரத்தில் குபேரனுக்குச் சிறப்பு ஹோமங்கள் நடைபெறுகின்றன.
2.பச்சையம்மன் ஆலயங்கள்: தமிழகத்தில் பல பகுதிகளில் குலதெய்வமாக வழிபடப்படும் பச்சையம்மன் ஆலயங்களிலும் பச்சை குங்குமம் பிரசாதமாக வழங்கப்படுகிறது.
3.ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோயில் (ஈரோடு, இரட்டைசுற்றிப்பாளையம்): இங்கு தயாரிக்கப்படும் பச்சை குங்குமத்தில் மஞ்சள், கற்றாழை, வேம்பு, அரச இலை, துளசி போன்ற இயற்கை மூலிகைகள் சேர்க்கப்படுவதால், இது கூடுதல் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பச்சை குங்குமத்தின் ஆன்மிகப் பயன்கள்
பச்சை குங்குமத்தை முழு நம்பிக்கையுடனும் பக்தியுடனும் பயன்படுத்தினால் கீழ்க்கண்ட பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை:
- செல்வ வளம் பெருகும்: குபேரனின் அருளால் பணத்தட்டுப்பாடு நீங்கி, வீட்டில் செல்வ வளம் தடையின்றி பெருகும்.
- தொழில் முன்னேற்றம்: தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை இல்லாத அளவு பெரிய மாற்றங்களும், லாபமும் உண்டாகும்.
- கடன் சுமை குறையும்: பொருளாதார ரீதியாகத் திணறும் சூழலில் இருந்து விடுபடவும், கடன் சுமைகளிலிருந்து முழுமையான விடுதலை பெறவும் இது உதவும்.
- கல்வி மற்றும் மன உறுதி: மாணவர்களின் கல்வி மேம்படும். மன உறுதி அதிகரிக்கும்.
- குடும்ப ஒற்றுமை: குடும்பத்தில் சுபிட்சமும், ஒற்றுமையும் நிலைக்கும். மன நிம்மதி கிடைக்கும்.
- திருமணத் தடை: பலருக்கு இருக்கும் திருமணத் தடைகள் நீங்க இது ஒரு சிறந்த பரிகாரமாகப் பார்க்கப்படுகிறது.
பயன்படுத்தும் முறை
- தினசரி வழிபாடு: இந்த குங்குமத்தைத் தினமும் நெற்றியில் இட்டுக் கொள்ளலாம். வீட்டின் பூஜையறையில் வைத்துப் பூஜிப்பது சிறப்பு.
- சிறந்த நாட்கள்: புதன்கிழமைகளில் பயன்படுத்துவது மிகுந்த நற்பலன்களைத் தரும் என்று கூறப்படுகிறது. மகாலட்சுமி, குபேரன் மற்றும் பைரவர் வழிபாட்டில் இதனைப் பயன்படுத்தலாம்.
- 41 நாட்கள் வழிபாடு: நம்பிக்கையுடன் தொடர்ந்து 41 நாட்கள் இந்த குங்குமத்தைப் பயன்படுத்தினால் நல்ல மாற்றங்களைக் காணலாம்.
- கோயில் பிரசாதம்: ஆலயங்களிலிருந்து பெற்று வந்த குங்குமத்தைச் முதலில் பூஜை அறையில் வைத்து, பின்னர் குடும்ப உறுப்பினர்கள் பயன்படுத்தி வருவது மரபாகும்.
இறை வழிபாட்டில் எந்த ஒரு பொருளும் இறைவனின் அருளை நினைவூட்டும் ஒரு கருவியே. அந்த வகையில், குபேர குங்குமம் உங்கள் இல்லத்தில் செல்வச் செழிப்பையும், மன அமைதியையும் கொண்டு வரும் ஒரு புனித சாதனமாகும். தூய பக்தியுடன் இறைவனை வேண்டி, இந்த குபேர குங்குமத்தைப் பயன்படுத்தி, வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறுவோம்.
Angarak Yoga : ராகு-செவ்வாய் சேர்க்கையால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கஷ்ட காலம்! உங்க ராசி இருக்கா?

