MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • மார்ச் மாதம் பிறக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் என்னவாக இருப்பார்கள்?

மார்ச் மாதம் பிறக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் என்னவாக இருப்பார்கள்?

மார்ச் மாதம் பிறக்கும் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த தலைவர்களாக கூட வருவார்கள். இரக்க குணமும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று குணமும் இவர்களிடம் உண்டு. 

2 Min read
Rsiva kumar
Published : Mar 03 2023, 10:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
மார்ச் மாதம் பிறக்கும் குழந்தைகள்:

மார்ச் மாதம் பிறக்கும் குழந்தைகள்:

முன்னோர்கள் காலத்தில் ஒரு வீட்டில் 11க்கும் அதிகமான குழந் தைகளை பெற்று வளர்த்து ஆளாக்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆண், பெண் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. கடவுளில் அருளால் எந்த குறைபாடும் இல்லாமல் பிறந்தாலே போதும் என்று இருந்திருக்கிறார்கள். 

28
மார்ச் மாதம் குழந்தை பிறந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்?

மார்ச் மாதம் குழந்தை பிறந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்?

ஆனால், இன்றைய காலகட்டங்களில் குழந்தை பிறப்பது என்பதே கேள்விக்குறியாகியுள்ளது. எத்தனையோ பேர் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்படிப்பட்ட இந்த காலத்தில் நமக்கு பிறக்கும் குழந்தை அறிவாளியாக, புத்திசாலியாக, இந்த நாட்டை ஆளும் திறமை கொண்டிருக்க வேண்டும் என்று கூட ஆசைப்படுவார்கள்.

38
குழந்தையின் எதிர்காலம்?

குழந்தையின் எதிர்காலம்?

அதற்கு தங்களது குழந்தை இந்த தேதியில், இந்த மாதத்தில், இந்த ஆண்டில் பிறக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அப்படி குழந்தைகள் பிறந்தால் அவர்கள் எந்த மாதத்தில் பிறந்திருக்கிறார்கள்? அந்த மாதத்திற்கான சிறப்பு என்ன என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். அந்த வகையில் ஒரு குழந்தை மார்ச் மாதத்தில் பிறந் தால் குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கும்? அந்த குழந்தையின் குணாதிசயங்கள் என்ன என்று இந்தப் பதிவில் காண்போம்.

48
சுறுசுறுப்பு, மகிழ்ச்சியாக இருப்பார்கள்:

சுறுசுறுப்பு, மகிழ்ச்சியாக இருப்பார்கள்:

எப்போதும் சுறுசுறுப்பாகவே இருப்பார்கள். இவர்களைச் சுற்றிலும் மகிழ்ச்சியான சூழல் நிலவும். எல்லாவற்றையும் ஆராய்ந்து முடிவு எடுக்க கூடியவர்கள். இவர்களை யாராலும் ஏமாற்ற முடியாது. அதையும் மீறி அவர்களை ஏமாற்ற நினைத்தால் அதனை முன் கூட்டியே அவர்கள் அறிந்து வைத்திருப்பார்கள். ஆதலால் எதிரிகளை இவர்கள் அதிகமாக சம்பாதித்து வைத்திருப்பார்கள்.
 

58
சேட்டைக்காரர்கள்:

சேட்டைக்காரர்கள்:

சேட்டை பிடித்தவர்கள். யாரிடமும் விளையாடும் குணம் கொண்டவர்கள். இதனால், இவர்கள் மீது பலரும் கோபம் கொள்வார்கள். வித்தியாசமாக எதையும் செய்ய வேண்டும் என்று ஆசை கொண்டவர்கள். இரக்க குணம் கொண்டவர்கள். மற்றவர்கள் பிரச்சனையை தனது பிரச்சனையாக நினைத்து அதற்கு தீர்வு காண முயற்சி செய்வார்கள். உதவி கேட்பவர்களுக்கு தங்காமல் உதவி செய்வார்கள்.
 

68
உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்:

உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்:

உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். எடுக்கும் முடிவுகளில் தீவிரமாகவும், விசுவாசமாகவும் இருப்பார்கள். யாரிடமும் அன்பு காட்ட வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்கள். ஒரு போதும் ஏமாந்து விடக் கூடாது என்று எண்ணிக் கொண்டே இருப்பார்கள்.
 

78
இயற்கையை நேசிப்பார்கள்:

இயற்கையை நேசிப்பார்கள்:

இயற்கையை நேசிக்கும் இவர்கள், செல்லப்பிராணிகளை அதிகம் விரும்புவார்கள். ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ விரும்புவார்கள். சண்டை, சச்சரவுகளை விரும்ப மாட்டார்கள். இக்கட்டான சூழ்நிலையையும் கூட பக்குவமாக கையாள்வார்கள். சில சமயங்களில் கூச்சம் கொண்டவர்களாக இருப்பார்கள். 

88
சிறந்த தலைவர்களாக இருப்பார்கள்:

சிறந்த தலைவர்களாக இருப்பார்கள்:

ஒவ்வொருவரிடமும் அதிகாரத்தை வெளிப்படுத்துவார்கள். சிறந்த தலைவர்களாக செயல்படுவார்கள். ஏராளமானவர்களை வேலை வாங்கும் ஆற்றல் இவர்களிடம் உண்டு. எல்லாவற்றிலும் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். எளிதில் கோப்படும் குணம் கொண்டவர்கள். தன்னிடம் அன்பு காட்டுபவர்களிடம் நேர்மையாகவும், அன்பாகவும் நடந்து கொள்வார்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஆன்மீகம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved