MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Unakoti Mystery ஒரு கோடிக்கு ஒன்று குறைவான சிலைகள்...இந்தியாவில் இப்படியொரு மர்மமான இடமா?

Unakoti Mystery ஒரு கோடிக்கு ஒன்று குறைவான சிலைகள்...இந்தியாவில் இப்படியொரு மர்மமான இடமா?

இந்தியாவில் உள்ள மிகவும் மர்மமான இடங்களில் ஒன்று தான் உனகோடி. பெயரே வித்தியாசமாக இருக்கிறது என நினைக்கிறீர்களா? பெயரில் மட்டுமல்ல, அதிகம் பிரபலமாகாத, பெரும்பாலானவர்களுக்கு தெரியாத, ஆச்சரியங்கள், மர்மங்களை உள்ளிடக்கிய சுற்றுலா தலங்களில் இதுவும் ஒன்று

2 Min read
Author : Priya Velan
Published : Sep 01 2026, 07:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
உனகோடி என்றால் என்ன?
Image Credit : Instagram

உனகோடி என்றால் என்ன?

'உனகோடி' என்ற பெங்காலி வார்த்தைக்கு "ஒரு கோடிக்கு ஒன்று குறைவு" (99,99,999) என்று பொருள். அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் பாறைகளிலும், நீர்வீழ்ச்சியின் ஓரங்களிலும் செதுக்கப்பட்டுள்ள இந்த எண்ணற்ற தெய்வங்களின் சிற்பங்களும், பிற உருவங்களும் யாரால், எப்போது, எதற்காக உருவாக்கப்பட்டன என்பதற்கு இன்று வரை தெளிவான வரலாற்றுச் சான்றுகள் இல்லை. கி.பி 7-ஆம் நூற்றாண்டு முதல் 9-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் இவை உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் துறையினர் கணித்தாலும், பழங்குடியின மக்களிடையே நிலவும் சுவாரஸ்யமான கதைகளே இதற்கான மர்மத்தை கூட்டுகின்றன. இதில் மிக முக்கியமான அதிசயம் என்னவென்றால் 99,99,999 தெய்வ சிலைகளில் சிவபெருமானின் சிலை மட்டும் இருக்காது.

இயற்கையோடு இணைந்து வாழும் ரம்மியமான சூழல், பாறைகளில் வடிக்கப்பட்ட பிரம்மாண்டமான 'உனகோடீஸ்வர கால பைரவர்' சிலை மற்றும் மலை உச்சியிலிருந்து கொட்டும் நீர்வீழ்ச்சி எனப் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் அம்சங்கள் இங்கு ஏராளம். உலகளவில் வரலாற்று ஆய்வாளர்களையும், சுற்றுலாப் பிரியர்களையும் ஈர்க்கும் இந்த மாயாஜால தலத்தைப் பற்றிய ஆழமான தகவல்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
உனகோடி என்பதன் ஆன்மீகப் பின்னணியும் புராணக் கதையும்
Image Credit : Instagram

உனகோடி என்பதன் ஆன்மீகப் பின்னணியும் புராணக் கதையும்

இத்தலத்தின் தோற்றம் குறித்து இருவேறு கதைகள் பிரபலமாகப் பேசப்படுகின்றன. முதலாவது கதையின்படி, சிவபெருமான் ஒரு கோடி தெய்வங்களுடன் காசிக்குச் செல்லும் வழியில், இரவு நேரத்தில் இந்த அடர்ந்த வனப்பகுதியில் தங்கியதாகவும், மறுநாள் சூரிய உதயத்திற்கு முன்பாக அனைவரும் புறப்பட வேண்டும் என்று கட்டளையிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், சிவபெருமானைத் தவிர மற்ற 99,99,999 தெய்வங்களும் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கத் தவறியதால், கோபமுற்ற சிவன் அவர்களைக் கல்லாக மாறுமாறு சாபமிட்டுவிட்டுத் தனியாகக் காசிக்குப் புறப்பட்டுச் சென்றார் என்பது நம்பிக்கை.

Related Articles

Related image1
TOUR: பூமியின் சொர்க்கத்திற்கு ஒரு விசிட்.! காஷ்மீர் பயணம் பற்றி சுற்றுலாப் பயணிகள் சொல்வது என்ன?
Related image2
Tour: இயற்கை அன்னை செதுக்கிய அதிசயம்.! கண்டிப்பா மிஸ் பண்ணக்கூடாத திற்பரப்பு அருவி!
36
கல்லுக்கரன் (Kallu Kumhar) உருவாக்கிய மாய உலகமா?
Image Credit : Instagram

கல்லுக்கரன் (Kallu Kumhar) உருவாக்கிய மாய உலகமா?

மற்றொரு நாட்டுப்புறக் கதையின்படி, கல்லுக்கரன் என்ற புகழ்பெற்ற சிற்பி, சிவபெருமானையும் பார்வதி தேவியையும் கயிலாயத்திற்குப் பின்தொடர்ந்து வர விரும்பினான். அதற்குச் சிவன், "ஒரே இரவுக்குள் ஒரு கோடி தெய்வங்களின் உருவங்களைச் செதுக்கி முடித்தால் உன்னை அழைத்துச் செல்கிறேன்" என்று நிபந்தனை விதித்தார். விடிய விடிய தீவிரமாகப் பணியாற்றிய அந்தச் சிற்பியால் சூரிய உதயத்திற்குள் 99,99,999 சிலைகளை மட்டுமே செதுக்க முடிந்தது. ஒரு சிலை குறைந்ததால் அவன் கயிலாயம் செல்லும் பாக்கியத்தை இழந்தான் என்றும், அந்தச் சிலைகளே இங்கு பாறைகளாக நிற்கின்றன என்றும் கூறப்படுகிறது.

46
பிரம்மாண்டமான 'உனகோடீஸ்வர கால பைரவர்' சிலை
Image Credit : Instagram

பிரம்மாண்டமான 'உனகோடீஸ்வர கால பைரவர்' சிலை

இங்குள்ள பாறைச் சிற்பங்களிலேயே மிகவும் புகழ்பெற்றது 'உனகோடீஸ்வர கால பைரவர்' என்று அழைக்கப்படும் சிவபெருமானின் பிரம்மாண்டமான தலையுருவம் ஆகும். சுமார் 30 அடி உயரத்திற்குப் பாறையிலேயே செதுக்கப்பட்டுள்ள இந்தச் சிலையின் தலை அலங்காரம் மட்டும் 10 அடி உயரத்தைக் கொண்டது. இதன் இருபுறமும் இரண்டு பெண் தெய்வங்களின் உருவங்களும், அருகில் பிரம்மாண்டமான துர்க்கா தேவியின் உருவமும் செதுக்கப்பட்டுள்ளன.

56
பாறை இடுக்குகளில் பொங்கி வழியும் நீர்வீழ்ச்சி
Image Credit : Instagram

பாறை இடுக்குகளில் பொங்கி வழியும் நீர்வீழ்ச்சி

மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள இந்த சிற்பக் கூடத்தில், இயற்கையாக உருவாகும் ஒரு நீர்வீழ்ச்சி சிலைகளின் மீதே விழுந்து செல்வது காண்போரைக் பரவசப்படுத்துகிறது. இந்த நீர்வீழ்ச்சியில் குளித்து, உனகோடீஸ்வரரை வழிபடுவது புனிதமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் இங்கு நடைபெறும் 'அசோகாஷ்டமி மேளா' திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

66
யுனெஸ்கோ அங்கீகாரமும் பாதுகாப்பும் :
Image Credit : Instagram

யுனெஸ்கோ அங்கீகாரமும் பாதுகாப்பும் :

வடகிழக்கு இந்தியாவின் 'கஜுராஹோ' என்று அழைக்கப்படும் உனகோடி, உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட வேண்டிய இடங்களில் ஒன்றாக யுனெஸ்கோவால் (UNESCO) தற்காலிகப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. தரைமட்டத்திலிருந்து பல நூறு படிகள் இறங்கிச் சென்று காண வேண்டிய இந்த அற்புத கலைக்கூடம், தொல்லியல் துறையினரால் தற்போது தீவிரமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

மனிதக் கரங்களால் செதுக்கப்பட்ட கலைப்படைப்பா அல்லது இறைவனின் திருவிளையாடலா என்ற விடை தெரியாத கேள்வியுடன், இன்றும் அடர்ந்த காடுகளுக்குள் மௌனமாக வீற்றிருக்கிறது உனகோடி.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
ஆன்மீகம்
பயணம்
சுற்றுலா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kungumam : சுமங்கலிப் பெண்கள் உச்சி வகிடில் குங்குமம் வைப்பது ஏன் தெரியுமா?
Recommended image2
Janmashtami 2026: கோடிகளை தரும் கிருஷ்ண ஜெயந்தி விரதம்.! விரதம் இருந்தால் என்ன கொடுப்பார் கிருஷ்ண பகவான்?!
Recommended image3
Durga Puja: துர்கா பூஜை பந்தல்களில் அசைவ உணவா? VHP என்ன சொல்கிறது!
Related Stories
Recommended image1
TOUR: பூமியின் சொர்க்கத்திற்கு ஒரு விசிட்.! காஷ்மீர் பயணம் பற்றி சுற்றுலாப் பயணிகள் சொல்வது என்ன?
Recommended image2
Tour: இயற்கை அன்னை செதுக்கிய அதிசயம்.! கண்டிப்பா மிஸ் பண்ணக்கூடாத திற்பரப்பு அருவி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved