MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • தமிழ் புத்தாண்டு 2023 : நாளை சுக்கிர ஹோரையில் இந்த பொருட்களை வாங்கி பூஜை செய்தால் வற்றாத செல்வம் கிடைக்கும்!

தமிழ் புத்தாண்டு 2023 : நாளை சுக்கிர ஹோரையில் இந்த பொருட்களை வாங்கி பூஜை செய்தால் வற்றாத செல்வம் கிடைக்கும்!

Tamil New Year 2023: புத்தாண்டு தினமான நாளை சுக்கிர ஹோரையில் வாங்கி பூஜை செய்ய வேண்டிய பொருட்கள் என்னென்ன என்பதை இந்த பதவில் காணலாம்

2 Min read
Dinesh TG
Published : Apr 13 2023, 11:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ் புத்தாண்டு 2023: நாளை வெள்ளிக்கிழமை திருவோணம் நட்சத்திரத்தில் தமிழ் வருடமான சோபகிருது பிறக்கிறது. ஒவ்வொரு மாத பிறப்பிலும் ஒவ்வொரு பொருளை வீட்டில் வாங்கி வைப்பதன் மூலம் அந்த பொருள் பெருகிக் கொண்டே வரும் என்பது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள உண்மை . அந்த விஷயம் தமிழ் புத்தாண்டிற்கு மிகவும் பொருந்தும்.

அதிலும் குறிப்பாக தமிழ் புத்தாண்டின் போது வாங்கி வைக்கும் பொருட்கள், அந்த வருடம் முழுதும் பெருகிக் கொண்டே செல்லும் . அதோடு இந்த வருடம் வெள்ளிக்கிழமையில் பிறக்கிறது என்பது கூடுதல் சிறப்பு .

நாளை வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையான காலை 6 மணி முதல் 7 மணிக்குள் , மதியம் 1 மணி முதல் 2 மணி வரை , இரவு 8 மணி முதல் 9 மணி வரையிலான நேரங்கள் சுக்கிர ஹோரையில் வருபவை ஆகும். ஆக நாளை காலை முதல் ஹோரையில்( 6 மணி முதல் 7 மணி வரை )  இந்த பொருட்களை வாங்கி வீட்டில் பூஜை செய்தால் இந்த வருடம் முழுதும் வற்றாத செல்வம் கிடைக்கும் . 

புத்தாண்டு தினமான நாளை சுக்கிர ஹோரையில் வாங்க வேண்டிய பொருட்கள் என்னென்ன என்பதை இந்த பதவில் காணலாம்.

25

பால்:

பால் அல்லது பால் சார்ந்த பொருட்களான நெய், வெண்ணை, தயிர் போன்ற பொருட்கள் ஆகும். பால் என்னும் போது பசும்பால் மிகவும் சிறப்பாகும். பாலினை காய்சசிக் கொள்ள வேண்டும்.பால் அல்லது பால் சார்ந்த ஏதேனும் ஒரு பொருளை இந்த சுக்கிர ஹோரை நேரத்தில் வாங்கி வீட்டில் பூஜை செய்யும் போது தெய்வத்திற்கு நெய்வேத்தியமாக செய்து படைக்க வேண்டும்.

35

கல் உப்பு:


கல் உப்பு என்பது மஹாலக்ஷ்மியின் அம்சம் என்று நாம் அனைவரும் அறிந்ததே. இந்த கல் உப்பு பணவரவை ஏற்படுத்துவதோடு அல்லாமல் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை விரட்டும் தன்மை கொண்டது. அப்படியான கல் உப்பை நாளைய தினமான வெள்ளிக்கிழமை புத்தாண்டு தினத்தன்று சுக்கிர ஹோரையில்( காலை 6 மணி முதல் 7 மணி வரை) வாங்கி வந்து வீட்டில் பூஜை செய்யும் போது இதனை வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பான ஒன்றாகும்.

45

ஊறுகாய்:

பொதுவாக ஊறுகாயினை வெள்ளிக்கிழமைகளில் வாங்குவது மிகவும் சிறப்பாகும். அதிலும் நாளைய தினமான புத்தாண்டில் வாங்கி வைப்பது மிகவும் சிறப்பானது . ஊறுகாயும் மஹாலக்ஷ்மி அம்சம் கொண்ட ஒரு பொருள் ஆகும். ஊறுகாயின் வாசம் மஹாலக்ஷ்மியில் நிறைந்து இருக்கும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.

55

கண்ணாடி:

அஷ்ட மங்களப் பொருட்களில் ஒன்றான கண்ணாடியை வாங்குவது மிகவும் சிறப்பாகும். கண்ணாடியும் மஹாலக்ஷ்மியின் அம்சம் நிறைந்த பொருள் என்பதால் அதனை நாளைய தினமான புத்தாண்டு அன்று வாங்கி வீட்டில் பூஜை செய்வதால் இந்த வருடம் முழுதும் செல்வ செழிப்புடன் வாழலாம்.

இந்த தமிழ் புத்தாண்டில் மேற்கூறிய பொருட்களை சுக்கிர ஹோரையில் வாங்கி வந்து வீட்டில் வைத்து பூஜை செய்து இந்த வருடம் முழுதும் செல்வ செழிப்போடு வாழுங்கள்.

வீட்டு நிலை வாசல்/பூஜை அறையில் இத செஞ்சு பாருங்க! வாஸ்து,தொழில், பணப் பிரச்சனைகள் எல்லாம் க்ளீயர் ஆயிடும்!

About the Author

DT
Dinesh TG
தமிழ்ப் புத்தாண்டு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved