MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • மார்ச் மாதம் வந்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பொற்காலம்.. பண மழையில் நனைவார்கள்!!

மார்ச் மாதம் வந்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பொற்காலம்.. பண மழையில் நனைவார்கள்!!

மார்ச் மாதம் சனி பகவான் சதய நட்சத்திரத்தில் (Satabhisha Nakshatra) நுழைகிறார். இதனால் 3 ராசிக்காரர்களுக்கு பணமும் முன்னேற்றமும் உண்டாகும். 

2 Min read
maria pani
Published : Feb 27 2023, 04:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சனி முன்னதாக கும்பத்தில் நுழைந்து அஸ்தானமாக இருந்தது. இப்போது சனியின் ஸ்தானம் உயரப் போகிறது. உதயமாகும் சனி நன்மையை வாரி வழங்க போகிறார். அவர் தனது சொந்த சதய நட்சத்திரத்தில் நுழைகிறார். மார்ச் 14 அன்று கர்மா மற்றும் நீதி வழங்கவிருக்கும் சனி பகவான் சதய நட்சத்திரத்தில் நுழைகிறார். இது ராகுவால் ஆளப்படுகிறது. 

25

ஜோதிடத்தின் படி, ராகுவும் சனியும் நட்பாளர்கள். இந்த மாற்றத்தின் பலன் எல்லா ராசிக்காரர்களுக்கும் நிச்சயம் தெரியும். பெரும்பாலோர் இதனால் பயன்பெற்றாலும், 3 ராசிக்காரர்களுக்கு சனியின் மாற்றம் திடீர் பண லாபத்தையும் முன்னேற்றத்தையும் அள்ளித் தரும். இந்த ராசிகள் என்னவென்று பார்ப்போம். 

35

ரிஷபம் 

சதய நட்சத்திரத்தில் சனியின் பிரவேசம் உங்களுக்கு வரப்பிரசாதம் என்றால் மிகையல்ல. சனி உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தில் அமர்ந்திருப்பதால் ஷஷா, மத்திய திரிகோண ராஜயோகம் உருவாகிறது. அதனால் வேலையில் இருப்பவர்களுக்கு இந்த நேரத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். வேலையில்லாத நபர்களுக்கு புதிய வேலையும் கிடைக்கும். அரசியல், பொறியியல், மருத்துவம் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்களுக்கு நல்லது நடக்கும். அதோடு தாயின் உடல்நிலை மேம்படும். கூட்டுத் தொழிலில் நன்மைகள் கிடைக்கும். மனைவியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் வரும். உங்களுடைய விற்க வேண்டிய சொத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களும் லாபம் ஈட்டித் தரும். 

45

சிம்மம் 

வரப்போகும் சனி பகவானின் ராசி மாற்றம் உங்களுக்கு நல்ல பலனைத் தரும். ஜாதகத்தில் ஏழாவது வீட்டில் சனி சஞ்சரிப்பதால், இந்த நேரத்தில் நீங்கள் கடனில் இருந்து விடுபடலாம். உங்களுக்கு பணியில் இடமாற்றம் கூட கிடைக்கலாம். கூட்டு வேலையில் ஆதாயம் இருக்கலாம். தொழில்முனைவோர் நல்ல லாபம் பெற முடியும். வேலையில்லாதவர்கள் நல்ல வேலையில் சேரலாம். தாயின் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கும். உங்கள் நம்பிக்கையும் அதிகரிக்கும். மனைவியுடன் நெருக்கமும், இணக்கமும் ஏற்படும். மனைவி மூலம் பண வரவு உண்டு. உங்களுக்கு வெளிநாட்டுப் பயணத்திற்கான வாய்ப்புகளும் உருவாகும். 

இதையும் படிங்க: குண்டுமணி தங்கம் கூட இல்லாம வருத்தமா.. இந்த ஒரு காரியத்தை மட்டும் செய்தால்..கணக்கு தெரியாத அளவிற்கு நகை சேரும்

55

மகரம் 

உங்கள் ராசியின் இரண்டாம் வீட்டில் சனி சஞ்சரிக்கிறார். உங்கள் லக்னத்தின் அதிபதியும் சனிதான். ஆகவே இந்த நேரத்தில் உங்கள் மனைவியுடனான உறவு சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். அதாவது காதல் திருமணத்திற்கு நடுவில் பிரச்சனை செய்த குடும்பம் இப்போது சம்மதிக்கலாம். திடீர் பண ஆதாயம் ஏற்படும். நீங்கள் பணத்தை சேமிக்க முடியும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு வரும். இந்த நேரத்தில் உங்கள் மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி காணலாம். மூத்த சகோதரர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும். வெளிநாடுகளுக்கும் செல்லலாம். பார்ட்னர்ஷிப் அமோகமாக இருக்கும்.  

இதையும் படிங்க: வாஸ்துபடி வீட்டுல வன்னி மரம் வெச்சா என்ன அதிசயம் நடக்கும் தெரியுமா? யாருக்கும் சொல்லாதீங்க..!

About the Author

MP
maria pani
ஜோதிடம்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved