MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்க செய்ய வேண்டிய பாரிகாரம் இதுதான்.! போக வேண்டிய ஆலயத்தையும் தெரிஞ்சுக்கோங்க!

படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்க செய்ய வேண்டிய பாரிகாரம் இதுதான்.! போக வேண்டிய ஆலயத்தையும் தெரிஞ்சுக்கோங்க!

திறமையிருந்தும் வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படுபவர்களுக்கு, ஜோதிட ரீதியான காரணங்களும் ஆன்மிக பரிகாரங்களும் தீர்வாக அமைகின்றன. கல்வி தானம் செய்வது, ஏழை மாணவர்களுக்கு உதவுவது போன்றவை படிக்கும் காலத்திலேயே நல்ல வேலை கிடைக்க உதவும். 

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Dec 15 2025, 11:41 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
படிக்கும் காலத்திலேயே நல்ல வேலை கிடைக்கும்
Image Credit : Asianet News

படிக்கும் காலத்திலேயே நல்ல வேலை கிடைக்கும்

நல்ல கல்வி கற்று, அதற்கேற்ற நல்ல வேலை மற்றும் சம்பளம் கிடைக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவாகவே உள்ளது. ஆனால் சிலருக்கு படிப்பும் திறமையும் இருந்தாலும், வேலைவாய்ப்பில் தொடர்ந்து தடைகள், தாமதங்கள் ஏற்பட்டு மன உளைச்சலை சந்திக்க நேரிடுகிறது. ஜோதிட ரீதியாகப் பார்த்தால், ஒருவரின் ஜாதகத்தில் 10-ம் இடமான உத்தியோக ஸ்தானம் வலுவாக இருக்க வேண்டும். 

குறிப்பாக புதன் (அறிவு, கல்வி), சனி (உழைப்பு, நிலைத்தன்மை), சுக்கிரன் (சௌகரியம், வேலை வாய்ப்பு) மற்றும் ராகு (நவீனத் துறை, தொழில்நுட்பம்) ஆகிய நான்கு கிரகங்களும் பலமாக இருந்து, உத்தியோக ஸ்தானத்துடன் தொடர்பு கொண்டிருந்தால், படிக்கும் காலத்திலேயே நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.

27
ஆன்மிக ரீதியான பரிகாரங்கள்
Image Credit : Asianet News

ஆன்மிக ரீதியான பரிகாரங்கள்

இவ்வாறு கிரக நிலைகள் சாதகமாக இல்லாதவர்களுக்கு, ஆன்மிக ரீதியான பரிகாரங்கள் பெரும் உதவியாக அமையும். குறிப்பாக, மாணவ-மாணவிகளுக்கு புத்தகம், பேனா, நோட்டு போன்ற கல்வி உதவிகளைச் செய்வது, கல்வி தானம் அளிப்பதற்கு சமமான புண்ணியத்தை தரும். 

Related Articles

Related image1
Spiritual: வேலை கிடைக்கவில்லையா?! உங்களை சிஇஓ ஆக்கும் எளிய பரிகாரங்கள்.! வணங்க வேண்டிய தெய்வங்கள்.!
Related image2
Spiritual: இனி வாழ்க்கையில் சட்ட சிக்கலே இருக்காது! தீராத வழக்குகளையும் தீர்த்து வைக்கும் திருப்புறம்பியம் சாட்சிநாதர் ஆலயம்!
37
 தத்தெடுத்து படிக்க வைக்கலாம்
Image Credit : Asianet News

தத்தெடுத்து படிக்க வைக்கலாம்

பணவசதி உள்ளவர்கள், ஏழை மாணவர்களை தத்தெடுத்து படிக்க வைப்பதும், கல்வி தடை நீங்கச் செய்யும் மிகச் சிறந்த பரிகாரமாக கூறப்படுகிறது.

47
கல்வி மற்றும் வேலை வாய்ப்பிலும் நல்ல பலனை ஏற்படுத்தும்
Image Credit : Asianet News

கல்வி மற்றும் வேலை வாய்ப்பிலும் நல்ல பலனை ஏற்படுத்தும்

குடும்பத்தில் நல்ல மதிப்பெண் எடுத்தும் பணச்சிரமம் காரணமாக மேற்படிப்பு படிக்க முடியாமல் தவிக்கும் உறவினர்களின் பிள்ளைகளுக்கு உதவி செய்வது, தங்களின் பிள்ளைகளின் கல்வி மற்றும் வேலை வாய்ப்பிலும் நல்ல பலனை ஏற்படுத்தும்.

57
கற்ற கல்வி வாழ்நாள் முழுவதும் கைகொடுக்கும்
Image Credit : Asianet News

கற்ற கல்வி வாழ்நாள் முழுவதும் கைகொடுக்கும்

ஆன்மிக ரீதியாக, தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருவஹீந்திரபுரம் திருத்தலம் மிகவும் விசேஷமானது. இங்கு ஞானத்தின் வடிவமாக அருள்பாலிக்கும் அருள்மிகு ஹயக்ரீவர், கல்வி, ஞானம், நினைவாற்றல் ஆகியவற்றை அருளும் பரிமுகக் கடவுளாக போற்றப்படுகிறார். இத்தலத்தில் ஹயக்ரீவர் ஹோமம் செய்து, “ஹயக்ரீவாய நம:” என்ற மந்திரத்தை ஜபித்து வழிபட்டால், கற்ற கல்வி வாழ்நாள் முழுவதும் கைகொடுக்கும் என்றும், படிப்புக்கு ஏற்ற வேலை விரைவில் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது. கல்வியும் ஆன்மிகமும் இணைந்தால், முயற்சிக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்பதே இதன் சாரம்.

67
மாணவர்கள், வேலை தேடுபவர்களுக்கான பரிகாரம்
Image Credit : Asianet News

மாணவர்கள், வேலை தேடுபவர்களுக்கான பரிகாரம்

திருவஹீந்திரபுரம் ஹயக்ரீவர் வழிபாடு, குறிப்பாக மாணவர்கள் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு மிகுந்த பலன் தருவதாக கருதப்படுகிறது. புதன் கிழமை அல்லது வியாழக்கிழமை இத்தலத்திற்கு சென்று, வெண்மை மலர்கள் சாத்தி, நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு. ஹயக்ரீவர் சந்நிதியில் அகத்தியர் பிரதிஷ்டை செய்ததாகவும், சரஸ்வதி தேவி இங்கு ஹயக்ரீவருடன் இணைந்து அருள்பாலிப்பதாகவும் தல புராணம் கூறுகிறது. தேர்வு, நேர்காணல், வேலை மாற்றம் போன்ற முக்கிய தருணங்களில் இத்தலத்தில் பிரார்த்தனை செய்தால் மன தைரியம், நினைவாற்றல் மற்றும் தெளிவான முடிவுகள் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

77
முழுமையான வெற்றி கிடைக்கும்
Image Credit : Asianet News

முழுமையான வெற்றி கிடைக்கும்

படிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பது முயற்சி மட்டும் அல்ல; அதோடு நம்பிக்கையும் ஆன்மிகமும் இணைந்தால்தான் முழுமையான வெற்றி கிடைக்கும். கல்வி தானம், சேவை மனப்பான்மை மற்றும் ஹயக்ரீவர் வழிபாடு இணைந்தால், வாழ்க்கையில் நிலையான உயர்வும் நல்ல உத்தியோக வாய்ப்பும் நிச்சயம் அமையும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வேலைவாய்ப்பு
கல்வி
ஆன்மீகம்
கோவில்
கோவில் நிகழ்வுகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Margazhi: மார்கழியில் இதையெல்லாம் செய்ய தடை இல்லை.! பலன்களும் பல மடங்கு கிடைக்கும்.!
Recommended image2
கணவன் மனைவிக்கு இடையே இனி சண்டையே வராது! நெருக்கத்தை அதிகரிக்கும் ரகசிய பரிகாரம்.!
Recommended image3
Spiritual: வேலை கிடைக்கவில்லையா?! உங்களை சிஇஓ ஆக்கும் எளிய பரிகாரங்கள்.! வணங்க வேண்டிய தெய்வங்கள்.!
Related Stories
Recommended image1
Spiritual: வேலை கிடைக்கவில்லையா?! உங்களை சிஇஓ ஆக்கும் எளிய பரிகாரங்கள்.! வணங்க வேண்டிய தெய்வங்கள்.!
Recommended image2
Spiritual: இனி வாழ்க்கையில் சட்ட சிக்கலே இருக்காது! தீராத வழக்குகளையும் தீர்த்து வைக்கும் திருப்புறம்பியம் சாட்சிநாதர் ஆலயம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved