Perumal Mantras: புரட்டாசி சனிக்கிழமை சொல்ல வேண்டிய பெருமாள் மந்திரங்கள்
Perumal Mantras: புரட்டாசி மாத சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் பெருமாளை வழிபட்டு சொல்ல வேண்டிய மந்திரங்கள் என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

புரட்டாசி சனிக்கிழமைகள்
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதமாக பக்தர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமைகளில் விஷ்ணு, வெங்கடேசப் பெருமாள் வழிபாடு செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் வீட்டைச் சுத்தம் செய்து, விளக்கேற்றி, பெருமாளுக்கு துளசி, பூக்கள் போன்றவற்றை சமர்ப்பித்து, மனதை ஒருமுகப்படுத்தி மந்திரங்களைச் சொல்லலாம்.
புரட்டாசி சனிக்கிழமை சொல்ல வேண்டிய பெருமாள் மந்திரங்கள்
பெருமாள் காயத்ரி மந்திரம்
”ஓம் நாராயணாய வித்மஹே
வாஸுதேவாய தீமஹி
தன்னோ விஷ்ணுஃ ப்ரசோதயாத்”
இந்த மந்திரம் நாராயணர் மற்றும் விஷ்ணுவை தியானித்து சொல்லப்படும் காயத்ரி மந்திரமாகும். பெருமாள் வழிபாட்டின்போது இதை பக்தியுடன் சொல்லலாம்.
விஷ்ணு தியான மந்திரம்
”சாந்தாகாரம் புஜகசயனம்
பத்மநாபம் சுரேசம்
விஸ்வாதாரம் ககனசத்ருசம்
மேகவர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மிகாந்தம் கமலநயனம்
யோகிபிர் த்யானகம்யம்
வந்தே விஷ்ணும் பவபயஹரம்
ஸர்வலோகைகநாதம்”
இந்த ஸ்லோகம் விஷ்ணுவின் திருவுருவத்தை மனதில் நினைத்து தியானிப்பதற்காகப் பாரம்பரியமாகப் பாடப்படுகிறது. பெருமாள் வழிபாட்டைத் தொடங்கும்போது இதைச் சொல்லலாம்.
ஓம் நமோ நாராயணாய
விஷ்ணு நாம மந்திரம்
”ஸ்ரீமன் நாராயணா, நாராயணா, நாராயணா”
எளிமையான முறையில் பெருமாளை வழிபட விரும்புபவர்கள் அவரது திருநாமத்தை மீண்டும் மீண்டும் சொல்லலாம்.
ஸ்ரீ வெங்கடேச மந்திரம்
ஓம் ஸ்ரீ வெங்கடேசாய நமஹ..திருமலையில் அருள்பாலிக்கும் வெங்கடேஸ்வரர் பெருமாளை நினைத்து சொல்லப்படும் எளிய மந்திரம் இது.ம்குறிப்பாக புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாள் படத்தின் முன் விளக்கேற்றி இந்த மந்திரத்தை தொடர்ந்து சொல்லலாம்.
ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்பது கிருஷ்ணர் மற்றும் விஷ்ணுவை நினைத்து சொல்லப்படும் முக்கியமான மந்திரமாகக் கருதப்படுகிறது. பகவானின் திருநாமத்தை நினைத்து மனதை ஒருமுகப்படுத்துவதற்காக இதை சொல்லலாம்.
எளிய பொருள்: வாசுதேவனாகிய பகவானுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன் என்பதாகும்.
ஓம் நமோ நாராயணாய
ஓம் நமோ நாராயணாய என்பது பெருமாளின் மிகவும் பிரபலமான மந்திரங்களில் ஒன்றாகும். இதை அஷ்டாக்ஷர மந்திரம் என்றும் அழைக்கின்றனர். புரட்டாசி சனிக்கிழமையில் காலையிலோ அல்லது மாலை நேரத்திலோ அமைதியான இடத்தில் அமர்ந்து இந்த மந்திரத்தை ஜபிக்கலாம்.
எளிய பொருள்: நாராயணப் பெருமானை வணங்குகிறேன் என்பதாகும்.
மந்திரத்தை எத்தனை முறை சொல்லலாம்?
ஓம் நமோ நாராயணாய – 108 முறை
ஓம் நமோ பகவதே வாசுதேவாய – 108 முறை
ஓம் ஸ்ரீ வெங்கடேசாய நமஹ – 108 முறை
அவரவர் வழக்கத்திற்கு ஏற்ப மந்திரத்தை சொல்லலாம். எண்ணிக்கை கட்டாயம் அல்ல. மன ஒருமைப்பாடு மற்றும் பக்தியுடன் வழிபடுவதே முக்கியம்.
குறிப்பு: மந்திரங்களின் ஆன்மிகப் பலன்கள் குறித்த நம்பிக்கைகள் சமய மரபுகளைச் சார்ந்தவை. அவற்றை மருத்துவ அல்லது அறிவியல் சிகிச்சைக்கு மாற்றாகக் கருதக்கூடாது.

