MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • இன்று சோமவார பிரதோஷம்... சிவனுடைய இந்த 1 நாமம் சொன்னால் போதும்!! எந்த சோதனையும் தகரும்!!

இன்று சோமவார பிரதோஷம்... சிவனுடைய இந்த 1 நாமம் சொன்னால் போதும்!! எந்த சோதனையும் தகரும்!!

சோமவார பிரதோஷத்தின் சிறப்புகளையும், நன்மைகளையும் தெரிந்து கொண்டு பலன் பெறுங்கள். 

2 Min read
maria pani
Published : Apr 17 2023, 12:06 PM IST| Updated : Apr 17 2023, 12:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

பிரதோஷ காலம் என்பது சிவனை வழிபடுவதற்கு ஏற்ற காலம். எல்லாவித தோஷங்களையும் நீக்கி, நமக்கு ஆசிர்வாதமான வாழ்க்கையும், முக்தியையும் அளிக்கக் கூடியது பிரதோஷ விரதம். பிரதோஷ தினங்களை பொறுத்தவரை, திங்கள் அன்று வரும் சோமவார பிரதோஷமும், சனி அன்று வரும் மகா சனிப்பிரதோஷமும் ரொம்ப சிறப்பு வாய்ந்தது. 

25

பிரதோஷ வழிபாடு 

சோமவார பிரதோஷ திங்கட்கிழமை அன்று அய்யன் சிவனை வழிபடும்போது, நந்தி தேவருக்கும் அருகம்புல் சாற்றி வழிபாடு செய்ய வேண்டும். சிவனுக்கு மல்லிகை, வில்வம், மரிக்கொழுந்து ஆகிய மலர்களால் பூஜை செய்து வழிபடலாம். பச்சரிசி, பாசிப்பயறு போன்றவை நன்கு ஊறவைத்து அத்துடன் வெல்லம் கலந்து கொள்ளுங்கள். இதனுடன் காப்பரிசி கொஞ்சன் கலந்து நந்திக்கு படைத்து வணங்க வேண்டும். சிவனுக்கு சர்க்கரை பொங்கல், பாயசம், பாகனம் ஆகியவை வைத்து வழிபடலாம். இன்றைய தினம் சிவனை விரதமிருந்து வழிபட்டால், எந்த சோதனையாக இருந்தாலும் தகர்ந்துவிடும். விரதம் இருக்க முடியாதவர்கள் முழுநம்பிக்கையுடன் "ஓம் நம சிவாய" மந்திரத்தை சொன்னால் நினைத்த காரியம் கைகூடும். கெட்ட வினைகள் விலகி நல்ல விஷயங்கள் நடக்க இன்று சிவனை வணங்குங்கள். 

இந்தாண்டு ஏப்ரலில் சோமவார பிரதோஷம் 17ஆம் தேதியாகும். இது தேய்பிறை சோமவார பிரதோஷம். இன்று மாலை 03.15 மணிக்கு தொடங்கி, ஏப்ரல் 18ஆம் தேதி பகல் 01.20 மணி வரைக்கும் திரியோதசி திதி இருக்கிறது. 

35

பிரதோஷம் அன்று விரதமிருந்து வழிபட்டால் மிகவும் சிறப்புவாய்ந்ததாக கருதப்படுகிறது. அப்படி விரதம் கடைபிடிக்க முடியாதவர்கள் பால், பழம் ஆகியவற்றை உண்டு விரதம் இருக்கலாம். பிரதோஷ விரதம் நம்முடைய எல்லா பிரச்சனைகளையும் சுமூகமாக தீர்த்து வைக்கும் என்பது ஐதீகம். 

45

பிரதோஷம் அன்று சொல்ல வேண்டிய மந்திரம்!! 

பிரதோஷ தினத்தில் "ஓம் நம சிவாய" என்னும் 5 எழுத்து மந்திரத்தையும், மகாமிருத்யுஞ்சய மந்திரமும் கணக்கின்றி உச்சரியுங்கள். உங்களால் எவ்வளவு முறை சொல்ல முடியுமோ அத்தனை முறையும் உச்சரித்தால் நல்லதே நடக்கும்.  

இதையும் படிங்க: அட்சய திருதியை நாளில் மறந்தும் செய்யக்கூடாத தவறுகள்! மீறினால் லட்சுமியின் கோவம்! வீட்டில் வறுமை உண்டாகும்!!

55

பிரதோஷ பூஜையில் நேரடியாக பங்கேற்கமுடியாமல் இருப்பவர்கள், அன்றைய தினம் சிவனுக்கு நடைபெறும் 16 வகை அபிஷேகங்களுக்கு பால், தயிர், தேன், இளநீர், பன்னீர், சந்தனம் ஆகிய அபிஷேக பொருள்களை வாங்கி கொடுக்கலாம். அப்படி வாங்கி கொடுப்பவர்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கிருந்தே சிவனை மனதார நினைத்து, சிவ நாமத்தை பிரார்த்தனை செய்யுங்கள். அவருடைய நாமம் சொல்வதால், பிரதோஷ விரதம் கடைபிடித்தப் பலனை பெற முடியும் என்பது நம்பிக்கை. 

இதையும் படிங்க: வற்றாத பணவரவை பெற! வீட்டு ஹாலில் இந்த 1 விஷயம் பண்ணுங்க! வாஸ்து தோஷங்கள் விலகி பணம் பெருகும்!!

About the Author

MP
maria pani
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved