MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • அட்சய திருதியை நாளில் மறந்தும் செய்யக்கூடாத தவறுகள்! மீறினால் லட்சுமியின் கோவம்! வீட்டில் வறுமை உண்டாகும்!!

அட்சய திருதியை நாளில் மறந்தும் செய்யக்கூடாத தவறுகள்! மீறினால் லட்சுமியின் கோவம்! வீட்டில் வறுமை உண்டாகும்!!

Akshaya Tritiya 2023: அட்சய திருதியை அன்று இந்த தவறுகளை செய்தால் உங்களுடைய பொருளாதாரம் சரிவை சந்திக்கும். 

2 Min read
Author : maria pani
Published : Apr 15 2023, 04:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இந்து மதத்தில் அட்சய திருதியை முக்கியத்துவம் வாய்ந்தது. இந்நாளில் தங்கம் வாங்கினால் அது பலுகி பெருகும் என்பது ஐதீகம். இந்த விசேஷமான நாள், ஒவ்வொரு ஆண்டும் வைஷாக மாதம் சுக்ல பக்ஷத்தின் திருதியை அன்று கடைபிடிக்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 23ஆம் தேதி ஞாயிற்றுகிழமை வருகிறது. ஏப்ரல் 22ஆம் தேதியே காலை 09.18 மணிவாக்கில் திதி தொடங்கிவிடும். மறுநாள் காலை 09.27 மணி வரை மட்டுமே அட்சய திருதியை திதி இருக்கும். 

24

அட்சய திருதியை அன்று செல்வத்தின் தெய்வமான மகாலக்ஷ்மியையும், மகா விஷ்ணுவையும் வணங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும். ஆனாலும் அட்சய திருதியை நாளில் தவறுதலாகக் கூட சில காரியங்களை செய்யக்கூடாது. அந்த விஷயங்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள். 

அட்சய திருதியை நாளில் செய்யக்கூடாதவை!! 

மகாலட்சுமிக்கு துளசி இலைகளை சமர்ப்பிக்கக்கூடாது என்பது ஐதீகம். இதனால் லட்சுமிக்கு கோபம் வரும் என சொல்லப்படுகிறது. 

அட்சய திருதியை நாளில் யாரையும் அவமரியாதை செய்யக்கூடாது. உங்கள் எண்ணங்களும், நடத்தையும் யார் மரியாதைக்கும் பாதிப்பு உண்டாக்கக் கூடாது. யார் மனதையாவது புண்படுத்தினால் மகாலட்சுமிக்கு நம் மீது கோபம் வரும்.

34

அட்சய திருதியை நாளில் செய்யக்கூடாதவை!!

 

மகாலட்சுமி, விஷ்ணு இருவரையும் மனங்குளிர செய்ய அட்சய திருதியை நாளில் இறைச்சி, மது, பூண்டு, வெங்காயம் ஆகிய உணவுகளை உண்ண வேண்டாம். அட்சய திருதியை நாளில் இவற்றை சாப்பிட்டால் பண இழப்பு ஏற்படும். 

இதையும் படிங்க: வீட்டில் வலம்புரி சங்கு வைத்து இப்படி வழிபட்டால், நீங்க கடவுளிடம் கேட்கும் வரம் எல்லாம் இரட்டிப்பா கிடைக்கும்!

அட்சய திருதியை நாளில் திருட்டு, மோசமான நடத்தை, சூதாட்டம், பொய் பேசுதல் ஆகிய செயல்களைச் செய்யக்கூடாது. இது நீங்கள் சம்பாதித்த பணத்தை அழிக்கிறது. இந்த நாளில் செய்த பாவங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் இருக்கும். 

44

அட்சய திருதியை நாளில் செய்யக்கூடாதவை!!

 

அட்சய திருதியை நாளில், பூஜையறை, வீடு, லாக்கர், ஈசானி மூலை, கதவுகள், ஜன்னல்களை சுத்தம் செய்ய வேண்டும். அவற்றை அழுக்காக வைக்காதீர்கள். மகாலட்சுமி அழுக்கான இடங்களில் வாசம் செய்வதில்லை. 

அட்சய திருதியை நாளில் யாருக்கும் கடன் கொடுக்க கூடாது என ஜோதிடர்கள் கூறுகின்றனர். அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கும் வழக்கம் இருக்கிறது. இந்த நாளில் தங்கம் வாங்கலாமே தவிர, பாத்திரங்களை வாங்கக் கூடாது. பிளாஸ்டிக், ஸ்டீல் பாத்திரங்கள் ராகுவால் பாதிக்கப்படுவதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். இவற்றை வாங்கினால் வீட்டில் வறுமை உண்டாகும். 

இதையும் படிங்க: அட்சய திருதியை நாளில் இந்த 1 காரியம் மறக்காம செய்யுங்க! அள்ள அள்ள குறையாமல்... வீட்டில் செல்வம் பெருகுமே!!!

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nagamani : பாம்பின் தலையில் இருந்து விழுந்த கல்.! நாகமணியாக வழிபடும் மக்கள்.! உண்மையில் நாகமணி இருக்கிறதா? உண்மை என்ன?
Recommended image2
chitra pournami girivalam சித்ரா பெளர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்வதன் ஆன்மீக, அறிவியல் ரகசியங்கள்
Recommended image3
velankanni church ஈஸ்டருக்குப் பின் கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணி செல்வதன் ஆன்மீக ரகசியம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved