MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Panguni Uthiram | பங்குனி உத்திரம் இன்று மாலைக்குள் இதனை வைத்து பூஜை : கேட்டவையும், இழந்தவையும் நடக்கும்!

Panguni Uthiram | பங்குனி உத்திரம் இன்று மாலைக்குள் இதனை வைத்து பூஜை : கேட்டவையும், இழந்தவையும் நடக்கும்!

இன்றைய சக்தி வாய்ந்த நாளில் முருகனின் வாகனமான மயில் வைத்து (மயிலிறகை) வைத்து வீட்டில் பூஜை செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதனை இந்த பதிவில் காணலாம்.

2 Min read
Web Team
Published : Apr 05 2023, 09:09 AM IST| Updated : Apr 05 2023, 02:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

முருகப்பெருமானின் உகந்த நாளான இன்று பங்குனி உத்திரம் அனுசரித்து உலகம் முழுதும் இருக்கின்ற முருகன் கோவில்களில் சிறப்பு மற்றும் விஷேச பூஜைகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நாளில் விரதம் இருந்து ,பூஜை செய்பவர்கள் அனைவருக்கும் அவர்கள் விரும்பிய படி வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.

இன்றைய சக்தி வாய்ந்த நாளில் முருகனின் வாகனமான மயில் வைத்து (மயிலிறகை) வைத்து வீட்டில் பூஜை செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதனை இந்த பதிவில் காணலாம்.

வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை என்பதற்கேற்ப முருகனின் வாகனமான மயிலிறகை வைத்து வீட்டில் வைத்து பூஜை செய்தால் நாம் கேட்ட, விரும்பிய, நினைத்த அனைத்து காரியங்களும் விரைவில் தடையில்லாமல் நிறைவேறும்.

வெறும் 10 ரூபாய் செலவு செய்தால் போதும். இந்த மயிலிறகு கிடைத்து விடும். இதனை பல கோவில் சன்னதிகளில் விற்பதை நாம் பார்த்து இருப்போம்

23

இந்த மயிலிறகை வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்து நமது வீட்டின் பூஜை அறையில் முருகன் படத்திற்கு அருகில் வைத்து விட வேண்டும். 

முருகனுக்கு பிடித்த சிவப்பு நிறத் துணியை ஒரு கர்சீஃப் அளவில் எடுத்துக் கொண்டு அல்லது கையளவு எடுத்துக் கொண்டால் கூட போதும். அதனை முருகன் பெருமான் திருவுருவ படத்திற்கு கீழ் வைத்து விட்டுஅந்த துணியின் மேல் மயிலிறகையும் வைத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பிறகு முருகனுக்கு பிடித்த அப்பத்தை வீட்டில் செய்து நெய்வேத்தியமாக படைத்து விடுங்கள். அப்பம் செய்ய தெரியாதவர்கள் சிவப்பு நிற பழங்களான ஆப்பிள், மாதுளை போன்றவைகளையும் முருகனின் திருவுருவ படத்திற்கு கீழ் வைத்து விடுங்கள்.

33

இப்போது உங்களுக்கு தெரிந்த முருகன் மந்திரங்கள் கூறி வழிபடுங்கள். அல்லது ஓம் சரவண பவ என்ற ஆறெழுத்து மந்திரத்தை உங்களால் முடிந்த அளவில் சொல்லிகே கொண்டே இருங்கள். இப்போது எப்போதும் போல் பூஜை அறையில் விளக்கேற்றி,தீப ,தூபங்கள் காட்டி முருகனை வழிபடுங்கள்.

இப்படி பூஜை செய்வதால் குடும்பத்தில் சுபீட்சம் உண்டாகும், சுப காரியங்கள் ஏற்படும், இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமணத் தடை இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடும், குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், ஏதேனும் ஒரு வகையில் வீட்டில் சுபகாரியம் நிச்சயம் உண்டாகும்.

தவிர உங்களுக்கு தேவையான வரங்களையும்,வேண்டுதல்களையும் முருகப்பெருமானிடம் மனம் உருகி வேண்டி பிரார்த்தனை செய்யுங்கள். இதனை நம்பிக்கையோடு செய்து பாருங்கள். நீங்கள் கேட்ட,விருப்பமான அனைத்தும் விரைவில் நிறைவேறும்.

பங்குனி உத்திரம் நெய்வேத்தியம்-கந்தருக்கு பிடித்த கந்தரப்பத்தை படைத்து முருகனின் அருளாசி பெறுங்கள்!

About the Author

WT
Web Team
ஆசியாநெட் நியூஸ் தமிழ் வெப் குழு – சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை எழுத்து மூலம் வழங்கும் அணி.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved