MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Lunar Eclipse 2022: அடுத்த மாதம் சந்திர கிரகணம்..இரண்டு கிரகணம் 15 நாட்களில்..இதனால் நன்மையா..? தீமையா..?

Lunar Eclipse 2022: அடுத்த மாதம் சந்திர கிரகணம்..இரண்டு கிரகணம் 15 நாட்களில்..இதனால் நன்மையா..? தீமையா..?

Lunar eclipse 2022: இந்த வருடம் 2022 ஆம் ஆண்டின் அக்டோபர் 25ல், சூரிய கிரகணம் முடிவடைந்த நிலையில், வரும் நவம்பர் 8 ம் தேதி முழு சந்திர கிரகணம் நடைபெறுகிறது. 

2 Min read
Anija Kannan
Published : Oct 27 2022, 02:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

இந்த வருடம் 2022 ஆம் ஆண்டின் அக்டோபர் 25ல், சூரிய கிரகணம் முடிவடைந்த நிலையில், வரும் நவம்பர் 8 ம் தேதி முழு சந்திர கிரகணம் நடைபெறுகிறது. 15 நாட்களில் இரண்டு கிரகணம் வருவது என்ன விளைவை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது பூமியில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்றும், இயற்கை பேரழிவு மற்றும் காலநிலை மாற்றத்தை உண்டு பண்ணும் என்றும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.


 

26

ஆனால், இதுவரை அறிவியல் பூர்வமாக எதுவும் நிரூபிக்கப்படவில்லை. அதேபோன்று, மீண்டும் ஒருமுறை வரும் அக்டோபர் மாதம் 28ஆம் தேதி 2023ஆம் ஆண்டு தான் சந்திர கிரகணத்தை காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்த அரிய நிகழ்வின் போது பூமியின் நிழலால் நிலவு மூடப்பட்டிருக்கும். சந்திர கிரகணம் என்பது அறிவியல் முதல் ஆன்மீகம் வரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும்.
 

36

ஜோதிடத்தின் படி, சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகிய இரண்டுமே அசுபமானவைகளாக கருதப்படுகின்றன. சூரிய கிரகணம் அமாவாசையிலும், சந்திர கிரகணம் பௌர்ணமியிலும் ஏற்படும். அதன்படி, சந்திர கிரகணம்,  நவம்பர் 8 ம் தேதி இந்திய நேரப்படி 2.39 மணிக்கு தொடங்கி 6.19 மணிக்கு முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

46

சென்னையில் 5.38 மணிக்கு தான் உதயமாகும் எனவும் கூறப்பட்டுள்ளது. சந்திரகிரகணத்தை பொதுமக்கள் காண தொலைநோக்கி போன்ற கருவிகளோ, கண்களை காத்து கொள்ள தனிப்பட்ட கவனமோ தேவையில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

56

கர்ப்பிணிகள் செய்யக்கூடாதவை, செய்யக்கூடியவை 

சூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ எதுவாக இருந்தாலும் அப்போது வெளிப்படும் கதிர்வீச்சுகள் அவர்களைப் பாதித்துவிடக் கூடாது என்பதால், அந்த நேரங்களில், கர்ப்பிணிகள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது வெளியே நடமாடக் கூடாது என்று சொல்கிறார்கள்.

கிரகணம் முழுவதும் முடிந்த பிறகு வீட்டை சுத்தம் செய்யுங்கள். பிறகு குளித்து விட்டு ஆலய தரிசனம் மேற்கொள்ள வேண்டும். கிரகணம் முடிந்த பிறகு, ஏழைகளுக்கு உணவு வழங்குவதன் மூலம் கிடைக்கும் பலன்கள் பன்மடங்காகும். 
 

 மேலும் படிக்க...திருணத்திற்கு பிறகு பெண்கள் செய்யக்கூடாத முக்கிய இரண்டு தவறுகள்..இதனால், உண்டாகும் பாதிப்பு என்ன தெரியுமா..?

66

மேலும், கிரகணம் முடியும் வரை உணவு சாப்பிடாமல் தண்ணீர் குடிக்காமல், வீட்டில் சமையல் செய்யாமலும் இருக்க வேண்டும்.

கிரகணத்தின்போது கர்ப்பிணிகள் நகம் வெட்டக்கூடாது, காய்கறி நறுக்ககூடாது மீறிச் செய்தால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு குறைபாடுகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

 மேலும் படிக்க...திருணத்திற்கு பிறகு பெண்கள் செய்யக்கூடாத முக்கிய இரண்டு தவறுகள்..இதனால், உண்டாகும் பாதிப்பு என்ன தெரியுமா..?

About the Author

AK
Anija Kannan
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved