MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • கிருஷ்ண ஜெயந்தி நாளில் இதை செய்தால் போதும்.. செல்வம் பெருகும், பண பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்!

கிருஷ்ண ஜெயந்தி நாளில் இதை செய்தால் போதும்.. செல்வம் பெருகும், பண பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்!

வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளும் உங்கள் நிதி நிலைமையை எதிர்மறையாக பாதிக்கும்

2 Min read
Ramya s
Published : Sep 06 2023, 10:27 AM IST| Updated : Sep 06 2023, 10:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஜோதிடர்கள் ஜாதகத்தைப் பார்த்து நமது எதிர்காலத்தைக் கணிக்கிறார்கள். ஒருவர் ஜாதகத்தில் ஏற்படும் அசுப பலன்களால் வாழ்க்கையில் பல சிரமங்களை சந்திக்க வேண்டி வரும். வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளும் உங்கள் நிதி நிலைமையை எதிர்மறையாக பாதிக்கும். உங்களின் நிதி நிலையும் சரியில்லை என்றால், கிருஷ்ண ஜெயந்தி அன்று பிரியாணி இலைகளைக் கொண்டு இந்த செயல்களைச் செய்தால் செல்வம் பெருகும். மேலும் பண பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்..

25

வருமானமும் செல்வமும் பெருக வேண்டுமானால் கிருஷ்ண ஜெயந்தியான இன்று அதிகாலையில் குளித்துவிட்டு. பிறகு கிருஷ்ணரை தியானம் செய்து வழிபடுங்கள். அதன் பிறகு ஒரு பிரியாணி இலையை எடுத்து கிருஷ்ணரை வணங்குங்கள். இப்போது பிரியாணி இலையை உங்கள் பர்ஸில் வைக்க வேண்டும். இப்படி செய்வதால் பர்ஸில் பணத்துக்கு பஞ்சம் வராது. உங்கள் பர்ஸில் எப்போதும் பணம் இருந்து கொண்டே இருக்கும்.

35

வாஸ்து தோஷம் இருந்தாலும், கிருஷ்ண ஜெயந்தி அன்று குளித்த பின் முதலில் கிருஷ்ணரையும், ராதையையும் வணங்குங்கள். பின்னர் உங்கள் பிரச்சனையை ஒரு பிரியாணி இலையில் எழுதி எரிக்கவும். இப்போது அதன் சாம்பலை ஆற்றில் கலந்துவிட வேண்டும். இதைச் செய்யும்போது வெளியாட்கள் யாரும் வீட்டில் இருக்கக் கூடாது என்பதை  நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

45

வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் இருந்தால், கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் கிருஷ்ணர் மற்றும் ராதையை வழிபட்ட பிறகு 3-5 வீட்டில் சாம்பிராணி போடும் போது பிரியாணி இலைகளை அதில் சேர்க்கவும்.வீடு முழுவது அந்த சாம்பிராணி புகையை காட்டவும். இவ்வாறு செய்வதன் மூலம் எதிர்மறை சக்திகள் நீங்கும்.

55
bay leaf

bay leaf

உங்களுக்கு நிறைய கடன்கள் இருந்தால்.. கிருஷ்ண ஜெயந்தி பிரியாணி இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது கடனில் இருந்து விடுபட கிருஷ்ணரிடம் பிரார்த்தனை செய்யுங்கள். கடனில் இருந்து நிவாரணம் கிடைத்த பிறகு பிரியாணி இலையை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதால் வருமானமும், செல்வமும் படிப்படியாக அதிகரிக்கும். மேலும் கடனில் இருந்து விடுபடலாம்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved