MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Kandha Sashti Viratham: கந்தசஷ்டி - 6 நாட்களும் விரதம் இருக்க முடியலையா?! முருகன் அருள் பெற இப்படி செய்யலாம்.!

Kandha Sashti Viratham: கந்தசஷ்டி - 6 நாட்களும் விரதம் இருக்க முடியலையா?! முருகன் அருள் பெற இப்படி செய்யலாம்.!

2025-ஆம் ஆண்டு மகா கந்த சஷ்டி விழா அக்டோபர் 22 அன்று தொடங்குகிறது. ஆறு நாட்கள் விரதம் இருந்து முருகப்பெருமானின் அருளைப் பெற முடியாதவர்கள், முதல் மற்றும் ஆறாவது நாள் விரதமிருந்தும் அல்லது தினசரி வழிபாடு செய்தும் முழு பலன்களையும் பெறலாம். 

1 Min read
Vedarethinam Ramalingam
Published : Oct 22 2025, 06:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தேவையான எல்லா ஆசீர்வாதங்களும் கிடைக்கும்
Image Credit : Asianet News

தேவையான எல்லா ஆசீர்வாதங்களும் கிடைக்கும்

மகா கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் முருகப்பெருமான் பக்தர்களுக்கு முக்கியமான திருவிழாவாக நடக்கிறது. 2025 ஆம் ஆண்டில் இந்த விழா அக்டோபர் 22, புதன்கிழமை அன்று துவங்குகிறது. ஐப்பசி மாதம் பிரதமை திதியிலிருந்து அக்டோபர் 27, திங்கட்கிழமை சூரசம்ஹாரம் வரை விரதமும் திருவிழாவும் நடைபெறும். ஐதீகப்படி, ஆறு நாட்கள் விரதம் இருந்து வழிபட்டால், முருகப்பெருமானின் அருளும், தேவையான எல்லா ஆசீர்வாதங்களும் பெறப்படும் என நம்பப்படுகிறது.

24
அருளை அள்ளிக்கொடுக்கும் ஆறுமுகன்
Image Credit : Pinterest

அருளை அள்ளிக்கொடுக்கும் ஆறுமுகன்

சிலர் பல காரணங்களால் முழு ஆறு நாட்களும் விரதம் முடியாமல் இருக்கும். அவர்களுக்கான வசதி முறையும் உள்ளது. விரதம் முடியாதவர்கள் மகா கந்த சஷ்டி தொடங்கி முதல்நாள் மற்றும் ஆறாவது நாள் சூரசம்ஹாரம் நடைபெறும் நாள் விரதம் கடைபிடித்து முருகப்பெருமான் வழிபடலாம். மற்ற நாட்களில், தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் முருகப்பெருமான் படத்திற்கு விளக்கேற்றி, அவருக்கான பாடல்கள் பாடி, கவசங்களை பாராயணம் செய்து வழிபாடு செய்யலாம்.

Related Articles

Related image1
தினமும் கந்த சஷ்டி கவசம் சொல்வதால் இவ்ளோ நன்மைகள் கிடைக்குமா? ஒரு நாள் சொல்லி பாருங்க!!
Related image2
முருகன் அருள் - "ஓம் சரவணபவ" சொன்னால் என்ன கிடைக்கும் தெரியுமா?
34
திருமணம் நடைபெறும் வரை திருவிழா
Image Credit : Pinterest

திருமணம் நடைபெறும் வரை திருவிழா

ஆறாவது நாளில் சூரசம்ஹாரம் முடிந்ததும், ஏழாவது நாளில் முருகப்பெருமான் மற்றும் தேவானையின் திருமணம் நடைபெறும் வரை திருவிழா நீடிக்கும். இதனால் விரதம் இருக்க முடியாத நாட்களிலும், தேவையான வழிபாடு மற்றும் தர்மம் பூர்த்தியாக நடைபெறுகிறது.

44
பக்தர்கள் வசதிற்கு ஏற்ற விரதம்
Image Credit : Pinterest

பக்தர்கள் வசதிற்கு ஏற்ற விரதம்

பொதுவாக, கந்த சஷ்டி விரதம் 48 நாட்கள், 21 நாட்கள் அல்லது 6 நாட்கள் விரதம் என பக்தர்களின் வசதிக்கேற்ப கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் 6 நாட்கள் விரதம் முடியாதவர்கள் மேற்கண்ட வழிகளை பின்பற்றுவதால், தங்கள் விரதமும், முருகப்பெருமானின் அருளும் கிடைக்கும். இதனால், அனைவரும் விரதத்தை தங்கள் வசதிக்கேற்ப அனுஷ்டித்து, ஆன்மிகச் சாந்தியும், ஆன்மீக வளர்ச்சியும் பெற முடியும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஆன்மீகம்
கோவில்
கோவில் நிகழ்வுகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved