- Home
- Spiritual
- Pooja Flowers: சாமிக்கு போட்ட பூஜை பூவை தூக்கி எறியலாமா? தோஷம் வரக்கூடாதுனா இத தெரிஞ்சுக்கோங்க!
Pooja Flowers: சாமிக்கு போட்ட பூஜை பூவை தூக்கி எறியலாமா? தோஷம் வரக்கூடாதுனா இத தெரிஞ்சுக்கோங்க!
Pooja Flowers: சாமிக்கு போட்ட பூக்களை மரியாதையுடன் அப்புறப்படுத்துவது முக்கியம். சாமிக்கு படைத்த பூக்களை குப்பையிலோ, நீர்நிலைகளிலோ போட்டால் தோஷமாகுமா? அவற்றை எப்படி அப்புறப்படுத்துவது என்பது குறித்து பார்ப்போம்.

சாமிக்கு போட்ட பூக்களை என்ன செய்வது?
தினமும் சாமி கும்பிடும் பல வீடுகளில், ஃப்ரெஷ்ஷான பூக்களை வைத்து வழிபடுவது வழக்கம். ஆனால், பூஜை முடிந்ததும் அந்தப் பூக்களை என்ன செய்ய வேண்டும் என்று பலருக்கும் குழப்பம் வரும். சிலர் குப்பையில் போடுவார்கள், சிலர் ஆறு, குளத்தில் விடுவார்கள். ஆனால், இந்த இரண்டுமே எல்லா நேரத்திலும் சரியான முறை இல்லை.
இதையும் படிங்க:Weekly Horoscope (ஆகஸ்ட் 2 - 8): ஆடி வெள்ளி, கிருத்திகையில் பண மழை பொழியும் 5 ராசிகள்!
ஆன்மீக மரபுகள் சொல்வது என்ன?
மத நம்பிக்கைகளின்படி, சாமிக்கு படைத்த பூக்களை 'நிர்மால்யம்' (Nirmalya) அதாவது பூஜை பூக்கள் என்று சொல்வார்கள். இது சாதாரண குப்பை (Waste) கிடையாது, பூஜையின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. அதனால், அவற்றை மரியாதையுடன் அப்புறப்படுத்துவது நல்லது என்று பல ஆன்மீக மரபுகள் கூறுகின்றன.
இதையும் படிங்க: August 2026 Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு கோடீஸ்வர யோகம்.. அதிர்ஷ்ட மழை யாருக்கு?
பூஜை பூக்களை குப்பையில் போட கூடாது
பூஜை செய்த பூக்களை சாதாரண குப்பையுடன் கலப்பது மத நம்பிக்கைகளின்படி சரியல்ல என்று பலர் நம்புகிறார்கள். அதுமட்டுமின்றி, பிளாஸ்டிக் மற்றும் பிற குப்பைகளுடன் கலந்தால், இந்த பூக்களை ஆர்கானிக் உரமாக (Organic Compost) பயன்படுத்த முடியாது. எனவே, அவற்றை மற்ற குப்பைகளிலிருந்து தனியாக சேகரிப்பது நல்லது. பின்னர், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வழியில் அப்புறப்படுத்தலாம்.
இதையும் படிங்க:Ketu Transit: திடீர் பண வரவு.. தொட்டதெல்லாம் துலங்கும்.. கேதுவின் கிருபையால் 4 ராசிகளுக்கு ஜாக்பாட்!

