MalayalamEnglishKannadaTeluguTamilBanglaHindiMarathi
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • KEA 2025
  • Home
  • Spiritual
  • குடும்ப தோஷம் நீங்க!! குலதெய்வத்துக்கு இந்த 1 காரியம் செய்யுங்க! வீட்டில் சந்தோஷம் பால் போல பொங்கி வழியும்!

குடும்ப தோஷம் நீங்க!! குலதெய்வத்துக்கு இந்த 1 காரியம் செய்யுங்க! வீட்டில் சந்தோஷம் பால் போல பொங்கி வழியும்!

குடும்ப தோஷம் வீட்டில் இருந்தால் சுப காரியங்கள் கை கூடாது. வீட்டில் நிம்மதி இருக்காது. இந்த துயரை துடைக்க எளிய பரிகாரங்களை இங்கு தெரிந்து கொள்ளுங்கள். 

maria pani | Updated : Apr 03 2023, 11:20 AM
2 Min read
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • Google NewsFollow Us
15
Asianet Image

நம்முடைய வீட்டில் குடும்ப தோஷம், பித்ரு தோஷம் இருந்தால் அது நமக்கு பல்வேறு வகையான இன்னல்களை ஏற்படுத்திவிடும். நம்முடைய வாழ்க்கையில் சிறந்து விளங்க சாஸ்திரங்கள் சில வழிபாடுகளையும், பூஜைகளையும் சொல்கிறது. அதில் முழு நம்பிக்கை கொண்டு வழிபாடு செய்தால் நாம் குடும்ப தோஷங்கள் விலகி நன்மைகளை பெறலாம். 

25
Asianet Image

குடும்ப தோஷம் இருந்தால் வீட்டில் இருக்கும் குடும்ப உறுப்பினர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்படும். மன அழுத்தம், தூக்கம் இல்லாத இரவுகள், பொருளாதார நெருக்கடி, பணக்கஷ்டம் போன்றபிரச்சினைகள் தலை விரித்தாடும். உங்களுடைய வீட்டில் இந்த பிரச்சனைகள் இருந்தால் அதற்கு குடும்ப தோஷம் காரணமாக இருக்கலாம். திக்கற்றவர்களுக்கு குலதெய்வமே துணை என்பார்கள். குடும்ப தோஷம் நீங்க இந்த பரிகாரத்தை செய்து பலன்பெறுங்கள். 

 

35
Asianet Image

குலதெய்வத்தை மனதில் கொண்டு இந்த பரிகாரத்தை செய்யுங்கள். ஒரு சுத்தமான வெள்ளைத் துணியை எடுத்து, அதில் குடும்பத்தில் காலமான முன்னோரின் பெயர்களை எழுத வேண்டும். உங்களுக்கு நினைவில் இருக்கும் எல்லா முன்னோரின் பெயரையும் எழுதிவிடுங்கள். விரலி மஞ்சள் துண்டு, வெத்தலை, பாக்கு, நெல், அட்சதை, 1 ரூபாய் நாணயம் போன்ற பொருள்களுடன் முன்னோரின் பெயர் எழுதிய துணியையும் ஒரு மஞ்சள் துணியில் வைத்து முடிச்சு போட்டு எடுத்து கொள்ளுங்கள். இதை பூஜை அறையில் வைத்து விட வேண்டும். இந்த மஞ்சள் முடிச்சுக்கு நாள்தோறும் பூஜையின் போது தூப ஆராதனை (ஊதுவத்தி, சாம்பிராணி காட்டுதல்) செய்ய வேண்டும். இந்த வழிபாட்டின் போது முன்னோரையும், குலதெய்வத்தையும் மனதார வேண்டி கொள்ள வேண்டும். இந்த விஷயத்தை செய்து பார்த்தால் நிச்சயம் மாற்றத்தை உணருவீர்கள். குடும்ப பிரச்சனைகள் ஓய்ந்து வாழ்வில் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள். 

45
Asianet Image

இந்த பரிகாரம் தவிர வேறு இருபரிகாரங்களையும் இங்கு கொடுத்திருக்கிறோம் படித்து பயன்பெறுங்கள். வெள்ளிக்கிழமை அன்று மாலை வேளையில் வீட்டில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து மகாலட்சுமிக்கு பூஜை செய்து வழிபட்டால் குடும்ப தோஷம் நீங்கும். உங்களால் பழைய ராமேஸ்வரம் செல்ல முடியுமா? அப்படியானால் அடுத்த பரிகாரத்தை முயன்று பாருங்கள். 

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு வெள்ளி வளையல், கொலுசு போடுவது ஏன் அவசியமாக கருதப்படுகிறது? அதன் பின்னணியில் இத்தனை நன்மைகளா!!

55
Asianet Image

ராமேஸ்வரம் சென்று வந்தால் பிரச்சனைகள் எல்லாம் தீரும் என்பது நம்பிக்கை. அங்கு செல்லும் வாய்ப்பிருந்தால், பழைய ராமேஸ்வரம் கோயிலில் கல் விளக்கு ஏற்றி வழிபடுங்கள். இலுப்பை எண்ணெயும், நல்லெண்ணெயும் தான் கல் விளக்கிற்கு கலந்து வைக்க வேண்டும். இப்படி விளக்கு ஏற்றி வேண்டி கொண்டால் குடும்ப தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். 

இதையும் படிங்க: இன்று பங்குனி வளர்பிறை பிரதோஷம்.. மாலை 6 மணிக்குள் சிவன் கோயில் சென்று வழிபட்டால் இத்தனை பலன்களா!!

maria pani
About the Author
maria pani
 
Recommended Stories
Top Stories