MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • தெரியாம கூட இந்த 4 பொருட்கள கீழ போட வேண்டாம்.. மீறினா வீட்டுல கெட்டது நடக்கலாம்!!

தெரியாம கூட இந்த 4 பொருட்கள கீழ போட வேண்டாம்.. மீறினா வீட்டுல கெட்டது நடக்கலாம்!!

நாம் தெரியாமலோ அல்லது கை தவறியோ சில பொருட்களை கீழே போடுவது சில நேரங்களில் வாஸ்து தோஷத்தை வரவழைக்கலாம். 

2 Min read
maria pani
Published : Jun 02 2023, 10:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

வீட்டில் சில பொருள்கள் கீழே விழுவது இயல்பானது. நம்முடைய கை தவறி விழலாம். ஆனால் இது எல்லா நேரமும் சாத்தியமில்லை. சிலருக்கு கார்பல் டன்னல் சிண்ட்ரோம் அல்லது வேறு ஏதேனும் நரம்பு பிரச்சனைகள் இருந்தால் தவிர பொருட்களை கீழே போடும் உங்களுக்கு இருக்காது. அடிக்கடி பொருள்களை கீழே போடுவதால் வாஸ்து தோஷம் இருப்பதே குறிக்கலாம். நீங்கள் எந்தெந்த பொருட்களை கீழே தவறவிடுவது உங்களுக்கு துரதிஷ்டத்தை வரவழைக்கும் என்பதை இங்கு காணலாம். 

26

பூஜை தட்டு, தீபம், ஆரத்தி தட்டு ஆகியவை கை தவறி கீழே விழுந்தால் அதை அபசகுணம் என்பார்கள். ஆரத்தி தட்டு கையில் இருந்து நழுவுவது கடவுள் உங்களுடைய வழிபாட்டை ஏற்கவில்லை என்பதன் அடையாளம். இதனால் வாழ்க்கையில் பிரச்சினை வரலாம். உங்களுக்கு வரக்கூடிய பிரச்சனையும் முன்கூட்டியே காட்டுகிறது. 

36

வீட்டில் ஏற்றி வைத்த விளக்கு திடீரென அணைந்தால், அது மோசமான விளைவை குறிக்கும். ஏதோ தவறாக நடக்கவுள்ளதை நமக்கு முன்கூட்டியே உணர்த்த விளக்கு அணைகிறது. இதற்கு நாம் பரிகாரம் செய்யலாம். அதை உடனே செய்ய வேண்டும். பூஜையை மீண்டும் முதலில் இருந்து செய்ய வேண்டும். இதனால் குடும்பத்தில் இருக்கும் தோஷம் எல்லாமே நீங்கிவிடும்.  

46

மகாலட்சுமிக்கு தானியங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். உங்கள் கையில் இருந்து அரிசி உள்ளிட்ட உண்ணும் தானியங்கள் தவறி விழுவது லட்சுமியை வருத்தப்பட செய்யும். செல்வத்தின் கடவுளான லட்சுமி வருந்தினால் உங்கள் வீட்டில் சுபிட்சம் இருக்காது. தானியங்கள் கீழே விழுந்தாலும் அல்லது உங்கள் காலில் பட்டாலும் அதை எடுத்து நெற்றியில் ஒத்தி வருந்த வேண்டும். 

கடுகு எண்ணெய், கருப்பு மிளகு ஒருபோதும் தரையில் விழாமல் பார்த்து கொள்ளுங்கள். ஏனெனில் சனி பகவானுடன் கடுகு எண்ணெய் தொடர்பு கொண்டுள்ளது. தரையில் கொட்டிய கடுகு எண்ணெய், சனி பகவானை வருந்த செய்யும். கையில் எண்ணெய் பாட்டில் வைக்கும்போது கவனமாக இருக்கவேண்டும். 

56

வீட்டில் சமையலில் உப்பு முக்கிய இடம் பிடிக்கிறது. உப்பு தவறி கீழே விழுவது நல்ல சகுனம் இல்லை. அதனால் மோசமான விளைவுகள் ஏற்படும். உப்பை கீழே சிந்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அடிக்கடி உப்பு கொட்டுவது வாழ்வில் நடக்கும் தொடர் சிக்கல்களை குறிக்கிறது. மாலை வேளைகளில் யாருக்கும் உப்பு கொடுக்க வேண்டாம். இதனால் வீட்டில் வறுமையும், பொருளாதார பிரச்சனையும் ஏற்படும்.  

66

வீட்டு சமையல் வேலைகளின் போது பாத்திரங்களை நாம் அதிகமாக பயன்படுத்துவோம். அப்போது தெரியாமல் எப்போது பாத்திரங்களை கீழே போடுவது இயல்பானது. அடிக்கடி பாத்திரங்கள் கீழே விழுவது வீட்டில் பிரச்சனை வாஸ்து தோஷம் இருப்பதை சுட்டிக்காட்டுகிறது. அடிக்கடி பாத்திரங்களை கீழே போடுவதால் மகாலட்சுமி கோபத்திற்கு ஆளாகுவோம். நம் வாழ்க்கையில் பிரச்சனைகளும் துரதிஷ்டமும் ஏற்படலாம். 

About the Author

MP
maria pani
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved