MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • சாபங்களினால் தடைப்பட்ட வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியம் பெற இந்த எளிய பரிகாரங்கள் செய்தால் போதும்!

சாபங்களினால் தடைப்பட்ட வேலை வாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியம் பெற இந்த எளிய பரிகாரங்கள் செய்தால் போதும்!

சாபங்களினால் உண்டாகும் தடைகளை தகர்த்து , செய்யும் முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கு என்னென்ன பரிகாரங்கள் செய்யலாம் என்பதனை இந்த பதிவில் காணாலாம். 

2 Min read
Dinesh TG
Published : Apr 06 2023, 08:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14


நம்மில் பலரும் பல விதமான பிரச்சனைகளுடன் தான் வாழ்க்கையை நகர்த்தி வருவோம். ஒரு சிலருக்கு படிப்பில் பிரச்னை அதாவது படிப்பை பின் தொடர பணம் செலுத்த முடியாத சூழலில் இரு[இருப்பார்கள். சிலர் படித்து முடித்து வேலை கிடைப்பதில் பிரச்னைகளை சந்திப்பார்கள்.

நல்ல வேளையில் இருப்பவர்களுக்கு திருமணம் கைகூடுவதில் பிரச்னை இருக்கும். திருமணம் ஆனவர்களுக்கு புத்திரம் பெறுவதில் பல சிக்கல்கள் இருக்கும். கணவன் மனைவி இருவருக்கும் உடலில் எந்த பிரச்சனையும் இருக்காது, எனினும் குழந்தை பெறுவதில் தடை ஏற்பட்டு கொண்டே இருக்கும். இது எதனால் ஏற்படுகிறது என்று சற்று பொறுமையாக சிந்தித்து பார்த்தால், முன்னோர்களின் சாபமாக மட்டுமே இருக்க கூடும்.

அனைத்தும் சரியாக இருப்பினும்,நாம் செய்யும் செயல்களில் தடைகள் அல்லது சிக்கல்கள் வந்தால் அது நிச்சயமாக முன்னோர்களால் சாபத்தினால் தான்.சாபத்தில் மாத்ரு சாபம், பித்ரு சாபம், என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

24

இந்த சாபங்களினால் உண்டாகும் தடைகளை தகர்த்து , செய்யும் முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கு என்னென்ன பரிகாரங்கள் செய்யலாம் என்பதனை இந்த பதிவில் காணாலாம்.


நமது ஜாதகத்தின் மூலமாக சாபங்களை தெரிந்து கொண்டு அதற்குறிய பரிகாரங்களை செய்து வாழ்க்கையில் நாம் செய்யும் செயல்களில் வெற்றி கிட்டும் என்பது மஹா பெரியவரின் அருள்வாக்கும் கூட!

பித்ரு சாபத்திற்கான பரிகாரம்:

பரிகாரம் 1:

1 கைத்தடி , 1 செருப்பு, 1 குடை ஆகியவற்றை வயது முதியவருக்கு அதாவது 70 வயது மிக்கவருக்கு
ஞாயிற்றுக்கிழமையன்று தானமாக வழங்க வேண்டும். பித்ரு தோஷம் என்றால் தந்தை வழி சாபமாகும்.

பரிகாரம் 2:

துளசி, வில்வம் போன்ற செடி அல்லது மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி வர வேண்டும். செவ்வாய் கிழமைகளில் புண்ணிய நதிகளில் நீராடுவதை வழக்கமாக கொள்ள வேண்டும்.

34

மாத்ரு சாபத்திற்கான பரிகாரம்:

உங்கள் வீடு அருகில் இருக்கும் பெருமாள் கோவிலில் 25 சுற்றுக்கள் வீதம் 40 நாட்கள் தொடர்ந்து சுற்றி வர வேண்டும். கோவிலை சுற்றி வரும் போது நாராயணா என்ற மந்திரத்தை மனதில் கூற வேண்டும். திங்கள் கிழமையன்று இதனை செய்ய ஆரம்பித்தால் மிகவும் சிறப்பாகும்.

40 நாட்கள்  கழித்து ராமேஸ்வரம் சென்று அங்கு இருக்கும் தீர்த்தங்களில் நீராட வேண்டும்.

களஸ்திர சாபம் :

வெள்ளிக்கிழமையன்று திருமாங்கல்யம் வாங்கி பெருமாள் கோவிலில் இருக்கும் தாய்க்கு சாத்தி வழிபட வேண்டும்.

44

பிரேத சாபம்:

சனிக்கிழமையன்று ராகு கலந்து ருட்ரம் படிக்கச் வேண்டும். அல்லது வீட்டில் மிருத்யுஞ்ஜய ஹோமம் செய்ய வேண்டும்

சர்ப்ப சாபம்:

ஏதேனும் ஒரு கோவிலில் குறிப்பாக அரசமரத்தின் கீழ் சர்ப்பம் பதிந்து வழிபடலாம்.

சாது சாபம்:

வீட்டில் கணபதி ஹோமம் செய்வது மிகவும் அவசியம்.

 

பிராமண சாபம்:

திங்கட் கிழமையில் வருகிற ராகு காலத்தில் 10 வாரம் ருத்ரா அபிஷேகம் செய்ய வேண்டும்.

மேற்கண்ட சாபங்களில் இருந்து விடுபட இங்கு கூறப்பட்டுள்ள பரிகாரகங்ளை செய்து உங்களது வாழ்வில் நீங்கள் முயற்சிக்கும் அனைத்து காரியங்களிலும் காரிய சித்தி பெற்று மகிழ்வோடு முன்னேறுங்கள்!

உடம்புல பல்லி விழுந்துருச்சா !அப்போ என்ன பலன் என்று தெரிஞ்சுக்கோங்க!

About the Author

DT
Dinesh TG
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved