MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Chanakya Niti: இந்த 7 வகையான உறவினர்களை அருகில் கூட சேர்க்காதீர்கள்! சாணக்கியர் கூறும் நீதி

Chanakya Niti: இந்த 7 வகையான உறவினர்களை அருகில் கூட சேர்க்காதீர்கள்! சாணக்கியர் கூறும் நீதி

சாணக்கியரின் நீதிப்படி வாழ்க்கையில் சிலரை நம் அருகில் கூட சேர்த்துக் கொள்ளக் கூடாது. அதற்கான காரணங்கள் என்ன? அவர்கள் யார்? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். 

3 Min read
Ramprasath S
Published : Aug 19 2025, 04:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
சாணக்கியரின் நீதி
Image Credit : Pinterest

சாணக்கியரின் நீதி

சாணக்கியர் இந்திய வரலாற்றில் முக்கியமான அறிஞர்களில் ஒருவராக கருதப்படுகிறார். இவர் நீதி சாஸ்திரம், அர்த்த சாஸ்திரம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். இந்த நூல்களில் மனித உறவுகள், ஆட்சி மற்றும் வாழ்க்கை நெறிமுறைகள் பற்றி ஆழமான கருத்துக்களை வழங்கியுள்ளார். அவருடைய நீதிப்படி நம் பக்கத்தில் நெருக்கமாக சேர்க்க கூடாதவர்கள் பற்றி கூறியுள்ளார். இது மனிதர்களின் குண நலன்கள் மற்றும் அவர்களின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டவை. சாணக்கியரின் நீதிப்படி யாரை நம் பக்கத்தில் சேர்க்கக்கூடாது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

27
நம்பிக்கை துரோகிகள்
Image Credit : Pinterest

நம்பிக்கை துரோகிகள்

சாணக்கியர் மனிதர்களின் நடத்தைகள் மற்றும் அவர்களின் உள்நோக்கங்களை ஆராய்ந்து சில வகையான மனிதர்களை நம் வாழ்க்கையில் நெருக்கமாக வைத்திருப்பது ஆபத்தை விளைவிக்கும் என்று எச்சரித்துள்ளார். அந்த வகையில் அவர் முதலில் குறிப்பிட்டுள்ளது நம்பிக்கை துரோகிகளை தான். விசுவாசமின்மையை ஒரு மனிதனின் மிகப்பெரிய குறைபாடாக சாணக்கியர் கருதுகிறார். ஒருவருக்கு விசுவாசம் இல்லையெனில் அவரை நம்புவது நம்மை ஆபத்தில் தள்ளும். இத்தகையவர்கள் தங்கள் சொந்த நலனுக்காக எந்த நேரத்திலும் நம்மை காட்டிக் கொடுக்கலாம். எடுத்துக்காட்டாக ஒரு நண்பர் உங்களின் ரகசியத்தை வேறு ஒருவருடன் பகிர்வாரேயானால் அவர் மீது நம்பிக்கை வைப்பது ஆபத்தானது. சாணக்கியர் கூற்றுப்படி, “ஒரு நண்பன் உன்னை ஒருமுறை ஏமாற்றினால் அது அவன் குற்றம். இரண்டாவது முறை ஏமாற்றினால் அது உன் குற்றம்” எனக் கூறியுள்ளார்.

Related Articles

Related image1
Chanakya Niti: வாழ்வில் வெற்றி பெற வேண்டுமா? சாணக்கியர் கூறும் 5 முக்கிய நீதிகள் என்ன தெரியுமா?
Related image2
Chanakya Niti : இந்த அறிகுறிகள் வீட்டில் இருக்கா..? உங்களுக்கு கெட்ட காலம் ஆரம்பம்.. ஜாக்கிரதை!
37
பொய்யர்கள்
Image Credit : Pinterest

பொய்யர்கள்

உண்மையை மறைத்து பொய் பேசுபவர்களை நம்பக்கூடாது என்று சாணக்கியர் வலியுறுத்தி உள்ளார். பொய்யர்கள் தங்கள் சொந்த ஆதாயத்திற்காக உங்களை ஏமாற்ற முயற்சிப்பார்கள். அவர்கள் உண்மையை மறைப்பதால், அவர்களுடன் உறவு வைத்திருப்பது நம்பகத்தன்மையற்றதாக இருக்கும். ஒருவர் உங்களுக்கு வாக்குறுதி அளித்து அதை மீண்டும் மீண்டும் மீறினால் அவர்களை நம்புவது நேரத்தையும், உணர்வுகளையும் வீணடிக்கும். சாணக்கியர் கூற்றுப்படி, “பொய்யால் கட்டப்பட்ட உறவு, மணலில் கட்டப்பட்ட கோட்டை போன்றது. அது எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும்” எனக் கூறியுள்ளார். பொய்யர்கள் உங்களை தவறான பாதையில் வழிநடத்தலாம் அல்லது அவர்கள் வார்த்தைகளை நம்பி முதலீடு செய்யும் உணர்வுகள் வீணாகலாம் என்று சாணக்கியர் கூறுகிறார்.

47
வஞ்சம் கொண்டவர்கள்
Image Credit : Pinterest

வஞ்சம் கொண்டவர்கள்

பொறாமை மற்றும் வஞ்சம் கொண்ட உறவுகளிடம் இருந்து விலகி இருப்பதற்கு சாணக்கியர் அறிவுறுத்துகிறார். உங்கள் வெற்றி அல்லது மகிழ்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் உங்கள் முன்னேற்றத்தை தடுக்க முயற்சிப்பார்கள். உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் திட்டங்களை தீட்டுவார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். உங்கள் பதவி உயர்வு அல்லது வெற்றியை கேள்விப்பட்டு உங்களை புகழாமல் விமர்சிக்கும் அல்லது புறம் பேசும் நபர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள். சாணக்கியர் கூற்றுப்படி “பொறாமை கொண்டவன் உன்னை உயர விடமாட்டான். அவனை உன் பயணத்தில் சேர்க்காதே” என்று கூறுகிறார். பொறாமை உள்ளவர்கள் உங்கள் மனதை குழப்பி உங்களை தவறான முடிவுகளை எடுக்க வைப்பார்கள். அவர்களின் எதிர்மறை எண்ணங்கள், உங்கள் மன அமைதியை பறிக்கும் என்று சாணக்கியர் கூறுகிறார்.

57
சுயநலவாதிகள்
Image Credit : Pinterest

சுயநலவாதிகள்

தங்கள் சொந்த நலனை மட்டும் பார்க்கும் மனிதர்களை தவிர்க்க வேண்டும் என்று சாணக்கியர் அறிவுறுத்துகிறார். இவர்கள் உங்களை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்துவார்கள். உங்களுக்கு உண்மையான அக்கறை காட்ட மாட்டார்கள் என்று சாணக்கியர் கூறுகிறார். ஒருவர் உங்களிடம் உதவி கேட்கும் போது மட்டும் நட்பாக இருந்து, மற்ற நேரங்களில் உங்களை புறக்கணித்தால் அவர் சுயநலவாதியாக இருக்கலாம். அவரின் கூற்றுப்படி, “சுயநலவாதியின் நட்பு ஒரு வியாபாரம் ஒப்பந்தம் போன்றது. அது அவனுக்கு பயன்படும் போது மட்டுமே நீடிக்கும்” என்று கூறுகிறார். இவர்கள் உங்களுக்கு உண்மையான ஆதரவு அளிக்க மாட்டார்கள். உங்கள் தேவைகளை புறக்கணித்து, தங்கள் நலன்களை மட்டுமே முன் நிறுத்துவார்கள். எனவே சுயநலமிக்க மக்களை கண்டறிந்து அவர்களிடமிருந்து விலகி விடுங்கள் என்று அவர் கூறுகிறார்.

67
எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள்
Image Credit : Pinterest

எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள்

  • எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள், எதிர்மறையாக சிந்திக்கும் மனிதர்கள் உங்களை நெருங்குவதை தவிர்க்க வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் ஒரு விஷமாகும். அவை உங்கள் மனதை மட்டும் அல்ல. உங்கள் இலக்குகளையும் அழிக்கும்” என்று கூறுகிறார்.
     
  • கோபத்தை கட்டுப்படுத்த முடியாதவர்களையும் நம் அருகில் வைத்துக் கொள்வது ஆபத்தானது என்று சாணக்கியர் எச்சரிக்கிறார். ஒரு சிறிய வாக்குவாதத்திற்கு கூட பொறுமையிழந்து ஆவேசமாக நடந்து கொள்பவர்கள் உறவுகளை சீர்குலைப்பார்கள் என அவர் கூறுகிறார். “கோபம் ஒரு தீ. அது மற்றவர்களை மட்டுமல்ல, கோபப்படுபவர்களையும் சேர்த்து எரிக்கும்” என்று சாணக்கியர் கூறுகிறார்.
     
  • அறிவு மற்றும் நற்பண்பு இல்லாதவர்களையும் நம் அருகில் நெருங்க விட வேண்டாம் என்று சாணக்கியர் கூறுகிறார். அவர்கள் முட்டாள்தனமான முடிவுகளை எடுப்பதோடு, உங்களையும் தவறான பாதைகளில் இழுக்கலாம். “அறிவற்ற மூடனுடன் பயணம் செய்வது இருட்டில் பயணம் செய்வதற்கு ஒப்பாகும்” என்று அவர் கூறியுள்ளார்.
77
வெற்றி பெற வேண்டுமானால் இவர்களை விலக்குங்கள்
Image Credit : AI Generated

வெற்றி பெற வேண்டுமானால் இவர்களை விலக்குங்கள்

சாணக்கியர் கூறியுள்ள இந்த அறிவுரைகள் நமது வாழ்க்கையில் உறவுகளை தேர்ந்தெடுக்கும் போது எச்சரிக்கையாக இருக்க உதவுகின்றன. ஆனால் இதை பயன்படுத்துவதற்கு முன்போ அல்லது ஒரு நபரை முழுமையாக நிராகரிப்பதற்கு முன்போ அவர்களின் நடத்தையை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். மனிதர்களை வெறும் வார்த்தைகளால் மதிப்பிடாமல், அவர்களின் செயல்களால் மதிப்பிட வேண்டும். நம்பிக்கை துரோகிகள், பொய்யர்கள், பொறாமையாளர்கள், சுயநலவாதிகள், எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள், கோபக்காரர்கள் மற்றும் மூடர்களை நாம் பக்கத்தில் சேர்க்காமல் இருப்பது மன அமைதி மற்றும் வெற்றிக்கு முக்கியமானது என்று சாணக்கியர் கூறுகிறார்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஆன்மீகம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved