MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • ஐஸ்வர்யம் பெருக, திருமணம் கைகூட.. இந்த தெய்வங்களுக்கு ரோஜா பூக்களை சமர்ப்பித்து வழிபடுங்கள்!

ஐஸ்வர்யம் பெருக, திருமணம் கைகூட.. இந்த தெய்வங்களுக்கு ரோஜா பூக்களை சமர்ப்பித்து வழிபடுங்கள்!

இந்து மதத்தில், வழிபாட்டின் போது தெய்வங்களுக்கு மலர்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. அதே சமயம், அவர்களுக்கு விருப்பமான மலர்கள் பற்றிய விளக்கமும் வேதங்களில் உள்ளது. 

1 Min read
Kalai Selvi
Published : Jan 22 2024, 11:17 AM IST| Updated : Jan 22 2024, 11:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இந்து மதத்தில், வழிபாட்டின் போது தெய்வங்களுக்கு பூக்கள் அர்ப்பணிக்கப்படுகின்றன. அதே சமயம், தெய்வங்களுக்கு விருப்பமான மலர்கள் பற்றிய விளக்கமும் வேதங்களில் உள்ளது. சில பூக்கள் சில தெய்வங்களுக்கு சமர்பிக்க முடியும். ஆனால்,  அதே சமயம் சில பூக்கள் சில தெய்வங்களுக்கு சமர்பிக்க முடியாது.  அந்தவகையில், எந்தெந்த தெய்வங்களுக்கு ரோஜா பூக்களை அர்ப்பணிக்க வேண்டும் மற்றும் அதன் பலன்கள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

25

லட்சுமி தேவி: லட்சுமி தேவிக்கு விருப்பமான மலர் தாமரை. ஆனால் ரோஜா பூவை லட்சுமி தேவிக்கு சமர்ப்பிக்கலாம். லக்ஷ்மி தேவிக்கு ரோஜாப் பூக்களைச் சமர்ப்பிப்பதால்  வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் உண்டாகும். மேலும் வீட்டில் ஏதேனும் நிதிப் பிரச்சனை இருந்தால், அதுவும் விரைவில் விலகத் தொடங்கும்.
 

35

சிவபெருமான்: சிவபெருமானின் சிலைக்கு ரோஜாக்களை அர்ப்பணிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் சிவலிங்கத்திற்கு ரோஜாகளை சமர்ப்பிக்கலாம். சிவலிங்கத்திற்கு ரோஜாக்களை சமர்ப்பிப்பதன் மூலம், உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். மேலும், சிவபெருமானின் ஆசீர்வாதம் உங்கள் முழு குடும்பத்திற்கும் நிலைத்திருக்கும் மற்றும் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்.
 

45

அனுமான்: அனுமானுக்கு ரோஜா மலர்களை அர்ப்பணிப்பது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது. உங்களது பணி நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தால், செவ்வாய் கிழமை தோறும் அனுமானுக்கு ரோஜா பூக்களை சமர்ப்பித்து, நிலுவையில் உள்ள வேலைகள் நிறைவேற பிரார்த்தனை செய்யுங்கள். அந்த பணி விரைவில் முடிவடையும். 

55

கிருஷ்ணர்:ப்கிருஷ்ணருக்கு ரோஜாப் பூக்களையும் சமர்ப்பிக்கலாம். கிருஷ்ணருக்கு ரோஜாப் பூக்களைச் சமர்பிப்பதால் வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறையை அதிகரிக்கும். மேலும், கிருஷ்ணரின் அருளால் திருமண வாழ்க்கை இனிமையாகும் மற்றும் குடும்ப பிரச்சனைகள் நீங்கி வீட்டில் அமைதி நிலவும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved