MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • வீட்டு வாசலில் மஞ்சள் தண்ணீர் தெளிப்பதால் இத்தனை நன்மைகளா!

வீட்டு வாசலில் மஞ்சள் தண்ணீர் தெளிப்பதால் இத்தனை நன்மைகளா!

வீட்டின் பிரதான வாயிலான நிலைவாசலில் மஞ்சள் கலந்த நீர் தெளிப்பதால் உண்டாகும் நன்மைகளை அறிந்தால், இனி தெளிக்காமல் இருக்கமாட்டீர்கள். 

2 Min read
Author : maria pani
Published : Apr 14 2023, 02:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

ஜோதிடத்தில், வீட்டில் பயன்படுத்தப்படும் வாசனை திரவியங்கள், கிரகங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன. இறைவழிபாட்டின் போது கூட சில வாசனை பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. மஞ்சள் அப்படியான பொருள்களில் ஒன்றாகும். மஞ்சளை சாதாரணமாக நினைக்க முடியாது. அது ஆயுர்வேதத்தில் மட்டுமல்ல, ஜோதிடத்திலும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. வீட்டில் மஞ்சள் கலந்த நீரை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

மஞ்சள் தண்ணீர் மனிதர்களுக்கு கிடைத்த பொற்கொடை. மஞ்சள் தண்ணீரால் செய்த பரிகாரங்கள் நம் வீட்டு பிரச்சனைகளை வேரோடு அழிக்கிறது. வீட்டின் பிரதான வாயிலில் மஞ்சள் தண்ணீரை தெளிப்பதால் பல அற்புதமான பலன்களை பெறலாம். 

36

மஞ்சள் மிகவும் புனிதமானதாகவும் மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது. நம் வீட்டின் வாசலில் மஞ்சள் தண்ணீரை தெளிப்பதால் நேர்மறை, தெய்வீக ஆற்றல் வீட்டில் வாசம் செய்யும். பூஜையில் பயன்படுத்தப்படும் மஞ்சளை வாசலில் தெளிப்பதன் மூலம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் முற்றிலும் நீங்கும்.

46

ஜோதிடத்தின்படி, வீட்டின் பிரதான கதவு கிரகத்தின் மையமாக கருதப்படுகிறது. வீட்டின் மெயின் வாசலில் மஞ்சள் தண்ணீதை தெளிப்பதன் மூலம் வீட்டில் இருக்கும் வாஸ்து மற்றும் கிரக தோஷங்கள் நீங்கும். வீட்டின் வாசல் ராகுவுடன் தொடர்புடையது என்பார்கள். அதனால் வீட்டின் பிரதான வாசலில் மஞ்சள் தண்ணீரை தெளிப்பது ராகுவை பாதிக்காது. அது வீட்டிற்கு முன்னேற்றம் தரும். 

56

விநாயகரின் அருளால் வீட்டின் பிரதான வாசலில் மங்களம் நிலவுவதாக நம்பப்படுகிறது; ஆகவே, வீட்டின் பிரதான வாசலில் மஞ்சள் தண்ணீரை தெளிப்பது ஐஸ்வர்யம் தரும். வீட்டின் பிரதான வாசலில் ஸ்வஸ்திக் சின்னம் (swastik) செய்து, தினமும் மஞ்சள் தண்ணீரை தெளிப்பதன் மூலம், மகாலட்சுமி, அன்னபூரணி நம் வீட்டில் வாசம் செய்வார்கள். 

இதையும் படிங்க: உப்புடன் 4 கிராம்பு போட்டு வைத்தால்.. அதுவும் வீட்டின் இந்த இடத்தில் வைத்தால், பணம் அதிகம் குவியுமாம்!!

66

வீட்டின் பிரதான வாசலில் 1 ரூபாயை வைத்து அதில் மஞ்சள் தண்ணீரை தெளித்து பிரார்த்தனை செய்ய வேண்டும். பின்னர் அந்த நாணயத்தை கோவிலுக்கு கொடுத்து விட்டால், நம் வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடி ஒருபோதும் ஏற்படாது. வீட்டில் நேர்மறை ஆற்றல் நிலவி, பொருளாதார முன்னேற்றம் கிடைக்க வேண்டும் என்றால், மஞ்சள் தண்ணீரை இப்படி பயன்படுத்தி பாருங்கள். நல்ல பலனளிக்கும். 

இதையும் படிங்க: அட்சய திருதியை நாளில் இந்த 1 காரியம் மறக்காம செய்யுங்க! அள்ள அள்ள குறையாமல்... வீட்டில் செல்வம் பெருகுமே!!!

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Recommended image1
Solar Eclipse 2026: இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சிக்கல் அதிகரிக்கப் போகுது.!
Recommended image2
கோவிலில் சுவாமியை நேர் எதிராக நின்று வழிபடலாமா..? பல ஆண்டுகளாக பலரும் அறியாத ஆன்மிக ரகசியம் இதோ!
Recommended image3
Hindu Spiritual Story: சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்ட பக்தன்.. ஏகாதசி விரதத்தால் வாழ்க்கையே மாறிய அதிசயம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved