MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • வாழ்வில் யோகம் பெற ஏன் வசந்த பஞ்சமியில் சரஸ்வதி பூஜை செய்யணும்.. முக்கியத்துவம் பலன்கள் முழுவிவரம்.. 

வாழ்வில் யோகம் பெற ஏன் வசந்த பஞ்சமியில் சரஸ்வதி பூஜை செய்யணும்.. முக்கியத்துவம் பலன்கள் முழுவிவரம்.. 

Basant Panchami 2023: வசந்த பஞ்சமி சரஸ்வதி தேவியை வழிபட ஏற்ற நாள். அதன் முக்கியத்துவம், பலன்கள் குறித்த முழுவிவரம் இங்கே... 

2 Min read
Author : maria pani
| Updated : Jan 23 2023, 03:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

ஒவ்வொரு மாதமும் ஐந்தாம் நாள் வரும் வளர்பிறை, 5ஆம் நாள் தேய்பிறையில் வரும் திதியை தான் பஞ்சமி என்கிறார்கள். இதில் ரொம்ப சிறப்பு வாய்ந்தது கருட பஞ்சமியும், வசந்த பஞ்சமியும் தான். ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமியில் சூரியன் பயணிப்பதால் அதனை கருட பஞ்சமி எனவும், உத்தராயண காலத்தின் தொடக்க மாதமான தையில் வரும் பஞ்சமி திதியினை வசந்த பஞ்சமி எனவும் சொல்கிறார்கள். குளிர்காலம் நிறைவடைந்து அதை தொடர்ந்து வரும் வசந்த காலத்தை வரவேற்கும் வகையில் தான் இந்த நாளை கொண்டாடுகின்றனர். அதனால் தான் வசந்த பஞ்சமி என பெயர் வந்தது. இது சரஸ்வதி தேவியை வழிபட ஏற்ற நாள். 

25

வசந்த பஞ்சமி புராண கதை! 

தை அமாவாசைக்கும் மாசி அமாவாசைக்கும் மத்தியில் உள்ள நாள்களை ‘மாக மாதம்‘ என்பர். இதில் கௌரி தேவி, சப்த கன்னியர்களை பூஜை செய்வார்கள். இந்த மாக மாதத்தில் வரும் வளர்பிறை பஞ்சமி தினத்தில் தான் கல்வியையும், ஞானத்தையும் அருளும் சரஸ்வதி தேவி அவதரித்ததாக நம்பிக்கை உள்ளது. இந்நாளில் உயிர்களை உருவாக்கும் பிரம்மதேவன் அசதியால் சரஸ்வதி தேவியை தோற்றுவித்து அவரது வீணையின் வாயிலாக மனித உயிர்களுக்கு பேச்சுத் திறமையும், ஞானத்தையும் புகட்டுமாறு தெரிவித்ததாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. இந்த தினத்தை ‘ரிஷி பஞ்சமி’, ‘காம பஞ்சமி’, ‘ஸ்ரீ பஞ்சமி’ என்றும் சொல்வார்கள். புராணங்களில் இதற்கு பல கதைகள் உள்ளன. துவாபரை யுகத்தில் கிருஷ்ணனும், பலராமரும் சாந்தீபனி முனிவரிடம் குருகுல வாசம் செய்ய தொடங்கிய நாளாகவும் இந்த நாளைதான் புராணங்கள் கூறுகின்றன. 

 

35

சரஸ்வதி பூஜை  

பஞ்சமி அன்று சரஸ்வதி பூஜை செய்ய அதிகாலையில் எழுந்து புண்ணிய ஸ்தலங்களில் நீராட வேண்டும். அதன் பிறகு சரஸ்வதி தேவிக்கு விருப்பமான மஞ்சள் வண்ண உடை உடுத்த வேண்டும். இந்த ஆடை அந்நாள் முழுக்க அணிய ஏற்றது. 

வசந்த பஞ்சமி எப்போது?

ஜனவரி மாதம் 25ஆம் தேதி 12:34 pm முதல் ஜனவரி 26ஆம் தேதி 12:39 pm வரை சரஸ்வதிக்கு பஞ்சமி வழிபாடு செய்யலாம். 

சரஸ்வதியை எப்படி வழிபட வேண்டும்? 

வீட்டையும் பூஜையறையையும் தூய்மையாக வைத்து கொள்ளுங்கள். பூஜையறையில் கோலம் வரைந்து, மரப்பலகை போட்டு அதன் மேல் புதிய மஞ்சள் வண்ண துணியை விரித்து கொள்ளுங்கள். பூஜையறையில் வைக்கப்படும் விநாயகரும் மஞ்சள் வண்ணத்தில் தான் இருக்க வேண்டும். இதை தொடர்ந்து சரஸ்வதி தேவியின் உருவ சிலையை அல்லது திருவுருவப் படத்தை மஞ்சள் நீராட்டி மஞ்சள் உடை சாற்றி பூஜிக்க வேண்டும். சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் வண்ண பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். சரஸ்வதி பூஜை அன்று நெய்வேத்தியமாக மஞ்சள் வண்ண போளி, கேசரி, பொங்கல், பால் பாயாசம் ஆகியவற்றை படைத்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்யுங்கள். 

45

இந்த சரஸ்வதி பூஜை அன்று வட இந்திய மாநிலங்களில் வீடுகளிலும், கோயில்களிலும், பொது இடங்களிலும் கூட திருவிழா போல விசேஷ பூஜைகளுடன் வசந்த பஞ்சமி கொண்டாடப்படும். இராஜஸ்தானில், இருக்கும் புஷ்கரில் ‘பிரம்மா சரஸ்வதி கோயில்’, கர்நாடகா ‘உடுப்பி கிருஷ்ணர் கோயில்’, ஒரிசா ‘ புரி ஜெகன்நாதர் கோயில்’ ஆகியவற்றில் வசந்த பஞ்சமி பிரச்சித்தி பெற்ற விழாசாக கொண்டாடப்படுகிறது. 

55

வசந்த பஞ்சமியில் சரஸ்வதி வழிபாட்டால் கிடைக்கும் பலன்கள் 

துவாபரை யுகத்தில் கிருஷ்ணனும், பலராமரும் சாந்தீபனி முனிவரிடம் குருகுல வாசம் செய்ய தொடங்கிய நாள். கல்வி அருளும் தேவி சரஸ்வதி அவதரித்த நாள் என்பதனால் இந்த தினத்தில் குழந்தைகளை பள்ளிகளை சேர்ப்பார்கள். புதிய ஏடு தொடக்குதலை மேற்கொள்வார்கள். இந்த நாளில் பூஜை செய்யும் போது விரதமிருந்தால் சரஸ்வதி தேவியின் பூரண அருளை கிட்டும். 

“சரஸ்வதி நமஸ்த்துப்யம் வாரே காமரூபினி வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்தர் போதுமே ஸதா” என்ற மந்திரமும், “சரஸ்வதி மஹாபாஹே லோச்சனே விஷ்வரூபே விசாலக்ஷி விக்ரம் தேவி நமோஸ்துதே” என்ற மந்திரமும் 21 முறை உச்சரித்து சரஸ்வதி தேவியை வழிபட்டால் பரிபூரண அருள் கிடைக்கும். 

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Recommended image1
மீன ராசியில் சந்திக்கும் 3 கிரகங்கள்.! மார்ச் 15-க்குப் பின் இந்த 4 ராசிகள் வாழ்க்கை அடியோடு மாறும்.!
Recommended image2
Sani Peyarchi 2026: இன்று தொடங்கும் ஏழரை சனி.! பரிகார ராசிகள் எவை? சனியின் பிடியில் இருந்து தப்பிக்க உதவும் பரிகாரங்கள்.!
Recommended image3
தோல்வி நெருங்கும் நேரத்தில் செய்யக்கூடாத ஒரு தவறு… சாணக்கியர் எச்சரிக்கை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved