MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • எந்த சதிவேலைகளையும் செய்வோம்..! 6 சீட்டோடு நிறுத்திக் கொள்ளாதே..! திமுகவுக்கு விசிக எச்சரிக்கை..!

எந்த சதிவேலைகளையும் செய்வோம்..! 6 சீட்டோடு நிறுத்திக் கொள்ளாதே..! திமுகவுக்கு விசிக எச்சரிக்கை..!

எழுச்சித்தமிழர் மதுரை மண்ணில் சொன்னார், கொள்கை வெள்ள களமாடுவோம்.. கோட்டையில் ஒரு நாள் கொடியேற்றுவோம் என்றார். அந்த கோட்டையில் ஒரு நாள் அது நடக்கும்.

2 Min read
Thiraviya raj
Published : Oct 29 2025, 09:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : our own

தமிழகத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிக செய்யூர், திருப்போரூர், அரக்கோணம், வானூர், காட்டுமன்னார்கோயில், நாகை என 6 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில், காட்டுமன்னார் கோயில், செய்யூர், திருப்போரூர், நாகை ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

ஆனால் இந்தமுறை திமுக அதிக எண்ணிக்கையில் போட்டியிட விரும்புவதால் கூட்டணிக்கட்சிகளுக்கு சீட்டுக்களை குறைத்து கொடுக்க முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. விசிகவினர் 25 சட்டமன்றத் தொகுதிகளைத் திமுகவிடம் கோர விரும்புகின்றனர்.

23
Image Credit : our own

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள விசிக நிர்வாகி சங்கத்தமிழன், ‘‘அம்பேத்கருக்கு பிறகு எழுச்சித்தமிழர் தான் அம்பேத்கர். புத்தகத்தை படித்த தோழர்களுக்கு தெரியும் 37 வது தொகுப்பில் இருக்கிறது. ஆங்கிலப் புலமை நமது குடியரசுத் தலைவர் அளவிற்கு நமக்கு இல்லை. தமிழில் தான் நாம் படித்தோம். 37-வது தொகுப்பில் என்ன சொல்கிறார் என்றால், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்றால் 3 எம் வேண்டும் என்கிறார். மணி பவர், மசில் பவர், மைண்ட் பவர். இந்த மூன்று பவர் இருந்தால் இந்தியாவை நாம் கைப்பற்ற முடியும்.

உன் அறைக்குள் எழுதி வை என்கிறார். அதைப்பற்றி யாருமே வெளியில் பேசுவதில்லை. நிறைய புத்தகங்களில் விவாதிக்கவில்லை. தன் அறைக்குள் நான் தான் அடுத்த பிரதமர் எழுதிவை என்று சொல்கிறார். ஒவ்வொரு மனிதனும் எழுதி வைக்க வேண்டும் என்று புரட்சியாளர் அம்பேத்கர் சொல்லியிருக்கிறார். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற எந்த சதி வேலைகளை கூடசெய்யலாம்.

Related Articles

Related image1
விஜயை நாங்கள் அடித்தால்கூட கேட்க ஆளில்லை..! கரூரில் போட்டியிட்டால்.. அதிர்ச்சி தரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்..!
33
Image Credit : our own

சக்திகளும், திட்டங்களும் உருவாக்கும் போர்களத்தில் வெற்றியுடன் கிட்டும் கையாளும் செயல் தந்திரத்தில்.. ஆகையால் விடுதலைச் சிறுத்தைகளை ஆட்டுக்குட்டி அண்ணாமலையோ இல்லை தோழமை கட்சியாக இருக்கிற யாரோ அடக்கி உடுக்க வேண்டும் என்று கனவு காணாதீர்கள். அன்னைக்கு ஆறு சீட்டு கொடுத்தோம், இன்னைக்கும் அதை ஆறு சீட்டு கொடுப்போம் என தோழமையாக நீங்களும் நினைக்காதீர்கள். ஆனால் விடுதலை சிறுத்தை கட்சியின் தொண்டன் அடிமட்ட தொண்டன் இருக்கிற வரை ஆட்சி அதிகாரத்தை நோக்கித்தான் நாங்கள் பயணிப்போம்.

இந்தியாவை 
கைப்பற்றுவது 
எங்களது இறுதி இலக்கு!!

எங்களது இலக்கு 
சார்ஜ் கோட்டை அல்ல! 
செங்கோட்டை!!https://t.co/Rt22JmL3mh

ம. சங்கத்தமிழன் 
VCK Youth Wing pic.twitter.com/6VZwT0h7bW

— Sangathamizhan (@sangathamizhanM) October 28, 2025

எழுச்சித்தமிழர் மதுரை மண்ணில் சொன்னார், கொள்கை வெள்ள களமாடுவோம்.. கோட்டையில் ஒரு நாள் கொடியேற்றுவோம் என்றார். அந்த கோட்டையில் ஒரு நாள் அது நடக்கும்’’ எனப்பேசினார்.

About the Author

TR
Thiraviya raj
தொல். திருமாவளவன்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved