MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • சிங்கிள் ஜட்ஜ் எப்படி இதை விசாரிக்க முடியும்.!? தவெக வழக்கில் ரகசியம் உடைக்கும் சவுக்கு சங்கர்..!

சிங்கிள் ஜட்ஜ் எப்படி இதை விசாரிக்க முடியும்.!? தவெக வழக்கில் ரகசியம் உடைக்கும் சவுக்கு சங்கர்..!

தனி நீதிபதி எப்படி இதை விசாரித்தார்? இந்த வழக்கு அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை மட்டுமே விவாதித்து இருக்க வேண்டும். இது அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை வகுப்பது சம்பந்தமான வழக்கு.

2 Min read
Thiraviya raj
Published : Oct 11 2025, 02:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Image Credit : Asianet News

தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக கூட்ட நெரிசல் தடுப்புக்கான வழிகாட்டுதல் கோரிய மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார், சம்பந்தப்பட்ட கோரிக்கையை விசாரிக்காமல் தவெகவுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்தது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. தலைவர் விஜய்யின் தலைமைத் திறனை கேள்விக்குள்ளாக்கி, "என்ன மாதிரி கட்சி இது? விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லையா?" என்று கடுமையாகக் கண்டனம் தெரிவித்தார். வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

23
Image Credit : Asianet News

உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தவெக பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கரூரில் ஏன் அவசர அவசரமாக உடற்கூராய்வு நடைபெற்றது? உயர்நீதிமன்றத்தில், கூட்ட நெரிசல் தடுப்புக்கான வழிகாட்டுதல் நெறிமுறையை உருவாக்கக்கோரிய மனுவின் நோக்கத்தை மாற்றி, உயர்நீதிமன்றம் ஏன் கட்சியை விமர்சித்தது? நீதிபதி செந்தில் குமார் ஏன் தன்னிச்சையாக விசாரணை குழு அமைத்தார்? "ஒரே நாளில் இரு உத்தரவுகள் எப்படி போடப்பட்டது? உடற்கூராய்வுகள் ஒரே இரவில் எப்படி நடந்தன? விஜய் தப்பி ஓடினாரா? என பல கேள்விகளை முன் வைத்தது உச்சநீதிமன்றம்.

தவெக தரப்பின் விளக்கமே கேட்காமல் உயர்நீதிமன்றம் கருத்துகளை முன்வைத்துள்ளது என்றும் உயர்நீதிமன்றத்தை கடிந்து கொண்டது நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, என்.வி.அஞ்சாரியா அடங்கிய அமர்வு. உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி இந்த வழக்கை எப்படி விசாரிக்க முடியும் என கேள்வி எழுப்பினர்.

அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்கிற தவெ க தாக்கல் செய்துள்ள மனு தற்போது நிலுவையில் இருக்கும் போது மற்ற மனுக்களில் நீதிமன்றம் எப்படி உத்தரவிட்டது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் தவெக விஷயத்தில் நடந்து கொண்டது நெருடலை ஏற்படுத்தி உள்ளது என்றும் கடிந்து கொண்டது உச்சநீதிமன்றம்.

Related Articles

Related image1
பாஜகவை கழட்டி விட்டு விடுவார் எடப்பாடி.! நம்பிக்கை துரோகி- போட்டு தாக்கும் டிடிவி தினகரன்
33
Image Credit : our own

இதுகுறித்து அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் கூறுகையில், ‘‘தனி நீதிபதி எப்படி இதை விசாரிக்க முடியும்? ஏன் விசாரித்தார்? இதில் சிறப்பாக ராகவாச்சாரி வாதத்தை தான் சொல்வேன். கோபால் சங்கரநாராயணன் ரொம்ப இலகுவாக பேசினார். அவர் பேச ஆரம்பித்த உடனே அவர் கேட்க வேண்டியதையெல்லாம் நீதிபதிகள் பேச ஆரம்பித்தனர். தனி நீதிபதி எப்படி இதை விசாரித்தார்? இந்த வழக்கு அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை மட்டுமே விவாதித்து இருக்க வேண்டும். இது அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை வகுப்பது சம்பந்தமான வழக்கு.

மதுரையில் பதிவானது. அது என்னவானது? அதை சென்னைக்கு மாற்றினார்கள். அப்படியானால் நீதிபதி செந்தில்குமார் ஏன் இதை எடுத்தார்? அது மட்டும்தான் தெரியவில்லை. கரூர் எங்கே வரும்? மதுரை உயர்நீதிமன்றத்தில் வரும். மதுரையில் விசாரித்தார்களா? விசாரித்தார்கள். அப்படியானால் சென்னையில் ஏன் இதை விசாரித்தார்? அதுதான் தெரியவில்லை. மீண்டும் மீண்டும் உச்சநீதிமன்ற நீதிபதி அதிலேயே இருந்தார். வாதாடிய அத்தனை வழக்கறிங்களிடமும் அதைத்தான் கேட்டார்’’ எனத் தெரிவித்துள்ளார்.

About the Author

TR
Thiraviya raj
சவுக்கு சங்கர்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved