MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • காங்கிரஸ் வந்தாலும் வேண்டாம்.. ஜாதி, ஊழல் கட்சிகளும் வேண்டாம்... விஜய் எடுக்கும் புது ரூட்..!

காங்கிரஸ் வந்தாலும் வேண்டாம்.. ஜாதி, ஊழல் கட்சிகளும் வேண்டாம்... விஜய் எடுக்கும் புது ரூட்..!

விஜய் அரசியல்வாதிகளை போல அதிகாரத்தை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்கிற வேட்கையைவிட அரசியலை நேர்மையை கொண்டு வரவேண்டும் என்கிற முனைப்பை காட்டுகிறார்.

2 Min read
Author : Thiraviya raj
Published : Dec 31 2025, 04:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

காங்கிரஸ் வந்தாலும் வேண்டாம். அது திமுக கூடவே இருக்கட்டும். மதிமுக, தேமுதிகவும் வேண்டாம் அதிமுக, திமுகவில் இருந்து ஊழல் அரசியல்வாதிகள் வந்தாலும் கதவை திறக்க வேண்டாம். பி.டி.ஆர் போன்ற நல்ல அரசியல்வாதிகள் வந்தால் மட்டும் பரிசீலனை செய்வோம். மக்களுடன் கூட்டணி வைப்போம். மக்கள் வாய்ப்பு கொடுத்தால் நல்லது செய்வோம். இல்லை என்றால் அவரவர்கள் வேலையை பார்ப்போம் என விஜய் தீர்க்கமான முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விஜய்க்கு நெருக்கமான சிலர், ‘‘தமிழக அரசியலில் தவெக எடுத்திருக்கிற நிலைப்பாடு பல ஆண்டு காலமாக நிலவி வரும் திராவிட கட்சி முறைகளான சமரச அரசியலுக்கு ஒரு சவாலாக அமைந்து வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளுக்கோ, அல்லது நீண்ட காலமாக அதிகாரத்தில் இருக்கக்கூடிய திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கோ தன்னுடைய கதவுகளை விஜய் திறக்க விரும்பவில்லை. குறிப்பாக காங்கிரஸ் கட்சி அதிருப்தியில் வெளியே வந்தாலும் அது திமுக உடனே இருக்கட்டும் என நினைக்கிறார். தவெக ஒரு தனித்துவமான மாற்றாகவே இருக்க வேண்டும் என்கிற அவருடைய எண்ணத்தை பிரதிபலிக்கிறது. சாதி கட்சிகளோ, பலம் குறைந்த சின்ன கட்சிகளோ தன்னுடைய அஸ்திவாரத்தை சரித்து கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.

24
Image Credit : Asianet News

விஜயின் கொள்கை முடிவுகள்ள ரொம்ப முக்கியமானது ஊழல் அரசியல்வாதிகள் மீது அவருடைய கடுமையான நிலைப்பாடு தான். திமுக இல்லை, அதிமுகவிலிருந்து வரக்கூடிய நிர்வாகிகள் ஊழல் பின்னணி கொண்டவர்களாக இருந்தால் அவர்களை தனது கட்சியில் இணைக்க வேண்டாம் என முடிவெடுத்து இருக்கிறார். அதேவேளை ஆளும் கட்சியில் இருந்தாலும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் போன்ற நேர்மையான, படித்த அரசியல்வாதிகள் மேல் தவெகவுக்கு ஒரு மென்மையான அணுகுமுறை இருக்கிறது. கூட்டணி பற்றி பேசும்போது விஜய் முன்னிறுத்துவது மக்களை மட்டும்தான். மற்ற கட்சிகளுட்ன் பேரம்பேசி தொகுதி பங்கீடு செய்வதைவிட, மக்களுடன் நேரடியாக பங்கேற்று களமிறங்குவதுதான் நிரந்தர வெற்றியைட் தரும் என அவர் நம்புகிறார்.

Related Articles

Related image1
ஒருத்தர்கூட மிஸ்ஸாகி விட கூடாது.. அதிமுக மா.செ.க்களுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த இபிஎஸ்..!
34
Image Credit : Google

திராவிடக் கட்சிகள் தங்களது வாக்குகளை தக்க சிறிய கட்சிகளை சார்ந்திருக்கும் வேளையில் விஜய் ஒரு தனிப்பாதையை தேர்வு செய்ய முயற்சிக்கிறார். மக்களே தனது பலம் என கருதுகிறார். ஒருவேளை மக்கள் வாய்ப்பு தந்தால் ஒரு நேர்மையான ஆட்சியை வழங்குவதற்கு திட்டமிட்டு இருக்கிறார். விஜயின் அரசியல் திட்டம் வெற்றி என்பது இரட்டை நிலைப்பாட்டை மட்டும் கொண்டது கிடையாது. வாய்ப்பு கிடைத்தால் தன்னுடைய முழு திறமையுடன் நல்லது செய்வது, இல்லை என்றால் அரசியலுக்காக கொள்கைகளை அடகு வைக்காமல் அமைதியாக தன்னுடைய பாதையில் போவது என்பதே அவரது இப்போதைய முடிவாக இருக்கிறது.

இது மற்ற அரசியல்வாதிகளை போல அதிகாரத்தை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்கிற வேட்கையைவிட அரசியலை நேர்மையை கொண்டு வரவேண்டும் என்கிற முனைப்பை காட்டுகிறது. திராவிட கட்சிகளுடைய பிடிவாதமான கோட்டை தவிர்க்கிறார். ஆனால் ஜாதி அரசியலையும், ஊழல் கலாச்சாரத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு விஜய் எடுக்கக்கூடிய இந்த தூய்மையான அரசியல் முயற்சி இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெரும். ஒடுக்கப்பட்ட மக்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அதே வேளையில மதவாதம் மற்றும் பிரிவினைவாத சக்திகளுக்கும் இடம் கொடுக்காத கொள்கையை அவர் கடைபிடிக்கிறார்.

44
Image Credit : Asianet News

இது புதிய பண்பாட்டு மாற்றத்திற்கான உதவியாக அமையும் என பார்க்கப்படுகிறது. விஜயின் இந்த தீர்க்கமான முடிவுகள் அக்னி பரிட்சையாக இருக்கும். மற்ற கட்சிகள் கூட்டணிகளுக்காக பேச்சுவார்த்தை நடத்தும்போது விஜய் தன்னுடைய பூத் கமிட்டிகளை பலப்படுத்துவதிலும், இளைஞர்களை அரசியல் படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறார். மக்களுக்காக நான் மக்களிடம் நான் என்கிற அவருடைய தாரகம் மந்திரம் வெற்றியடைந்தால் அது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு பொற்காலத்தின் தொடக்கமாக அமையும். இல்லை என்றால் தன்னுடைய கொள்கையை விட்டுக் கொடுக்காத ஒரு தலைவரா அவர் வரலாற்றில் நிலைத்து நிற்பார்’’ என்கிறார்கள்.

About the Author

TR
Thiraviya raj
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
இதைக்கூட செய்ய முடியலனா அப்புறம் எதுக்கு முதல்வர் பதவி..! ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட இபிஎஸ்!
Recommended image2
ஒருத்தர்கூட மிஸ்ஸாகி விட கூடாது.. அதிமுக மா.செ.க்களுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த இபிஎஸ்..!
Recommended image3
இந்தியா- பாகிஸ்தான் போரை நிறுத்தியதே நாங்கதான்..! உலகத்துக்கே நாட்டாமையாக கொக்கரிக்கும் சீனா..!
Related Stories
Recommended image1
ஒருத்தர்கூட மிஸ்ஸாகி விட கூடாது.. அதிமுக மா.செ.க்களுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த இபிஎஸ்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved