- Home
- Politics
- இடியாப்பச் சிக்கலில் எடப்பாடி..! நொந்து நூடுல்ஸ் ஆகும் ஸ்டாலின்..! சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே சோதனை..!
இடியாப்பச் சிக்கலில் எடப்பாடி..! நொந்து நூடுல்ஸ் ஆகும் ஸ்டாலின்..! சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே சோதனை..!
எதிர்பார்ப்புகள் இரண்டு பிரதான கட்சிகளையும் முடிவெடுக்க முடியாத சூழலுக்கு தள்ளும் என்பதால் நடக்கவிருக்கும் மாநிலங்களவை தேர்தல் என்பது 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி அரசியலை தீர்மானிக்கும் முக்கிய கருவியாக மாறி உள்ளதாக பார்க்கப்படுகிறது.

ராஜ்யசபா எம்பி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய தேர்தல் ஆணையம். தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் திமுக தரப்பில் திருச்சி சிவா, அதேபோல அதிமுக தரப்பில் எம்பி தம்பிதுரை, கூட்டணி கட்சியான தமிழ் மாநில காங்கிரஸின் ஜி.கே.வாசன் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல் மார்ச் 16ஆம் தேதி நடக்கும் என தேர்தல் ஆணையம் உறுதியாக அறிவித்து விட்டது. இந்நிலையில், ராஜ்ய சபா சீட்டு உறுதி என்பதால் தான் சட்டமன்ற தொகுதிகளை குறி வைத்து வாங்க அன்புமணி தரப்பு கொண்டதாகவும் சொல்லப்பட்டது.
ஆகையால் இரண்டு எம்.பி., பதவிகளில் ஒரு எம்.பி., பதவி அன்புமணி தரப்புக்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. எஞ்சிய ஒரு பதவிக்கு கடும் போட்டோ போட்டி நிலவும் என கணிக்கப்படுகிறது. அதிமுகவின் தம்பிதுரை நீண்ட காலமாக மாநிலங்களவை எம்பி பதவியில் இருந்து வருபவர் என்பதால் மீண்டும் தம்பிதுரை மாநிலங்களவை பதவியை கேட்க வாய்ப்பு இருக்கிறது. அதிமுக கூட்டணியில் ஜி.கே.வாசன் மாநிலங்களவை எம்.பியாக இருக்கிறார். அவருக்கு பாஜக உட்பிரிவில் வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம் திமுகவுக்கு கூடுதல் எண்ணிக்கையில் சீட்டு இருந்தாலும் போட்டி கடுமையாகவே இருக்கிறது. திமுகவிலேயே மாநிலங்களவை பதவிக்கு பலரும் குறி வைத்து வருகிறார்கள். முக்கிய நிர்வாகிகள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய நெருக்கடியும் திமுகவுக்கு இருக்கிறது. ஏற்கனவே கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும் மாநிலங்களவை சீட்டு கேட்கும் நிலையில் மதிமுகவும் சீட்டு கேட்டு வருகிறது.
இப்போது தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்துள்ளதால் சீட்டு ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக பேசிக் கொள்ளப்படுகிறது. சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி உடன்பாடு மறுபுறம் மாநிலங்களவை இடங்களுக்கான பங்கீடு என இரட்டை அழுத்தத்தை திமுகவும் ஒரே நேரத்தில் சந்திக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கங்கள் தெரிவிக்கின்றனர். எதிர்பார்ப்புகள் இரண்டு பிரதான கட்சிகளையும் முடிவெடுக்க முடியாத சூழலுக்கு தள்ளும் என்பதால் நடக்கவிருக்கும் மாநிலங்களவை தேர்தல் என்பது 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி அரசியலை தீர்மானிக்கும் முக்கிய கருவியாக மாறி உள்ளதாக பார்க்கப்படுகிறது.
