- Home
- Politics
- விஜயை முதல்வராக்க ஒட்டுமொத்தமாய் கூடும் கிறிஸ்தவ மத போதகர்கள்..? பகீர் கிளப்பும் அர்ஜூன் சம்பத்..!
விஜயை முதல்வராக்க ஒட்டுமொத்தமாய் கூடும் கிறிஸ்தவ மத போதகர்கள்..? பகீர் கிளப்பும் அர்ஜூன் சம்பத்..!
அப்பாவி இந்து தமிழ் இளைஞர்கள் சினிமா மோகத்தில் ஜோசப் விஜய் பின்னால் செல்கிறார்கள். இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழகத்தை காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது

தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ மதபோதகர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கிறிஸ்த ஒருங்கிணைப்பு மாநாட்டை டிசம்பர் 2ம் தேதி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில் இந்த மாநாடு விஜயின் அரசியலுக்கு ஆதரவு திரட்டும் வகையில் நடத்தும் விதமாக நடத்தப்படுகிறது என தமிழக இந்து முன்னணி தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம்சாட்டி உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இத்தனை நாள் சிறுபான்மை எனும் பெயரில் விதவிதமாய் சலுகைகளை அனுபவித்து வந்தவர்களுக்கு, இப்போது பயம் வந்துள்ளது. இந்து தமிழர்கள் கொஞ்ச கொஞ்சமாக தாங்கள் திராவிடக்கட்சிகளால் இழிவுபடுத்தப்படுகிறோம் என்பதையும், ஏமாற்றப்படுகிறோம் என்பதையும் புரிந்து கொண்டு உள்ளார்கள். மதமாற்றம் எவ்வகையிலும் தமக்கு பயன்படப்போவதில்லை என்பதையும், மதமாற்றத்தினால் தீண்டாமை இழிவுகள் ஒளிந்து போகவில்லை என்பதும் சாதி ஏற்றத்தாழ்வுகள் கிருத்துவ மதத்திற்குள்ளும் தொடர்கிறது என்பது பட்டியலின மக்கள் சர்ச்சைகளுக்குள்ளும் கிறிஸ்தவ புதை காடுகளுக்குள்ளும் பாகுபாடு காட்டப்படுகிறார்கள் என்பதும் வெட்ட வெளிப்படையாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
செவிடர்களுக்கு கேட்புத்திறனோ, ஊமைகளுக்கு பேசும் திறனோ, முடவர்களுக்கு நடக்கும் திறனோ, கிறிஸ்தவ ஜெப கூட்டங்களால் வரப்போவதில்லை என்பதையும் உணரத் தொடங்கிவிட்டனர். இது ஒரு மோசடி என்பதையும் தெரிந்து கொண்டுள்ளனர். கிறித்துவர்கள் ஒன்று சேர்ந்து திராவிடத்தை ஆதரிக்கும் நோக்கத்துடன்தான் இந்த கூட்டம் நடக்க உள்ளது என்று தோன்றுகிறது. இந்துக்கள் சிந்தாமல் சிதறாமல் திருட்டு திராவிடத்தை விட்டு வெளியேறி, ஒன்று சேரவேண்டிய தருணம் வந்துவிட்டது.
கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மூலம் சேவை எனும் பெயரில் மக்களை ஏமாற்றி மதமாற்றம் செய்யும் உள்நோக்கத்துடனே இவர்கள் காரியங்கள் நடைபெற்று வருகிறது இதற்கு திராவிட கழகம் கம்யூனிஸ்டுகளின் ஆதரவு முழுமையாக உள்ளது. கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள கோவா மாநிலத்திலும், நாகலாந்து மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், பாரதிய ஜனதா கட்சியை மதவெறி பிடித்த கிறிஸ்தவ சபைகளிடம் இருந்து வெளியேறிய கிறிஸ்தவ மக்கள் ஆட்சியில் அமர்த்தி விட்டனர்.
கேரள மாநிலத்தில் கிறிஸ்தவ பெண்கள் திட்டமிட்டு லவ் ஜிகாத் வளையத்திற்குள் சிக்க வைக்கப்பட்டு இஸ்லாமிய மற்றும் கம்யூனிச வெறியர்களால் பாதிக்கப்படுகின்றனர் இதுகுறித்து கேரள மாநில கிறிஸ்தவ சபையினர் பேச துவங்கி விட்டனர் கேரள மாநிலத்தில் கிறிஸ்தவர்களுக்கு பாரதிய ஜனதா கட்சி நெருக்கமாகி வருகிறது. தமிழகத்தில் கிரிப்டோ கிறிஸ்தவர்கள் அதிகமாகி அரசு இயந்திரங்களில் ஊடுருவி குறிப்பாக கல்வித்துறையிலும் மருத்துவத்துறையிலும் ஊடுருவி கிறிஸ்தவர்களுக்கு சாதகமாக அரசாங்கத்தை செயல்பட வைக்கிறார்கள்.
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து தமிழர்கள் சிறுபான்மையாகி விட்டார்கள். அரசு நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், நீதித்துறை, காவல்துறை ஆகிய அனைத்திலும் கிறிஸ்தவ தாக்கம் அதிகரித்துள்ளது. சிறுபான்மை இந்துக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் சாதிவாரியாக சபைகளை அமைத்து இந்து தமிழர்களை சாதிவாரியாக பிரித்து சூழ்ச்சி செய்து, மோசடி மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
காருண்யா தினகரன், மோகன் லாசரஸ், எஸ்ரா சற்குணம் உள்ளிட்டோர் வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டுள்ளார்கள். ஆடம்பர உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். கிறிஸ்துவ மக்களை ஏமாற்றி வருகிறார்கள். கிறிஸ்துவ சபைகள் கிறிஸ்துவ மக்களை ஏமாற்றி வருகின்றன. இந்நிலையில் இத்தகைய மோசடி மத போதகர்களின் பிடியிலே இருந்து கிறிஸ்தவர்களையும் விடுவித்து அவர்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் பொறுப்பை பாரதிய ஜனதா கட்சி செய்து வருகிறது. மத்திய அரசு செய்து வருகிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சியை அரசு இயந்திரங்களில் ஊடுருவி கிரிப்டோ கிருஸ்தவர்கள் மூலம் தங்களது கல்வி நிறுவனங்கள் மூலம் மருத்துவமனைகள் மூலம், திராவிட மாடல் ஒப்புதலுடன் ஒத்துழைப்புடன் இந்த கிறிஸ்தவ மத போதகர்கள் சதி வேலைகளை செய்து வருகிறார்கள். இதில் ஒரு கட்டமாக இனிகோ இருதயராஜ், காங்கிரஸ் கட்சி, பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் ஒரு லட்சம் கிறிஸ்தவ மத போதகர்கள் ஒன்று திரண்டு ஜோசப் விஜய் முதலமைச்சர் ஆவதற்காக அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக பாதிரியார் ஒருவர் பேசிய காணொளி வைரலாகி உள்ளது.
தமிழக வெற்றி கழகம் கிறிஸ்தவர்கள் வெற்றி கழகமாக மாறி உள்ளது. லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜுனா ஜான் ஆரோக்கியசாமி , ஜேபிஆர் கல்வி நிறுவனங்களின் முதலாளிகள், ஒரு கிறிஸ்தவரை முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக இடம்,பொருளாதார வசதிகளை ஜோசப் விஜய்க்கு கொடுக்கிறார்கள். லயோலா கல்லூரி நிர்வாகிகளில் ஒருவராக திகழ்ந்த பிரிட்டோ திரையுலகிலும், கல்வி உலகிலும், அரசியலிலும் ஜோசப் விஜய்க்கு பின்னணியில் உள்ளார்.
அப்பாவி இந்து தமிழ் இளைஞர்கள் சினிமா மோகத்தில் ஜோசப் விஜய் பின்னால் செல்கிறார்கள். இவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழகத்தை காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது’’ எனத் தெரிவித்துள்ளார்.
