வேதா இல்லத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்..!
மறைந்த முதலமைச்சர், ஜெயலலிதா வாழ்க்கையை பற்றி அனைவரும் அறிந்து கொள்ளும் விதத்தில் அவரது வேதா இல்லம் இன்று பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கிறார், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
மறைந்த முதலமைச்சர், ஜெயலலிதா வாழ்க்கையை பற்றி அனைவரும் அறிந்து கொள்ளும் விதத்தில் அவரது வேதா இல்லம் இன்று பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைக்கிறார், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
இதனால் தற்போது, போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லம் முன்பு 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், சற்று நேரத்திற்கு முன், வேதா இல்லத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
வேதா இல்லத்திற்கு வருகை தந்த முதலமைச்சர், முன்னதாக... ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு பூ தூவி மரியாதை செய்தார்.
பின்னர் வேதா இல்லம் குறித்த கட்டவிட்டு ஒன்றை திறந்து வைத்தார்.
அதை தொடர்ந்து, வேதா இல்லத்தை ரிப்பன் வெட்டி திறந்தார்.
இதில் அதிமுக கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.