- Home
- Politics
- விஜய்க்கு இடியாய் இறங்கிய அதிர்ச்சி... தவெகவில் இருந்து விலகும் மிக மிக முக்கியப் புள்ளி..!
விஜய்க்கு இடியாய் இறங்கிய அதிர்ச்சி... தவெகவில் இருந்து விலகும் மிக மிக முக்கியப் புள்ளி..!
அவ்வப்போது ஜான் ஆரோக்கியசாமியால் தவெகவுக்குள் கோஷ்டி மோதல்கள், அதிருப்திகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. விஜய், ஜான் ஆரோக்கியசாமியை மட்டுமே நம்பி முடிவெடுப்பதாக இரண்டாம் கட்ட நிர்வாகிகள் கடுப்பில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

தவெக தலைவர் விஜயின் முக்கிய அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி. விஜய் இவருடன் இணைந்து தேர்தல் வியூகங்கள், மாநாடு திட்டமிடல், பிராண்டிங் செய்துருகிறார். வாய்ஸ் ஆப் காமன்ஸ் என்னும் வியூக நிறனத்தை நடத்தி வரும் ஆதவ் அர்ஜுனா தவெகவில் இணைந்தபோதும் கூட ஜான் ஆரோக்கியசாமி தவெகவில் தொடர்ந்து வருகிறார்.
ஆனாலும் அவ்வப்போது ஜான் ஆரோக்கியசாமியால் தவெகவுக்குள் கோஷ்டி மோதல்கள், அதிருப்திகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. விஜய், ஜான் ஆரோக்கியசாமியை மட்டுமே நம்பி முடிவெடுப்பதாக இரண்டாம் கட்ட நிர்வாகிகள் கடுப்பில் இருப்பதாகவும் கூறப்பட்டது. சில விஜய் ரசிகர்கள் இவர் மீது குற்றச்சாட்டுகளை வெளிப்படையாகவே முன் வைத்தனர்.
தேர்தல் வியூக வேலைகளுக்காக ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆப் காமன்ஸ் அலுவலகத்தில் பெரும் இளைஞர் பட்டாளம் வேலை பார்த்துக் கொண்டுள்ளது. இதே அலலகத்தில் விஜயின் உத்தரவுப்படி ஜான் ஆரோக்கிய சாமி டீமில் இருக்கிற சிலரும் வேலை பார்த்து வருகின்றனர். ஆனால் இப்போது அந்த அலுவலகத்தில் இருந்து ஜான் ஆரோக்கிய சாமியின் டீம் ஒட்டுமொத்தமாக விலகி விட்டதாக தகவல். தவெகவில் ஆதவ் வருகைக்கு பிறகு, தான் புறக்கணிக்கப்படுவதாக நினைக்கிற ஜான் ஆரோக்கிய சாமி, விஜய் பக்கமும் அதிகமாக போவதில்லை என்கிறார்கள்.
கட்சியின் மூன்றாம் ஆண்டு விழாவை ஆதவ் அர்ஜூனா தன் வீட்டில் விஜய்க்கும், முக்கிய நிர்வாகிகளுக்கும் ஒரு மெகா விருந்து கொடுத்தார். அந்த விருந்திலும் ஜான் கலந்து கொள்ளவில்லை. எல்லாத்துக்குமே காரணம் கட்சியில் யார் பேசினாலும், அறிக்கை கொடுத்தாலும் தான் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும். தன்னுடைய வியூகங்களைத் தான் அறிக்கையாகவும், பேட்டியாகவும் இருக்க வேண்டும் என்பது ஜான் ஆரோக்கியசாமியின் கொள்கை. ஆனால் ஆதவ் தன்னிச்சையாக பேசுவதும், பேட்டி கொடுப்பதும் விஜய்க்கு பிடித்துப் போக, ஜான் ஆரோக்கியசாமி அப்செட். இதனால் தேர்தல் நெருக்கத்தில் ஜான் ஆரோக்கியசாமி தவெகவில் இருக்க மாட்டார் என்கிறார்கள் பனையூர் வட்டாரத்தினர்.
