MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 ஜாக்பாட்..! பொங்கலுக்கு மெகா அறிவிப்பு..! திமுக அரசின் அதிரடி ப்ளான்..!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2 ஜாக்பாட்..! பொங்கலுக்கு மெகா அறிவிப்பு..! திமுக அரசின் அதிரடி ப்ளான்..!

தமிழகத்தில் ஏற்கனவே அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தொகையாக ரூ.1000 பணமும், பொருட்களும் கொடுத்தார்கள். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொங்கலுக்கு பணம் எதுவும் கொடுக்கவில்லை. பொருட்களை மட்டும் தான் கொடுத்து வந்தார்கள்.

2 Min read
Thiraviya raj
Published : Nov 18 2025, 11:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

திமுக அறிவித்த மகளிர் உரிமைத் தொகையே ஆட்சி அமைக்க முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இந்தத் திட்டம் 2023-ல் தொடங்கப்பட்ட இதே போன்ற அறிவிப்பு தான் 2025 பீகார் சட்டமன்றத் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியின் அபார வெற்றிக்கு காரணமாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் டெல்லியில் மஹிளா சம்ரிதி யோஜனா திட்டடத்தில் மாதம் ரூ.2500 தேர்தல் வாக்குறிதியாக அறிவித்தே பெரும் வெற்றி பெற்றது பாஜக ஆட்சி அமைந்தது. ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் இதே போன்ற மகளிர் உரிமை திட்டங்கள் ஆட்சி அமைக்க கை கொடுத்தன.இது தேர்தலுக்கு முன் பெண் வாக்காளர்களை ஈர்க்கும் உத்தியாக அனைத்து மாநிலங்களிலும் பரவலாகி வருகிறது.

24
Image Credit : Asianet News

தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் 2023-ல் தொடங்கப்பட்டது. தகுதியான ஆனால் இதுவரை சேர்க்கப்படாத பெண்களுக்கு புதிய விண்ணப்பங்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பீகாரின் என்.டி.ஏ கூட்டணியை வெற்றிபெற வைத்ததே மகிளா ரோஜ்கர் யோஜனா திட்டம்தான் என பலரும் கூறி வருகின்றனர். தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிதி கொடுப்பது போல் பீகாரில் வீட்டு பெண்களுக்கு ரூபாய் பத்தாயிரம் கடன் கொடுத்தார்கள். இந்த கடனை 2 லட்சத்திலிருந்து ₹ 10 லட்சம் வரை தரும் திட்டம் அறிவிக்கப்பட்டது. நிதீஷ் குமார் பிரச்சாரத்தில்கூட இந்த கடன் ரூபாய் 10 ஆயிரத்தை பெண்கள் திருப்பி செலுத்த வேண்டாம் என்று அதிரடியாக அறிவித்தார். இதுதான் ஜாதி, மதம் எதுவும் பார்க்காமல் பெண்களின் ஓட்டுகளை ஒட்டு மொத்தமாக நிதிஷ்- பாஜக கூட்டணிக்கு அள்ளிக் கொண்டு வந்து சேர்த்தது. இந்நிலையில் தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் ஏற்கெனவே வழங்கப்படும் ரூ.100 மகளிர் உரிமைத்தொகையை உயர்த்தி வழங்கலாம் என்கிற முடிவுக்கு தமிழக அரசு முடிவுக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Related Articles

Related image1
அமித்ஷா சொன்னதை வெளிப்படையாக பேச முடியாது.. அப்படி என்ன சீக்ரெட்டா இருக்கும்..?
34
Image Credit : Asianet News

தமிழகத்தில் ஏற்கனவே அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தொகையாக ரூ.1000 பணமும், பொருட்களும் கொடுத்தார்கள். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பொங்கலுக்கு பணம் எதுவும் கொடுக்கவில்லை. பொருட்களை மட்டும் தான் கொடுத்து வந்தார்கள். அதுவும்கூட வெள்ளம் தண்ணியாக உருகுகிறது. தரமான பொட்களாக இல்லை என பல புகார்கள் கூறப்பட்டு மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். தேர்தல் நெருங்கும் வேளையில் இதையெல்லாம் சரி கட்டி மக்களிடம் நல்ல அபிப்ராயத்தி உருவாக்க வேண்டும் ஆகையால், பொங்கலுக்கு ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் மூன்றாயிரம் ரூபாய் கொடுத்துவிடலாம்.

அதுதான் சரியான முடிவாக இருக்கும் என மூத்த அமைச்சர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு ஆலோசனை சொல்லி இருப்பதாகக் கூறப்படுகிறது.

44
Image Credit : our own

இது பற்றி அதிகாரிகளிடம் விசாரித்த போது, ‘‘பொங்கலுக்கு ஒவ்வொரு ரேஷன் கார்டுகளுக்கும் ரூபாய் 3000 கொடுப்பதற்கு வழி இருக்கிறதா? அதனை ஆராயுங்கள் என உயர் மட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளது. அவ்வளவு நிதி எல்லாம் இல்லை. அதிகபட்சமாக ரூ. 1000 வேண்டுமானால் சாத்தியம். அந்த அளவுக்கு தான் நிதி நிலைமை இருக்கிறது எனக் கூறி இருக்கிறார்கள். இதைக் கேட்டுக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகையாக ரூ.2000 கொடுக்கலாம். அதற்குண்டான நிதி ஏற்பாடுகளை கவனத்தில் கொள்ளுங்கள் என அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார். அதனால் கூடிய விரைவில் பொங்கல் பரிசு தொகை ரூ. 2000 பற்றிய அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

அது மட்டுமல்ல, முதல்வர் ஸ்டாலின் அந்த அதிகாரிகளிடன் மகளிர் உரிமை திட்டத்தை உயர்த்தி வழங்குவது பற்றியும் ஆலோசித்து இருக்கிறார். தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ. 1000 கொடுக்கிறோம். ஜனவரியில் இருந்து விடுபட்ட மகளிருக்கும் மகளிர் உரிமைத்தொகையை வழங்கப்போகிறோம். கொடுக்கப் போறோம் என்று அதிகாரிகள் கூறி இருக்கின்றனர். அப்போது முதல்வர் ஸ்டாலின் இந்த மகளிர் உதவித் தொகையை ரூ. 1500 என சற்று உயர்த்தி ஜனவரியில் இருந்து வழங்கலாமா? என்று கேட்டிருக்கிறார்.

அதிகாரிகள் அதற்கு சில ஆலோசனைகளை வழங்க அதையும் கேட்டுக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். ஆகையால் பொங்கல் பரிசு, மகளிர் உரிமைத் தொகை உயர்வு என அடுத்தடுத்த இரண்டு அறிவிப்புகள் எந்த நேரத்திலும் அதிரடியாக வெளியாகலாம்’’ என்று கூறப்படுகிறது.

About the Author

TR
Thiraviya raj
தமிழ்நாடு பட்ஜெட்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved