- Home
- Lifestyle
- Dry fruits: உலர்ந்த பழங்களில் நன்மைகள் ஏராளம்..? ஆனால் அதிகம் சாப்பிடும் போது....என்ன ஆபத்து தெரியுமா..?
Dry fruits: உலர்ந்த பழங்களில் நன்மைகள் ஏராளம்..? ஆனால் அதிகம் சாப்பிடும் போது....என்ன ஆபத்து தெரியுமா..?
Dry fruits: 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்ற பழமொழிக்கு ஏற்ப, உலர்ந்த பழங்களை அளவோடு சாப்பிடவில்லை என்றால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும்.

Dry fruits:
உலர்ந்த பழங்களை உட்கொள்ளவது உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை தரும். இதனால், சமீப காலமாக உலர் பழங்கள் சாப்பிடுவோர் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. உடலுக்கு ஆரோக்கியம் தரும் எந்த டயட் முறைகளை பின்பற்றினாலும், உலர்ந்த பழங்கள் உட்கொள்வதை பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், உலர் பழங்களை அளவுடன் சாப்பிடுவதே ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும். இல்லையென்றால் பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும். அப்படியாக, அதிகம் உட்கொள்வதால் ஏற்படும் உடல் உபாதைகள் பற்றி தெரிந்து க்கொள்வோம்.
Dry fruits:
குடல் பிரச்னை:
உலர்ந்த பழங்களில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது. இது ஆரோக்கியத்திற்கு சிறப்பான பங்களிப்பை தருகிறது. இருப்பினும், அதிகபடியான நார்ச்சத்து உட்கொள்வது குடலுக்கு பல்வேறு பாதிப்புகளை உண்டாகும். குறிப்பாக உலர்ந்த பழங்களை அதிகமாக உட்கொள்வது வாயு, மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
Dry fruits:
எடை அதிகரிப்பு:
உடலுக்கு பல்வேறு நன்மைகளை அள்ளி தரும், உலர் பழங்கள் தினமும் 250 கலோரி அளவு உட்கொள்வது ஒரு மாதத்தில் ஒரு கிலோ உடல் எடை அதிகரிப்பதற்கு வழிவகுத்துவிடும். இரண்டு பேரீச்சம் பழம், இரண்டு டேபிள்ஸ்பூன் புளூபெர்ரி, இரண்டு அத்திப்பழங்கள் சாப்பிடுவது சுமார் 60 கலோரிகளை உடலுக்கு வழங்கும். அதனால் சாப்பிடும் உலர் பழங்களின் கலோரி அளவை கருத்தில் கொண்டு அதற்கு தகுந்தாற்போல் பழங்களை சாப்பிடுவது அவசியம்.
dry fruits
சிதையும் பல்:
உலர்ந்த பழங்களை அதிகம் சாப்பிடும்போது சர்க்கரையை அதிகரித்து பல் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தும். ஏனெனில், பிரக்டோஸ் வடிவத்தில் இயற்கையான சர்க்கரை உலர்ந்த பழங்களில் இருக்கிறது. சில உலர் பழங்கள் பல் இடுக்குகளுக்குள் ஒட்டிக்கொண்டு பற்சிதைவை ஏற்படுத்திவிடும்.எனவே, உலர்ந்த பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் பருக வேண்டும்.