MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • கொட்டாவி விடுறப்ப கண்ணீர் ஏன் வருது தெரியுமா?

கொட்டாவி விடுறப்ப கண்ணீர் ஏன் வருது தெரியுமா?

Yawn and Tears : கொட்டாவி விடும்போது ஏன் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது. அது ஏன் தெரியுமா? 

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Jan 27 2025, 12:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கொட்டாவி விடுறப்ப கண்ணீர் ஏன் வருது தெரியுமா?

கொட்டாவி விடுறப்ப கண்ணீர் ஏன் வருது தெரியுமா?

மனிதனுக்குள் நடக்கும் சில இயற்கையான விஷயங்களை நிறுத்தவே முடியாது அவற்றில் ஒன்றுதான் கொட்டாவி. மனிதன் முதல் மிருகங்கள் வரை என அனைவருக்கும் கொட்டாவி வரும். பொதுவாக தூக்கம் வந்தால் கொட்டாவி வரும் என்று தான் சொல்வார்கள். இத்தகைய சூழ்நிலையில், கொட்டாவி ஏன் வருகிறது? கொட்டாவி விடும்போது கண்ணீர் வருவது ஏன்? என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

25
கொட்டாவி வருவது ஏன்?

கொட்டாவி வருவது ஏன்?

கொட்டாய் வருவதற்கு முக்கிய காரணம் எதுவென்றால், அது மூளை. ஏனென்றால், நம்முடைய உடலின் வெப்பநிலையானது 30 முதல் 40 செல்சியஸ் வரை தான் இருக்கும். மூளையின் வெப்பநிலை எப்போது அதிகரிக்கிறதோ அப்போதுதான் மூளையானது கொட்டாவியை வரவழைக்கும். உங்களுக்கு தெரியுமா சராசரியாக ஒரு மனிதனுக்கு ஒரு நாளைக்கு 20 முறை கொட்டாவி வருமாம். ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், கருவில் இருக்கும் குழந்தை கூட கொட்டாவி விடுமாம்.

35
கொட்டாவி அதிகமாக வந்தால் என்ன?

கொட்டாவி அதிகமாக வந்தால் என்ன?

கொட்டாவி விடுவது பிரச்சனை அல்ல. ஆனால் அது அளவுக்கு அதிகமாக வருவது தான் பிரச்சனை. பொதுவாக கல்லீரல் பிரச்சனை, மூளை கை, கால் வலி சரியாக தூங்காமல் இருப்பது போன்றவற்றால் தான் கொட்டாவி வரும். அதுபோலவே சில மருந்துகளின் பக்கவிளைவுகளாலும் கொட்டாவி வரும். முக்கியமாக மூளைக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் இருந்தாலோ அல்லது சுறுசுறுப்பாக இல்லாமல் இருந்தாலோ கொட்டாவி கண்டிப்பாக வரும்.

இதையும் படிங்க:  அதிகமாக கொட்டாவி விடுவது ஆபத்து.. உடல் பேசும் மொழியை கேளுங்கள்

45
கொட்டாவி விடும்போது கண்ணீர் வருவது ஏன்?

கொட்டாவி விடும்போது கண்ணீர் வருவது ஏன்?

கொட்டாவி விடும் போது கண்ணீர் வருவது ஏன் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இதற்கு முக்கிய காரணம் புருவங்களுக்கு கீழே அமைந்துள்ள லாக்ரிமல் சுரப்பிகள் தான். பொதுவாக இந்த சுரப்பிகள் நாம் அழும் போது கண்ணீரை உற்பத்தி செய்கின்றது. கொட்டாவி விடும்போது நம்முடைய தசைகள் சுருங்குகின்றது இதன் காரணமாக லாக் ட்ரிமல் சுரப்பிகளில் அழுத்தம் ஏற்பட்டு, கண்ணீரை வெளியேற்றுகின்றது. இதனால்தான் நாம் கொட்டாவி வரும்போது கண்ணீர் வருகிறது.

இதையும் படிங்க:  ஒருத்தர் கொட்டாவி விட்டால் உடனே நமக்கும் கொட்டாவி வருதே ஏன் தெரியுமா? அதுக்கு இப்படி ஒரு வரலாறா?! 

55
கண்ணீர் வரவில்லையென்றால் என்ன?

கண்ணீர் வரவில்லையென்றால் என்ன?

கொட்டாவி விடும் போது கண்ணீர் எல்லாருக்கும் வரும் என்று சொல்லிவிட முடியாது. ஏனெனில் சிலருக்கு கொட்டாவி விடும்போது கண்ணீர் வரவே வராது. இதற்கு முக்கிய காரணம் கண்கள் வறண்ட நிலையில் இருப்பதால்தான். கண்கள் வறண்டு இருந்தால் லாக்ரிமல் சுரப்பியால் கண்ணீரை வெளியேற்றுவதற்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கும். இதன் காரணமாக தான் சிலருக்கு கொட்டாவி விடும்போது கண்ணீர் வருவதில்லை. ஆனால் கொட்டாவி வரும்போது கண்டிப்பாக கண்ணீர் வரவேண்டும் என்று அவசியமில்லை. அது இயல்பானது என்பதால் வரலாம், வராமலும் இருக்கலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved