- Home
- Lifestyle
- Financial Advice: இந்த 5 வகையான நபர்களுக்கு எக்காரணம் கொண்டும் கடன் கொடுக்காதீர்கள்..மீறினால் உங்களுக்கு தான் கஷ்டம்
Financial Advice: இந்த 5 வகையான நபர்களுக்கு எக்காரணம் கொண்டும் கடன் கொடுக்காதீர்கள்..மீறினால் உங்களுக்கு தான் கஷ்டம்
நம்மில் பலர் ஏதோ ஒரு காரணத்திற்காக எப்போதாவது கடன் கொடுப்பதும், வாங்குவதும் செய்து கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், சிலருக்குக் கடன் கொடுப்பது நல்லதல்ல. யார் யாருக்குக் கடன் கொடுக்கக் கூடாது என்று இங்கே பார்ப்போம்.

யாருக்கு கடன் கொடுக்ககூடாது?
நம் வாழ்வில் எப்போதாவது நிதிச் சிக்கல்கள் வரும். அப்போது பலர் உறவினர்கள், நண்பர்கள் அல்லது அறிமுகமானவர்களிடம் கடன் வாங்குவார்கள். ஆனால் சிலர் கடன் வாங்கும்போது காட்டும் ஆர்வத்தைத் திருப்பிக் கொடுக்கும்போது காட்டுவதில்லை. இதனால் பணம் கொடுத்து பிரச்சனையை விலைக்கு வாங்கியது போலாகிவிடும். யாருக்குக் கடன் கொடுத்தால் திருப்பி வாங்கக் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ஆடம்பரத்திற்காக கடன் வாங்கும் நபர்கள்
கஷ்ட காலங்களில் கடன் வாங்குவது இயல்பு. ஆனால் சிலர் கேளிக்கைக்காகவும், ஆடம்பரத்திற்காகவும் கடன் வாங்குகிறார்கள். இதை வாங்க வேண்டும், அதை வாங்க வேண்டும் என்று சொல்வார்கள். அதற்குப் பணம் வேண்டும் என்று நண்பர்கள், உறவினர்களிடம் கேட்பார்கள். கேளிக்கைக்காகக் கடன் கேட்பவர்களுக்குக் கடன் கொடுக்காமல் இருப்பதே நல்லது.
மறதி உள்ளவர்கள்
மறதி உள்ளவர்களுக்குக் கடன் கொடுத்தால் கஷ்டப்பட வேண்டியிருக்கும். அவர்கள் உங்களிடம் கடன் வாங்குவார்கள். ஆனால் திருப்பிக் கொடுப்பதை மறந்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்களிடம் எத்தனை முறை கடன் கேட்டாலும் கொடுக்காமல் இருப்பதே நல்லது. கொடுத்தால் நிச்சயம் நஷ்டப்பட வேண்டியிருக்கும்.
மீண்டும் மீண்டும் கடன் கேட்பவர்கள்
பலர் ஏற்கனவே வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காமலேயே மீண்டும் கடன் கேட்பார்கள். “பணம் ரொம்பத் தேவை. இந்த ஒரு முறை கொடு. எல்லாவற்றையும் சேர்த்துக் கொடுத்து விடுகிறேன்.” என்று சொல்வார்கள். ஆனால் ஏற்கனவே வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காமல் மீண்டும் கடன் கேட்டால் அப்படிப்பட்டவர்களுக்குக் கொடுக்காமல் இருப்பதே நல்லது. அவர்களுக்குக் கடன் கொடுத்துச் சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டியிருக்கும்.
கோபப்படுவபர்கள்
பலர் கடன் வாங்கும்போது நன்றாகப் பேசுவார்கள். ஆனால் திருப்பிக் கேட்கும்போது கோபப்படுவார்கள். நாம் யார் என்று தெரியாதது போல் நடந்து கொள்வார்கள். போன் செய்தால் எடுக்காமல், நம்மைப் பார்த்தாலே ஒளிந்து கொள்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்குக் கடன் கொடுப்பது நல்லதல்ல.
தேவை வரும் போது பழகுபவர்கள்
சிலருக்குக் கஷ்டத்தில் இருக்கும்போதுதான் நண்பர்கள், உறவினர்கள் ஞாபகத்திற்கு வருவார்கள். மற்ற நேரங்களில் நாம் யார் என்று தெரியாதது போல் இருப்பார்கள். இப்படி நடந்து கொள்பவர்களுக்குக் கடன் கொடுப்பது நல்லதல்ல. ஏனென்றால் அவர்கள் தேவைப்படும்போது மட்டும்தான் உங்களிடம் வருவார்கள்.