MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • மோரில் தேன் கலந்து முகத்திற்கு தடவினால் என்னவாகும்?

மோரில் தேன் கலந்து முகத்திற்கு தடவினால் என்னவாகும்?

தயிரில் தேன் கலந்து முகத்திற்கு தடவுவார்கள் ஆனால் மோரில் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவினால் என்னாகும் என்று உங்களுக்குத் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

1 Min read
Author : Asianetnews Tamil Stories
Published : Aug 28 2024, 08:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மோரும் தேனும்

மோரும் தேனும்

ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் மோர் மிகவும் உதவுகிறது.  இதே மோர் உங்கள் அழகையும் அதிகரிக்கும் என்பது தெரியுமா? முகத்தில் மோர் தடவுவதால்.. உங்கள் சருமம் மிகவும் பிரகாசமாகத் தெரிகிறது. சரி.. அதே மோரில் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவினால் என்னாகும் தெரியுமா? அதனால், நமது சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று ஒருமுறை பார்க்கலாம்..
 

25
இயற்கை பிளீச்சிங்

இயற்கை பிளீச்சிங்

மோரில் இயற்கையாகவே இயற்கை ப்ளீச்சிங் தன்மை உள்ளது. மேலும் புரோபயாடிக் லாக்டிக் அமிலமும் அதிக அளவில் உள்ளது. இந்த இரண்டும் சருமம் தொடர்பான பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அதனால்தான், மோரில் சிறிது தேன் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவ வேண்டும்.
 

35
கரும்புள்ளிகள் மறையும்

கரும்புள்ளிகள் மறையும்

இப்படிச் செய்வதன் மூலம் உங்கள் சருமம் அழகாகவும், இளமையாகவும் தோன்றும். முகப்பருக்கள் முதல் கரும்புள்ளிகள் வரை எந்தப் பிரச்சனை இருந்தாலும்  குறைய ஆரம்பிக்கும். முகப்பருக்கள் குறைந்தாலும் தழும்புகள் அப்படியே இருக்கும். அந்தக் கறைகளை  இது முற்றிலுமாகப் போக்குகிறது. முகத்திற்கு இயற்கையான பளபளப்பைத் தருகிறது.

45
வறண்ட சருமம்

வறண்ட சருமம்

வறண்ட சருமப் பிரச்சனை உள்ளவர்களும் இதை முயற்சிக்கலாம். இப்படி செய்வதன் மூலம் வறண்ட சருமப் பிரச்சனை இருக்காது. சருமம் மிகவும் மாய்ச்சரைசிங் ஆகவும், மென்மையாகவும் இருக்கும். சருமத்தை வறட்சி இன்றி இருக்கும். 

55
எப்படி பயன்படுத்துவது

எப்படி பயன்படுத்துவது

ஒரு டீஸ்பூன் தேனில் ஒரு டீஸ்பூன் மோர் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். அதன் பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவினால் போதும். வாரத்திற்கு இரண்டு முறை இப்படிச் செய்வதன் மூலம் முகம் அழகாக மின்னும்.


 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AT
Asianetnews Tamil Stories
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved