திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது..! பரவசத்தோடு தரிசனம் செய்த பக்தர்கள்..!
First Published Nov 29, 2020, 6:18 PM IST
கார்த்திகை திருநாளை முன்னிட்டு இன்று அதிகாலை திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து தற்போது சரியாக மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டதை, பக்தர்கள் பரவசத்துடன் தரிசித்து வருகிறார்கள்.

பஞ்ச பூதங்களில் நெருப்புக்குரிய தலமாக திகழ்வது திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் கோவில்.

இந்த திருத்தலத்தில் கார்த்திகை திருநாள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் தீபத்திருவிழா கடந்த சில தினங்களுக்கு முன் கொடியேற்றத்துடன் துவங்கியது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?