Guru Peyarchi 2022: குருவின் வக்ர பெயர்ச்சியால்..தீபாவளி முதல் சுப பலன்களை அனுபவிக்க போகும் ராசிகள்..!
Guru Peyarchi 2022 Palangal: குரு பகவானின் வக்ர நிலையால் தீபாவளியில் இருந்து சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக் காற்று அடிக்கத் தொடங்கும். அவைகள் எந்தெந்த ராசிகள் என்று பார்க்கலாம்.
ஜோதிடத்தின் படி, ஜூலை 29ம் தேதி மீன ராசியில் வக்ரமானார் குரு பகவான். வியாழனின் இந்த தாக்கம் 12 ரசிகளிலும் காணப்படும். இதையடுத்து, வரும் நவம்பர் 24 ஆம் தேதி அதிகாலை 4:35 மணிக்கு மீன ராசியில் குரு பகவான் தனது இயல்பான இயக்கத்திற்கு மாறுவார். குருவின் வக்கிரத்தால் ரிஷபம், கும்பம், மிதுனம், கடகம் ஆகிய ராசிகள் சிறப்பான பலன்களை பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள். இதனால், இந்த ராசிகளுக்கு உத்தியோகத்தில் லாபம், வியாபாரத்தில் அதிக வருவாய் கிடைக்கும். ஆகவே தீபாவளி நாட்களில் இந்த ராசிகளுக்கு சிறப்பான பலன்கள் அனுபவிப்பார்கள்.
மேலும் படிக்க...Horoscope Today: இன்றைய 12 ராசிகளின் பலன்..மேஷம், மிதுனம் ராசிக்கு திடீர் பண வரவு, உங்கள் ராசிக்கு என்ன பலன் ?
ரிஷபம் :
வியாழன், மீன ராசியில் இருப்பது ரிஷப ராசியினருக்கு நல்ல காலத்தைக் கொடுக்கும். இந்நிலையில் இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகள் அதிக ஆர்டர்களைப் பெற்று நல்ல லாபம் ஈட்டுவார்கள்.
மிதுனம்:
இந்த ராசிக்காரர்களுக்கு, புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும், வாகனம், சொத்து வாங்கும் வாய்ப்பு உண்டு. உறவில் இனிமை இருக்கும். புதிய நபர்களுடனான தொடர்பு அதிகரிக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறும் ராசிக்காரர்கள் மிதுன ராசிக்காரர்கள் ஆவார்கள்.
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு வியாழனின் வக்ர கதியின் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். கடக ராசிக்காரர்களுக்கு மார்கி வியாழன் நீண்ட நாட்களாக தடைபட்ட வேலைகளை செய்து முடிப்பார். தொழில் பயணங்கள் நல்ல லாபத்தை தரும். வெளிநாட்டுத் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.தொழில் சம்பந்தமான விஷயங்களுக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டு.
கும்பம்:
நிதி நிலை வலுவாக இருக்கும். தடைபட்ட வேலைகள் முடிவடையும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டு வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள். அதிக லாபம் பெறுவார்கள். மாணவர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள். உத்தியோகத்தில் பாராட்டுகள் வந்து குவியும். வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.