Sevvai Peyarchi 2022: அக்டோபர் 16ம் தேதி நிகழும் செவ்வாய் பெயர்ச்சி..கஜகேசரி யோகம் பெறும் ராசிகள் இவைகள் தான்!
Sevvai Peyarchi 2022: செவ்வாய் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு, அதிகப்படியான நல்ல பலன்களை ஏற்படுத்திக்கொடுக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sevvai Peyarchi 2022:
செவ்வாய் பெயர்ச்சி 2022: சூரிய குடும்பத்தில் செவ்வாய் கிரகம் சிவப்பு கிரகமாக கருதப்படுகிறது. செவ்வாய் கிரகம் வலிமை மற்றும் ஆற்றலின் காரணியாகவும் கருதப்படுகிறது. செவ்வாய் கிரகம் அக்டோபர் 16, 2022 அன்று மதியம் 12:4 மணிக்கு ரிஷப ராசியிலிருந்து மாறி மிதுன ராசியில் நுழைகிறார். மிதுன ராசியில் செவ்வாயின் சஞ்சாரத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். சில ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம், அதிகப்படியான நல்ல பலன்களை ஏற்படுத்திக்கொடுக்கும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Sevvai Peyarchi 2022:
மேஷம்:
மிதுன ராசியில் செவ்வாய் பெயர்ச்சி, மிகவும் சாதகமான பலன்களைக் கொண்டு வந்துள்ளது. இந்த நேரத்தில் செய்யப்படும் முதலீட்டால் எதிர்காலத்தில் நல்ல லாபம் வரும். வியாபாரம் செய்வதற்கும் இது ஏற்ற நேரமாக இருக்கும். நீங்கள் புதிய தொழில் செய்ய நினைத்தால், இந்த நேரத்தில் தொடங்குவது சாதகமாக இருக்கும்.
Sevvai Peyarchi 2022:
கன்னி:
உத்யோகத்தில் உள்ள கன்னி ராசிக்காரர்களுக்கு இது மிக நல்ல நேரமாகும். இவர்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை தீரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும்.
Sevvai Peyarchi 2022:
மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி சுபமாக இருக்கும். விளையாட்டுப் போட்டி மற்றும் போட்டித் தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் நல்ல பலன்களைப் பெறலாம். மகர ராசிக்காரர்களின் உடல்நிலை நன்றாக இருக்கும். தொழில், வியாபாரம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.