- Home
- Lifestyle
- Coconut Palan: இறைவனுக்கு தேங்காய் உடையும் விதமும், அதன் சகுன பலன்களும் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா..?
Coconut Palan: இறைவனுக்கு தேங்காய் உடையும் விதமும், அதன் சகுன பலன்களும் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா..?
Thengai udaiyum palangal in tamil: தேங்காய் உடைக்கும் பொழுது, அது உடையும் விதம் மற்றும் அது உடையும் தன்மையை பொறுத்து சகுன பலன்கள் கூறப்படுவது உண்டு. அது என்ன என்பதை தான் நாம் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

coconut
நாம் மனிதில் நினைத்த வேண்டுதல் நிறைவேறினால் கடவுளுக்கு தேங்காய் உடைப்பேன் என்று வேண்டி கொள்வது வழக்கம். பரீட்சையில் பாஸ் ஆனாலும், உடல் ஆரோக்கியம் நலம் பெற உள்ளிட்ட பிற எல்லா நல்ல காரியங்களும் கைகூடினால் தேங்காய் உடைப்பின் என்று வேண்டி கொள்வது வழக்கம்.
coconut
முக்கியமாக திருமணம், வீடு கட்டுதல், சொத்து வாங்குதல் போன்ற சுப நிகழ்ச்சிகளை தொடங்குவதற்கு முன்னரும் தேங்காய் உடைத்து கடவுளுக்கு பூஜை செய்கின்றோம். இந்த தேங்காய் உடைக்கும் பொழுது, அது உடையும் விதம் மற்றும் அது உடையும் தன்மையை பொறுத்து சகுன பலன்கள் கூறப்படுவது உண்டு. அது என்ன என்பதை தான் நாம் இந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.
coconut
பொதுவாக தேங்காய் உடைத்து வழிபாடு செய்யும் பொழுது, அதன் மூலம் நாம் வேண்டிய வேண்டுதல் நிறைவேறுமா? இல்லையா? அல்லது தள்ளிப் போக வாய்ப்புகள் உண்டா? என்பது போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ள முடியும். இதைத் தான் நம் முன்னோர்கள் தொன்று தொட்டு செய்து வந்தனர்.
ஏனெனில், தேங்காயை கடவுளுக்கு சமர்பிப்பதால் பல அதிர்ஷ்டங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தேங்காய் பிரசாதம் கொடுத்தால்தான் கடவுள் தரிசனம் நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது.
அப்படி, நீங்கள் கோவிலுக்கு சென்று தேங்காய் உடைத்து வழிபாடு செய்யும் பொழுது, தேங்காய் இரண்டு சரி பாதியாக வட்ட வடிவில் உடைந்தால் நாம் நினைத்த காரியங்கள் எந்த விதமான தடை இன்றி நன்றாக நிறைவேறும். அதேபோன்று, உடைக்கும் தேங்காயில் பூ இருந்தால் உங்கள் மனதிற்கு சந்தோஷம் அளிக்கக் கூடிய விஷயங்கள்நடக்கப்போகிறது என்று அர்த்தம்.
coconut-
ஒருவேளை தேங்காய் அழுகி இருந்தால் நினைத்த காரியம் நடக்காதா? என்கிற பயம் தொற்றிக் கொண்டிருக்கும். இப்படி தேங்காய் உடைத்து வழிபடும் பொழுது தேங்காய் அழுகி இருந்தால் நீங்கள் நினைத்த காரியம் தள்ளி போகுமே தவிர, அது நடக்கவே நடக்காது என்பது கிடையாது இது தான் உண்மையான பலனாகும். எனவே இனி தேங்காய் உடைக்கும் போது அழுகி போயிருந்தால் பயப்பட வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
coconut-
ஒருவேளை நீங்கள் உடைக்கும் தேங்காய் நீளவாக்கில் உடைய கூடாது. அப்படி, உடைந்தால் பிரச்சனை வருவதற்கு வாய்ப்புகள் உண்டு என்கிறது சகுன பலன்கள். அதுபோல் நீங்கள் தேங்காய் உடைக்கும் பொழுது கண் உள்ள பகுதி சிறியதாகவும், அடிப்பகுதி பெரியதாகவும் உடைந்தால் குடும்ப பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அனைவரும் ஒற்றுமையாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் அமையும் என்பதை உணர்த்தும் பலனாக இருக்கிறது.
அதே போல தேங்காய் உடைக்கும் பொழுது சில சமயங்களில் உள்பாகத்தில் தேங்காய் உடைய சிறிய பாகம் அதனுள் விழுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இப்படி தேங்காய்க்குள் தேங்காய் விழுந்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரப் போகிறது என்பது பலன் ஆகும். எனவே தேங்காய் உடைக்கும் பொழுது சரியாக பொறுமையாக, நேர்த்தியாக உடைக்க பாருங்கள் நல்லதே நடக்கும்.