MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Chanakya Niti: இந்த 4 இடங்களில் அமைதியாக இருப்பதுதான் புத்திசாலித்தனம்! முழு விவரம்!

Chanakya Niti: இந்த 4 இடங்களில் அமைதியாக இருப்பதுதான் புத்திசாலித்தனம்! முழு விவரம்!

Chanakya Niti: ஒரு வார்த்தை ஒருவரின் மனதை வெல்லவும் செய்யும். ஆறாத காயத்தையும் உருவாக்கும். ஆகவே எப்போது பேச வேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்று அறிவது முக்கியம். இந்த 4 இடங்களில் அமைதியாக இருக்க வேண்டும் என சாணக்கியர் சொல்கிறார்.

1 Min read
Author : Rayar A
Published : Sep 14 2026, 05:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மௌனமாக இருக்க வேண்டிய தருணங்கள்
Image Credit : Asianet News

மௌனமாக இருக்க வேண்டிய தருணங்கள்

பேச்சு என்பது மனிதனுக்குக் கிடைத்த ஒரு பெரிய சக்தியாகும். ஆனால், அதே பேச்சை யோசிக்காமல் பயன்படுத்தினால் பிரச்சனைகள், தப்பர்த்தங்கள், உறவுகளில் விரிசல் எனப் பல சிக்கல்கள் உண்டாகும். அதனால்தான் ஆச்சார்ய சாணக்கியர், பேச்சு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார். சில இடங்களில் நம் கருத்தை உடனே வெளிப்படுத்தாமல் அமைதியாக இருப்பது, நம்முடைய மரியாதையையும் மன அமைதியையும் ஒருசேரக் காப்பாற்றும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
எதிராளி கோபமாக இருக்கும்போது...
Image Credit : AI

எதிராளி கோபமாக இருக்கும்போது...

ஒருவர் கோபத்தில் இருக்கும்போது, அவர்களால் சாதாரணமாக யோசிக்க முடியாது. அந்த நேரத்தில் நாம் எவ்வளவு நல்ல விஷயம் சொன்னாலும், அதைத் தவறாகப் புரிந்துகொள்ள அதிக வாய்ப்புள்ளது. பதிலுக்கு நாமும் கோபப்பட்டால், சின்ன விஷயம் பெரிய சண்டையாக மாறிவிடும். அதனால், எதிராளி கோபமாக இருக்கும்போது அமைதியாக இருந்துவிட்டு, நிலைமை சரியானதும் நிதானமாகப் பேசினால் பிரச்சனையை எளிதாகத் தீர்க்கலாம்.

Related Articles

Related image1
Chanakya Niti: இந்த 4 ரகசியங்களை நண்பர், மனைவிகிட்ட கூட சொல்லாதீங்க!
Related image2
Chanakya Niti on Trust: இந்த 5 பேர் வாழ்க்கையில ஈஸியா ஏமாந்து போவாங்க! லிஸ்டில் நீங்க இருக்கீங்களா?
35
நம் பேச்சுக்கு மதிப்பு இல்லாத இடத்தில்...
Image Credit : Gemini AI

நம் பேச்சுக்கு மதிப்பு இல்லாத இடத்தில்...

சிலர் உண்மையைத் தெரிந்துகொள்வதற்காகப் பேசுவதில்லை; வெறும் வாக்குவாதம் செய்வதற்காக மட்டுமே பேசுவார்கள். அப்படிப்பட்டவர்களிடம் எவ்வளவுதான் விளக்கினாலும், அவர்கள் தங்கள் கருத்தை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். அங்கு நமது நேரமும் சக்தியும்தான் வீணாகும். எல்லா விவாதங்களிலும் ஜெயிக்க வேண்டும் என்பதை விட, சில விவாதங்களிலிருந்து விலகியிருப்பதே புத்திசாலித்தனம்.

45
எதிர்கால திட்டங்களைப் பற்றி பேசும்போது...
Image Credit : AI

எதிர்கால திட்டங்களைப் பற்றி பேசும்போது...

வாழ்க்கையில் ஒரு நல்ல விஷயம் செய்ய முடிவு செய்தால், அதை உடனே எல்லோரிடமும் சொல்லித் திரிய வேண்டாம். முதலில் அந்த வேலையை முடிப்பதில் கவனம் செலுத்துங்கள். நம்முடைய இலக்குகளை எல்லோரிடமும் பகிர்ந்துகொண்டால், தேவையில்லாத விமர்சனங்களும், நம்மை பின்னோக்கி தள்ளும் பேச்சுகளும் வரலாம். அதனால், செய்ய வேண்டியதை அமைதியாகச் செய்து, நம் வெற்றி பேசும்படி செய்வதுதான் புத்திசாலித்தனம்.

55
ரகசியங்கள் காப்பது முக்கியம்
Image Credit : Gemini

ரகசியங்கள் காப்பது முக்கியம்

யாராவது நம் மீது நம்பிக்கை வைத்து ஒரு ரகசியத்தைச் சொன்னால், அதை மற்றவர்களிடம் சொல்வது அந்த நம்பிக்கைக்கு செய்யும் துரோகம். நமக்குத் தெரிந்த எல்லா விஷயத்தையும் மற்றவர்களிடம் சொல்லிக்கொண்டிருப்பது புத்திசாலித்தனம் கிடையாது. எந்த விஷயத்தை வெளியே சொல்லலாம், எதை நம்மிடமே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற புரிதல் இருப்பவர்களால்தான் நல்ல உறவுகளைத் தக்கவைத்துக் கொள்ள முடியும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சாணக்கிய நீதி
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
முகப்பரு, வறண்ட சருமம், முடி உதிர்வு.. விளக்கெண்ணெய் உண்மையில் உதவுமா?
Recommended image2
High Blood Pressure Foods: பிபி-யை கண்ட்ரோல் பண்ணனுமா? இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க போதும்!
Recommended image3
Hilsa Fish: ஏமாறாதீங்க! அசல் ஹில்சா மீனை கண்டுபிடிக்கிறது எப்படி?
Related Stories
Recommended image1
Chanakya Niti: இந்த 4 ரகசியங்களை நண்பர், மனைவிகிட்ட கூட சொல்லாதீங்க!
Recommended image2
Chanakya Niti on Trust: இந்த 5 பேர் வாழ்க்கையில ஈஸியா ஏமாந்து போவாங்க! லிஸ்டில் நீங்க இருக்கீங்களா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved