MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • பப்பாளியை இந்த மாதிரி நேரத்தில் மறந்தும் சாப்பிடாதீர்கள்,மீறினால் உடலில் இருந்து இரத்தப்போக்கு ஏற்படும் அபாயம்

பப்பாளியை இந்த மாதிரி நேரத்தில் மறந்தும் சாப்பிடாதீர்கள்,மீறினால் உடலில் இருந்து இரத்தப்போக்கு ஏற்படும் அபாயம்

Papaya Side Effects in tamil: பப்பாளி பழங்களை சில வேளைகளில் மட்டும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். 

2 Min read
maria pani
Published : Feb 25 2023, 10:12 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

நாம் அடிக்கடி பப்பாளி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் மெக்னீசியம், நார்ச்சத்து, வைட்டமின்கள், நார்ச்சத்து உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, பல நோய்களை எதிர்த்துப் போராட நமக்கு தெம்பு அளிக்கிறது. இதை அடிக்கடி உண்பதன் மூலம், உடல் எடை கட்டுக்குள் இருக்கும். 

26

பப்பாளி நம் இதயம் சரியாக வேலை செய்ய உதவுகிறது. நமது வயிற்றின் செரிமான அமைப்பை நலமாக வைத்திருப்பதில் கூட இதற்கு இணை எதுவும் இல்லை. இவ்வளவு நன்மை பயக்கும் பழமாக இருந்தாலும், சில நேரங்களில் பப்பாளியை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். எந்தெந்த நபர்கள், எப்போது பப்பாளியை சாப்பிடக்கூடாது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். 

36

தோல் ஒவ்வாமை 

உங்களுக்கு தோல் ஒவ்வாமை இருந்தால் பப்பாளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனை உட்கொள்வதால் உடலில் சிவப்பாக சொறி ஏற்படும். தலைவலி, தலைசுற்றல், வீக்கம் போன்றவை ஏற்படும். லேடெக்ஸ் ஒவ்வாமை உள்ளவர்களும் பப்பாளியை சாப்பிடக்கூடாது. 

46

குறைந்த சர்க்கரை அளவு உள்ளவர்கள் 

பப்பாளி பழத்தை இரத்தத்தில் குறைந்த சர்க்கரை அளவு உடையவர்கள் (லோ சுகர்) சாப்பிடவே கூடாது. இவ்வாறு செய்வதால் அவர்களின் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். சர்க்கரை நோயாளிகள், மருத்துவரின் ஆலோசனையின்றி பப்பாளி பழத்தை சாப்பிடக் கூடாது. 

56

கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டும் 

கர்ப்ப காலத்தில், பப்பாளி பழம் உண்பது தீங்கு விளைவிக்கும். இதில் உள்ள பாப்பைன் உடலில் உள்ள செல் சவ்வை சேதப்படுத்தும். கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த சவ்வு மிகவும் முக்கியமானது. ஆகவே கர்ப்பிணிகள் பப்பாளி பழத்தை சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

இதையும் படிங்க: வெறும் வயிற்றில் தினமும் துளசி சாறு.. சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க துளசியை இப்படி யூஸ் பண்ணனும்..

66

பப்பாளிக்குப் பிறகு மருந்து சாப்பிடுவது கூடாது 

சிலர் பப்பாளி சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மருந்து சாப்பிடுவார்கள். அது தவறு. இவ்வாறு செய்வது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். பப்பாளி மற்றும் மருந்துகளின் காக்டெய்ல் உடலில் இரத்தத்தை மெல்லியதாக மாற்றுகிறது. இதனால் உடலில் இருந்து ரத்தம் வெளியேறும் அபாயம் உள்ளது. எனவே அதை ஒருபோதும் செய்யக்கூடாது. 

இதையும் படிங்க: தினமும் சாப்பாட்டில் கொஞ்சம் கருப்பு மிளகு சேர்த்தால்.. உங்க உடலில் தானாக இந்த அற்புதங்கள் நடக்கும்..

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved