- Home
- Lifestyle
- Shampoo Hair Wash : நுரைப் பொங்கும் ஷாம்பூவில் ஆனந்தக் குளியல் போடுபவரா நீங்கள்..? ஆபத்து..!! ஜாக்கிரதை..!!
Shampoo Hair Wash : நுரைப் பொங்கும் ஷாம்பூவில் ஆனந்தக் குளியல் போடுபவரா நீங்கள்..? ஆபத்து..!! ஜாக்கிரதை..!!
நம்மில் பலரும் தலைக்கு குளிக்கும் போது ஷாம்பூவை பயன்படுத்துகிறோம். அப்படி நுரைப் பொங்கி வழிந்து துடைத்துக் குளித்தால் மட்டுமே சுத்தமடைந்தது போன்ற உணர்வு நமக்கு ஏற்படும். ஆனால் நுரை அதிகமாக இருந்தால் தான் சுத்தம் கிடைக்குமா? என்கிற கேள்வி எழுவதை தவரிக்க முடிக்கவில்லை. அதேபோன்று சல்பேட் கொண்ட ஷாம்பூக்கள் கேசத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்கிற பொது கருத்து பலரிடையே நிலவுகிறது. இந்த கட்டுரையில் ஷாம்பூ குறித்து நாம் கொண்டுள்ள தவறான கருத்துக்களை குறித்து ஆய்வுகளின் அடிப்படையில் விரிவாக தெரிந்து கொள்வோம்.

அவ்வப்போது ஷாம்பூவை மாற்றலாமா?
நமது உச்சந்தலையை சுத்தம் செய்வதற்கு இருக்கும் ஒரே வழி ஷாம்பூ மட்டுமே. உச்சந்தலையின் தோலின் தன்மையை பொறுத்து எப்படிப்பட்ட ஷாம்பூவை பயனடுத்தலாம் என்பதை நிபுணர்கள் வழியாக தெரிந்துகொள்ளலாம். அதேபோன்று காலநிலைக்கு ஏற்ப சிலருடைய தோல் உணர்திறன் பெறும். அதையும் மருத்துவ நடைமுறைக் கொண்டே நாம் அறிந்திட முடியும். அப்போது மாறும் தோலின் தன்மைக்கு ஏற்ப ஷாம்பூவை மருத்துவர்களின் பரிந்துரையை கொண்டு நாம் பயன்படுத்தலாம்.
ஷாம்பூவை பற்றி தெரியுமா?
உங்களுடைய மருத்துவரின் பரிந்துரைக்கு ஏற்ப ஷாம்பூவையும் கண்டிஸ்னரையும் நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் எந்த ஷாம்பூவை நீங்கள் பயன்படுத்தினாலும், அதுகுறித்து நன்றாக தெரிந்துகொள்ளுங்கள். அதேபோன்று ஒரே தன்மை கொண்ட ஷாம்பூ தான், ஆனால் பிராண்டு வேறு. அனைத்தையும் சோதனை செய்து பார்த்துவிட்டு முடிவு செய்யலாம் என்கிற முடிவு ஆபத்தாக அமையும். எனினும் வாங்குவதற்கு முன்னர், நன்கு ஆய்வு செய்துவிட்டு ஒரு பிராண்டை மட்டும் முடிவு செய்யுங்கள். என்ன இருந்தாலும் ஷாம்பூவை அவ்வப்போது மாற்றி பயன்படுத்துவது முடி உதிர்வதை தடுக்காது.
தினசரி ஷாம்பூ பயன்படுத்துவது சரியா?
நீங்கள் வெளியில் அலைந்து திரிபவராக இருந்தால், தினசரி ஷாம்பூ பயன்படுத்தலாம். மேலும் நமது மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் மாசுபாடு அதிகமாக நிலவுகிறது. இதனால் தூசி, துகள் தலை முடியில் ஏற்படும். தினமும் வெளியில் அலைபவர்கள், சூரியன் வெப்பத்துக்கு வெளிப்பட நேரிடும். இதனால் தலையில் வியர்வை அதிகளவில் சுரக்கும். இதையொட்டி தினமும் ஷாம்பூவை பயன்படுத்தி தலையை சுத்தம் செய்வது நன்மையாகவே அமையும். அதுதவிர, ஷாம்பூவை தினமும் பயன்படுத்த முடியாது என்றால், தினசரி உடற்பயிற்சி செய்யலாம். ஈரப்பதமில்லாத பகுதிகளில் வாழ்பவர்களும் தினமும் ஷாம்பூவை பயன்படுத்தி தலை குளிக்கலாம்.
சல்ஃபேட் ஷாம்பூக்கள் ஆபத்தானதா?
முடியின் தன்மையை வைத்து தான் சல்ஃபேட்டின் பயன்பாடு முடிவு செய்யப்படுகிறது. அதிக உணர்திறன் கொண்ட கேசம் உடையவர்கள், மருத்துவரின் பரிந்துரையினால் மட்டுமே ஷாம்பூவை பயன்படுத்த முடியும். எண்ணெய் பசு மற்றும் தூசியை நீக்குவதற்கு சல்ஃபேட் க்ளீனிங் ஏஜெண்ட்டாக செயல்படுகிறது. அதனால் உச்சந்தலையிலுள்ள தோலுக்கு சல்ஃபேட் சிறந்த முறையில் பயனளிக்கும். ஆனால் அதை அதிகளவில் பயன்படுத்துவதிலும் ஆபத்து உருவாகும். இதனால் உங்களுடைய முடி வறண்டு மற்றும் பிசிறு போல மாறிவிடும்.
சரியான ஷாம்பூவை தேர்வு செய்வது எப்படி?
ஷாம்பூவை எப்போதுமே உச்சந்தலையில் தான் தடவ வேண்டும். தலையில் படிந்துள்ள தூசு, துகள், எண்ணெய் பசை, பொடுகை உள்ளிட்டவற்றை நீக்குவதற்கு தான் ஷாம்பூ. எப்போதுமே முடியின் வேரின் எண்ணெய் பசை இருக்கும். அதனால் ஷாம்பூவை பயன்படுத்துவதில் கவனம் தேவை. முடியின் இடையில் விரல்களை விட்டு, உள்ளங்கையை கொண்டு நன்கு தேய்க்க வேண்டும். மேலும் கேசத்தின் வேரை நன்றாக தேய்து கழுவிட வேண்டும். நகங்களை வைத்து உச்சந்தலையை கழுவுவதை தவிர்க்க வேண்டும். ரொம்பவும் ஈரப்பதமாக உச்சந்தலையை வைத்திருக்கக் கூடாது. முடியின் முனைகள் மிகவும் உலர்ந்து போவதை தவிர்க்க கண்டிஷ்னர் பயன்படுத்தலாம்.