Planets Transit: அக்டோபரில் சனி, புதனின் நிலை மாற்றம்..இந்த மாதம் முழுவதும் பம்பர் பலன்களை அள்ளும் ராசிகள்.!
அக்டோபர் மாதத்தில் நிகழும் 5 கிரகங்கள் ராசி மாற்றம், காரணமாக குறிப்பிட்ட ராசிகளுக்கு மிகப்பெரிய மாற்றம் காத்திருக்கிறது. உங்களுக்கு அற்புதமான நேரம் காத்திருக்கிறது.
அக்டோபர் மாதத்தில் மிகப்பெரிய கிரகங்களான சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி ஆகியவை தனது ராசியை மாற்றுகிறது. தற்போது வக்ர இயக்கத்தில் இருக்கும் சனி பகவானும் புதனும் அக்டோபர் மாதத்தில் நேர் இயக்கத்துக்கு மாறவுள்ளன. நீதியின் கடவுளான சனி மகர ராசியில் 23 அக்டோபர் 2022 அன்று தனது ராசியை மாற்றுகிறது. மேலும், கிரகங்களின் இளவரசரான புதன் கன்னி ராசியில் அக்டோபர் 2, 2022 மாறுகிறது. இதன் மாற்றம் குறிப்பிட்ட ராசிகளுக்கு சுப மற்றும் அசுப பலன்களை தருகிறார். இதனால் யாருக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு சனி, புதன் சஞ்சாரம் அதிகமான சுப பலன்களைத் தரும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் நிறைவேறும். இவர்கள் வாழ்க்கையில் வசந்த காலம் ஆரம்பமாகும். புதிய தொழில் தொடங்க இது நல்ல நேரம். இதைத் தவிர, வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்புகளும் கிடைக்கும்.
ரிஷபம்:
ரிஷபம் ராசிக்காரர்களும் இவ்விரு கிரகங்களின் சஞ்சாரத்தால் நன்மை பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் நிலை மாற்றத்தால் மிகுந்த பலன் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு இப்போது சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். இந்த நேரம் பல இன்னல்களிலிருந்து விருச்சிக ராசிக்காரர்களுக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும்.
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ராசி மாற்றம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பதவி உயர்வுடன் சம்பளமும் உயரும். நீங்கள் புதிய தொழில் தொடங்க திட்டமிட்டிருந்தால் இந்த மாதத்தின் தொடக்கம் சிறப்பான நேரம் ஆகும்.
தனுசு:
தனுசு ராசிக்காரர்களும் புதன் மற்றும் சனியின் சஞ்சாரத்தால் நன்மை அடைவார்கள். இந்த காலகட்டத்தில் வருமானத்தில் அதிக உயர்வு ஏற்படும். எதிர்பார்த்த நல்ல செய்தி இப்போது கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வருமானத்தில் முன்னேற்றம் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கும் இந்த நேரம் பலன்களைத் தரும்.உங்கள் முயற்சிகளுக்கு நல்ல பலனைத் தரும். நிதி பரிவர்த்தனைகள் மற்றும் முதலீடுகள் நன்மை தரும்.