MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • குழந்தைகளை தனியாக விளையாட விடலாமா? பெற்றோர்களே கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

குழந்தைகளை தனியாக விளையாட விடலாமா? பெற்றோர்களே கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

குழந்தைகள் தனியாக விளையாடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா? இதுகுறித்து நிபுணர்கள் அளித்த விளக்கம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramya s
| Updated : Sep 19 2024, 09:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
kids

kids

விளையாட்டு நேரம் குழந்தையின் கற்றலுக்கும் வளர்ச்சிக்கும் இன்றியமையாத பகுதியாகும். ஆனால் சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தனியாக விளையாட அனுமதிக்க மாட்டார்கள். குழந்தைகள் விளையாடும் போதும் பெற்றோர்களின் நிலையான கண்காணிப்பும் ஈடுபாடும் தேவை. உங்கள் குழந்தைகளை மகிழ்ச்சியாகவும் வேடிக்கையாகவும் அவர்களின் சொந்த விருப்பத்திற்கு விட்டுவிடுவது நல்லது என்பது பெற்றோர்கள் பலருக்கும் தெரிவதில்லை. குழந்தைகள் தனியாக விளையாடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து நிபுணர்கள் அளித்த விளக்கம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

உண்மையில், உங்கள் குழந்தைகளைத் தனியாக விளையாட விட்டுவிடுவது, அவர்கள் மதிப்புமிக்க வாழ்க்கைத் திறன்களை வளர்த்து கொள்ள உதவும். அவர்களின் அறிவாற்றல் மற்றும் வளர்ச்சிக்கு உதவுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.. குழந்தைகளை தனியாக விளையாட அனுமதிப்பது  மிகவும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அதை வளர்ப்பதற்கான சில வழிகளையும் தற்போது பார்க்கலாம். 

25

கற்பனை திறன் வளர்கிறது.

குழந்தைகள் தனியாக விளையாடுவதால் அவர்களின் கற்பனை திறன் மேம்படுகிறது. பெற்றோர் நிர்ணயித்த வரம்புகளை நீக்குகிறது. புதிய உலகங்கள், கதாபாத்திரங்கள் மற்றும் விளையாட்டுகளுக்கான தீர்வுகளை கற்பனை செய்ய குழந்தைகளுக்கு உதவுகிறது குழந்தைகளுக்கு பிடித்த பொம்மைகளுடன் உங்கள் வீட்டில் ஒரு வசதியான மூலையை உருவாக்கவும். என்ன விளையாட வேண்டும், எப்படி விளையாட வேண்டும் என்பதை உங்கள் குழந்தைகளே தேர்வு செய்யட்டும்.

தன்னம்பிக்கை அதிகரிக்கும் :

குழந்தைகளை தனியாக விளையாட அனுமதிப்பதன் மூலம் வழிகாட்டுதல் மற்றும் ஆதரவு இல்லாமல் தங்களை மகிழ்விக்க குழந்தைகள் புதிய வழிகளைக் கண்டுபிடிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் அவர்கள் தனியாக விளையாடுவதற்கு நேரத்தை திட்டமிடுங்கள். அவர்கள் விளையாடும் போது அவர்களை தொந்தரவு செய்வதையோ அல்லது அவர்கள் அருகிலேயே இருப்பதையோ தவிர்ப்பது நல்லது.

35

பிரச்சனைகளை தீர்க்கும் திறன்களை மேம்படுத்துகிறது

குழந்தைகள் தனியாக விளையாடும் போது பொம்மைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கண்டறிதல், புதிர்களைத் தீர்ப்பது, தங்களை மகிழ்விப்பது போன்ற பிரச்சனைகளைத் தீர்க்கும் திறன் வளர்கிறது. வயதுக்கு ஏற்ற பொம்மை அல்லது புதிர் ஒன்றைக் கொடுத்து, அதை தீர்க்கும்படி குழந்தைகளை ஊக்குவிக்கவும். சரியாக தீர்த்து விட்டால் அதற்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். அல்லது தீர்க்க வில்லை என்றாலும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கலாம். கற்றுக்கொள்வதில் தவறில்லை என்பதை குழந்தைகளுக்கு புரிய வைக்க முடியும்.

45

நம்பிக்கையை வளர்க்கிறது

குழந்தைகள் தாங்களாகவே விளையாடுவதால்., அவர்கள் புதிய விஷயங்களை செய்வதுடன், தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் கற்றுக்கொள்கின்றனர். இது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதோடு, புதிய சவால்களைத் தனியே எதிர்கொள்ள அவர்களை ஊக்குவிக்கிறது. குழந்தைகள் முயற்சி செய்ய விரும்பும் புதிய பொழுதுபோக்கு, புதிர் அல்லது பொம்மை உள்ளதா என்று அவர்களிடம் கேளுங்கள், மேலும் அவர்கள் சுயமாக ஏதேனும் ஒரு பொருளை செய்யவும் அவர்களை ஊக்குவிக்கலாம். 

55
Kids alone

Kids alone

அமைதி அதிகரிக்கும்

குழந்தைகள் தனியாக விளையாடும் போது, அவர்கள் பொறுமையாக தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வேண்டு ரிலாக்ஸாக விளையாட முடியும். அவர்களின் வசதியான விளையாட்டுப் பகுதியில் மென்மையான இசை மற்றும் விளக்குகளைச் சேர்க்கவும். கவனச்சிதறல்களைத் தவிர்க்க, மின்னணு சாதங்கள் இல்லாத இடத்தை உறுதிசெய்யவும். 

சுதந்திரமான விளையாட்டை ஊக்குவிப்பதில் இந்த பயனுள்ள உதவிக்குறிப்புகள் உங்கள் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவுவதோடு, எந்த நேரத்திலும் ஆக்கப்பூர்வமான இளம் தலைமுறையினராகவும் மாற்றும். 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
பெற்றோர் ஆலோசனை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved