MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • இளமையான. பொலிவான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பேஸ் பேக் மட்டும் போதும்!

இளமையான. பொலிவான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பேஸ் பேக் மட்டும் போதும்!

முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், அதே முருங்கை நம் அழகையும் மேம்படுத்துகிறது. இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramya s
Published : Oct 16 2024, 04:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
முருங்கை இலைகள்

முருங்கை இலைகள்

ஆரோக்கியமான, பொலிவான சருமம் பெற வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு பெண்ணுக்கும் உண்டு. ஆனால், அந்த அழகை மேம்படுத்திக் கொள்ள சந்தையில் கிடைக்கும் க்ரீம்கள், எண்ணெய்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. இயற்கை பொருட்கள் மூலமே பொலிவான சருமத்தை பெற முடியும். அப்படி நமக்கு இயற்கையில் கிடைக்கும் அற்புதமான செடி முருங்கை. 

 

இதுவரை முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், அதே முருங்கை நம் அழகையும் மேம்படுத்துகிறது. அது எப்படி என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்..

 

24
முருங்கை இலைகள்

முருங்கை இலைகள்

முருங்கைக் கீரையில் ஊட்டச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளன. மேலும், சருமத்தை இளமையாக மாற்றவும் உதவுகின்றன. நீங்கள் இயற்கையாகவே இளமையாக இருக்க விரும்பினால், முருங்கைக் கீரை சிறந்த தீர்வாகும்.

 

34
முருங்கை இலைகள்

முருங்கை இலைகள்

இந்த காலத்தில் பலர் இளம் வயதிலேயே வயதானவர்கள் போல தோற்றமளிக்கின்றனர். அதற்கு பல காரணங்கள் உள்ளன. வெயில், மாசு, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளும் உங்கள் வயதை விட அதிகமாக காட்டும். முகத்தில் சுருக்கங்கள், சருமம் பொலிவிழந்து காணப்படும். முருங்கை இலைகளைப் பயன்படுத்தினால், மீண்டும் இளமையாக மாறுவீர்கள்.

ஏனெனில், முருங்கைக் கீரையில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை சருமத்தை ஃப்ரீ ரேடிக்கல்ஸிலிருந்து பாதுகாக்கவும், சருமத்தைப் பொலிவாக்கவும் உதவுகின்றன. மல்டி வைட்டமின்கள் இருப்பதால், எந்த வகை சருமத்திற்கும் முருங்கைக் கீரை அற்புதமாக செயல்படுகிறது. சருமத்தை ஹைட்ரேட்டாக வைத்திருக்கவும், இரத்த ஓட்டத்தை சீராக்கவும், டீடாக்ஸ் செய்யவும், சருமத்தை மென்மையாக்கவும், முகப்பருக்களைத் தடுக்கவும், சருமத்தை இளமையாகவும் பொலிவாகவும் மாற்றவும் உதவுகிறது.

44
முருங்கை இலைகள்

முருங்கை இலைகள்

முருங்கை இலைகளை சருமத்திற்கு எப்படிப் பயன்படுத்துவது..? 

முருங்கை இலைகளை நன்றாகக் கழுவி தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அல்லது, அந்த இலைகளை தண்ணீரில் கொதிக்க வைக்கலாம். பின்னர், வடிகட்டி, அந்த நீரை ஒரு பாட்டிலில் சேமிக்க வேண்டும். அதை கு ளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். அதை முகத்திற்கு டோனராகப் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதன் மூலம் சருமம் மென்மையாக மாறும். தினமும் இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன், இந்த நீரை முகத்தில் தடவினால் போதும். முகப்பருக்கள் மறையும். சருமத்தில் பொலிவு அதிகரிக்கும்.

இல்லையென்றால், உலர்ந்த முருங்கை இலைகளைப் பொடியாக்கி, அதை ஸ்க்ரப்பராகவும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதன் மூலமும் உங்கள் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் அனைத்தும் நீங்கி, சருமம் மென்மையாக மாறும். முருங்கை இலைப் பேஸ்ட்டை முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம். இதுவும் உங்கள் சருமத்தை அழகாக்க உதவும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved