MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Interesting Facts: இடி இடிக்கும் போது மரத்துக்கு கீழ ஏன் நிக்க கூடாதுனு தெரியுமா? தெரிஞ்சிக்க வேண்டிய ஷாக்கிங் உண்மைகள்.!

Interesting Facts: இடி இடிக்கும் போது மரத்துக்கு கீழ ஏன் நிக்க கூடாதுனு தெரியுமா? தெரிஞ்சிக்க வேண்டிய ஷாக்கிங் உண்மைகள்.!

Interesting Facts: மழைக்காலத்துல இடி இடிக்கும்போது மரத்துக்குக் கீழ நிக்காதீங்கன்னு பெரியவங்க சொல்வாங்க. அது ஏன்? மரங்களை குறிவைச்சு இடி தாக்குறதுக்குப் பின்னாடி இருக்கிற அறிவியல் காரணங்கள் என்னன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.

2 Min read
Author : Ramprasath S
Published : Jul 05 2026, 12:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இடி பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள்
Image Credit : FREEOIK

இடி பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள்

பொதுவா மழைக்காலத்துல பெருமழை, புயல், இடி, மின்னல், சூறைக்காத்துன்னு அடிக்கடி கேட்போம். மழை வரும்போது முதல்ல மரத்துக்குக் கீழ போகக்கூடாதுன்னு பலரும் சொல்வாங்க. மரங்கள் மேல இடி விழ அதிக வாய்ப்பு இருக்கிறதால, மழை நேரத்துல அங்க போக வேண்டாம்னு நம்ம பெரியவங்கள்ல இருந்து வானிலை நிபுணர்கள் வரைக்கும் எச்சரிக்கிறாங்க.ஆனா, இடினா என்ன? அது ஏன் மரங்கள் மேல அதிகமா விழுது? இதுக்குப் பின்னாடி இருக்கிற அறிவியல் காரணங்கள் என்ன? இடி தாக்குதல்ல இருந்து தப்பிக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கணும்? இதையெல்லாம் பத்தி இங்க தெரிஞ்சுக்கலாம்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
இடி என்றால் என்ன, எப்படி உருவாகிறது?
Image Credit : Getty

இடி என்றால் என்ன, எப்படி உருவாகிறது?

நிறைய பேர் இடியை நெருப்புன்னு நினைக்கிறாங்க. ஆனா அது ஒரு சக்திவாய்ந்த மின்சாரப் பாய்ச்சல். வானத்துல மேகங்களுக்கு நடுவுல சுமார் 30 கோடி மெகாவாட் மின்சாரம் உருவாகுது. இது பூமியை நோக்கி வரும்போது, காத்தை சூடாக்கி பிளாஸ்மாவா மாத்துது. இப்படி ஒளியையும் வெப்பத்தையும் வெளியிடுற இந்த மின்சாரம்தான் இடி. இது பூமியை அடையும்போது 27,000 செல்சியஸ் வெப்பநிலையில இருக்கும். அதனாலதான் இடி தாக்கும்போது மரங்கள் எரிஞ்சு சாம்பலாகுது, மனிதர்கள் உயிரிழக்குறாங்க.

Related Articles

Related image1
Train Science: வழுவழுப்பான தண்டவாளத்தில் ரயில் சக்கரம் வழுக்காதது ஏன்? ஆச்சரியமூட்டும் அறிவியல்!
Related image2
Interesting Facts: விண்வெளியில் வீரர் இறந்தால் உடலை என்ன செய்வார்கள்? இதுவரை அப்படி நடந்திருக்கா?
35
மரங்கள் மீது மட்டும் இடி ஏன் விழுகிறது?
Image Credit : Getty

மரங்கள் மீது மட்டும் இடி ஏன் விழுகிறது?

இடிங்கிறது ஒரு மின்சாரப் பாய்ச்சல். அது வானத்துல இருந்து பூமியை நோக்கி வரும்போது, உயரமான மரங்கள் அதை ஈர்க்குது. அதாவது, மரங்கள் மின்சாரத்தைக் கடத்தியா (conductor) செயல்படுது. அதனாலதான் மரங்கள் மேல இடி அதிகமா விழுது. குறிப்பா, தனியா நிக்குற உயரமான பனை, தென்னை மரங்கள் இயற்கையான மின் கடத்திகளா வேலை செய்யுது.சில மரங்களோட தண்டுல மின்சாரத்தைக் கடத்தும் திரவங்கள் இருக்கிறதால, அது இடியை ஈர்க்குது. ஆச்சரியமான விஷயம் என்னன்னா, பனை மரங்களுக்கு இடியைத் தாங்குற சக்தி இருக்கு. அதனால சில சமயம் இடி தாக்கியும் பனை மரங்கள் தப்பிச்சுடும்.
45
மரங்கள் தவிர வேறு எங்கெல்லாம் இடி விழும்?
Image Credit : DEMO

மரங்கள் தவிர வேறு எங்கெல்லாம் இடி விழும்?

மரங்கள் மேல மட்டுமில்ல, உயரமான மலைகள், பரந்த சமவெளிகள்லயும் இடி அதிகமா தாக்கும். டிரான்ஸ்ஃபார்மர், பெரிய கரண்ட் கம்பங்கள் மாதிரியான மின்சார உபகரணங்கள் மேலயும் இடி விழ வாய்ப்பிருக்கு. அதிகமா மரங்களும், மலைகளும் கிராமங்கள்லதான் இருக்கு. அதனால நகரங்களை விட கிராமங்கள்லதான் இடி அதிகமா விழுது. இந்தியால நடக்குற இடி தாக்குதல்கள்ல சுமார் 96% கிராமப்புறங்கள்லதான் நடக்குதுன்னு வானிலை நிபுணர்கள் சொல்றாங்க. இதனால விவசாயிகள், விவசாய கூலிகள், கால்நடைகள் அதிகமா உயிரிழக்குறாங்க.
55
இடி தாக்குதலில் இருந்து தப்பிக்க
Image Credit : Getty

இடி தாக்குதலில் இருந்து தப்பிக்க

மழைக்காலத்துல பெருமழை, வெள்ளம் மட்டுமில்ல, இடி, சூறைக்காற்றும் ஆபத்தை ஏற்படுத்தும். அதனால இடி, மின்னலோட மழை பெய்யும்போது மக்கள் ரொம்ப கவனமா இருக்கணும்.1. மரங்கள் இடியை ஈர்க்கும், அதனால மழை நேரத்துல மரத்துக்குக் கீழ நிக்காதீங்க.2. வயல் வேலை செய்ற விவசாயிகள், கூலிகள் பாதுகாப்பான இடத்துக்குப் போயிடுங்க.3. திறந்தவெளியில வேலை செய்றவங்களும் இடி விழும்போது ஜாக்கிரதையா இருக்கணும்.4. மின்சார துணை நிலையங்கள், டிரான்ஸ்ஃபார்மர்கள், கரண்ட் கம்பங்கள் பக்கத்துல போகாதீங்க.5. ஆடு, மாடு போன்ற கால்நடைகளையும் மழை நேரத்துல மரத்தடியில கட்டாதீங்க.6. குடிசை, தகரக் கொட்டகை மாதிரி தற்காலிக வீடுகள்ல இருக்கிறவங்க கவனமா இருங்க.7. இடி, மின்னல் இருக்கும்போது செல்போன், மற்ற எலக்ட்ரானிக் பொருட்களைப் பயன்படுத்தாதீங்க.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hair Dye Facts : முடிக்கு டை அடிப்பதால் என்னென்ன ஆபத்து வரும்? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்?
Recommended image2
Interesting Facts: விண்வெளியில் வீரர் இறந்தால் உடலை என்ன செய்வார்கள்? இதுவரை அப்படி நடந்திருக்கா?
Recommended image3
Washing Machine Tips: வாஷிங் மெஷின் கரண்ட்டை உறிஞ்சுகிறதா? EB பில்லை பாதியாக குறைக்க 5 டிப்ஸ்!
Related Stories
Recommended image1
Train Science: வழுவழுப்பான தண்டவாளத்தில் ரயில் சக்கரம் வழுக்காதது ஏன்? ஆச்சரியமூட்டும் அறிவியல்!
Recommended image2
Interesting Facts: விண்வெளியில் வீரர் இறந்தால் உடலை என்ன செய்வார்கள்? இதுவரை அப்படி நடந்திருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved