MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • காதில் உள்ள அழுக்கை பட்ஸ் இல்லாம அகற்றலாம் தெரியுமா? பலருக்கு தெரியாத ட்ரிக்!

காதில் உள்ள அழுக்கை பட்ஸ் இல்லாம அகற்றலாம் தெரியுமா? பலருக்கு தெரியாத ட்ரிக்!

 காதில் உள்ள அழுக்கை பட்ஸ் இல்லாமல் வெளியே எடுப்பது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

2 Min read
Kalai Selvi
Published : Mar 11 2025, 11:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

Ear Wax Removal Tips : பொதுவாக நம் அனைவரும் காட்டன் பட்ஸை வைத்து தான் காதில் உள்ள அழுக்கை வெளியே எடுப்போம். ஆனால் அப்படி பட்ஸை வைத்து அழுக்கெடுப்பது காதுக்கு தான் ஆபத்து என்று உங்களுக்கு தெரியுமா? ஏனெனில் நீங்கள் பட்ஸை பயன்படுத்தும்போது காதுக்குள் இருக்கும் அழுக்கானது உள்ளே தழும்பு அபாயம் ஏற்படும். இதனால் அவை காதுகளை அடைத்துக் கொள்ளும். பிறகு காது கேளாண்மைக்கு வழிவகுக்கும். எனவே இது போன்ற சங்கடங்களை தவிர்க்க எளிய முறையில் காதுக்குள் இருக்கும் அழுக்கை சுலபமாக வெளியேற்றி விடலாம். அது எப்படி என்பதை குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

25
காது மெழுகு ஏன்?

காது மெழுகு ஏன்?

காதில் இருக்கும் மெழுகை சுத்தம் செய்வதற்கு முன் முதலில் காதில் மெழுகு ஏன் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். சருமம் என்று அழைக்கப்படுகிறது. இது தூசி குப்பைகள் மற்றும் பாக்டீரியாக்களில் இருந்து நம்முடைய காதை பாதுகாக்க, நம்முடைய காது கால்வாயில் உள்ள சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படுகின்றது. அரிப்பு மற்றும் வறட்சியை தடுக்க இந்த காது கால்வாய் பராமரிக்க இது பெரிதும் உதவுகிறது.

35
காது மெழுகு அடைப்பிற்கான அறிகுறிகள்

காது மெழுகு அடைப்பிற்கான அறிகுறிகள்

 - ஒரு காது வலி ஏற்படும்
- பாதிக்கப்பட்ட காதானது நிரம்பிய உணர்வு ஏற்படும்.
- காதில் சத்தம் கேட்பது
- பாதிக்கப்பட்ட காதானது கேட்கத்திறன் குறைவு

இதையும் படிங்க:  நம் காதுகள் பற்றிய இந்த சுவாரஸ்யமான விஷயங்கள் உங்களுக்கு தெரியுமா..?

45
எண்ணெய்

எண்ணெய்

ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், பேபி ஆயில், மினரல் ஆயில் மற்றும் கிளிசரின் கூட பயன்படுத்தலாம். இதற்கு முதலில் ஒரு பக்கமாக தலையை சாய்த்து பிறகு ஏதாவது எண்ணெய் இளஞ்சூட்டில் இருக்கும் போது அதன் சில துளிகளை காதுக்குள் விட வேண்டும். 15 நிமிடங்கள் தலையை அப்படியே வைத்திருக்கவும். எண்ணெய் காதுக்குள் இருக்கும் மெழுகை மென்மையாக்கி இயற்கை முறையில் வெளியே வர உதவும்.

இதையும் படிங்க:  காதுக்குள் தண்ணீர் போய் விட்டால்...ஈஸியாக வெளியேற்ற இதோ வழிகள்

55
சூடான நீர்

சூடான நீர்

சூடான நீரும் காதுக்குள் இருக்கும் மெழுகை வெளியேற்ற உதவும். இதற்கு ஒரு சிரிஞ் ஒன்றில் அறை வெப்பநிலையில் தண்ணீரை நிரப்பி தலையை சாய்த்து ஒரு பக்கமாக காதினுள் தண்ணீரை ஊற்றவும். தண்ணீரானது காதுக்குள் இருக்கும் மெழுகை மென்மையாக்கும். பிறகு காதை எதிர் திசையில் சாய்த்தால் மெழுகு வெளியேறும். பின் துண்டை கொண்டு காதை மெதுவாக துடைக்க வேண்டும்.

நினைவில் கொள் : காதும் மெழுகை நீக்க பேனா மூடி, ஊசி, விரல், ஊக்கு, பட்ஸ் போன்ற பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved