Mushroom Gravy: சுவையான காளான் குருமா..? தெருவே மணக்கும் சூப்பர் டிஷ்..வெறும் 10 நிமிடம் ஒதுக்கினால் போதும்...
Mushroom Gravy: பத்து வீடு மணக்கும் இந்த சுவையான காளான் குருமா..? ரெசிபியை வெறும் 10 நிமிடத்தில் எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து வைத்து கொள்வோம்.
Mushroom Gravy:
இன்றைய பிஸியான வாழ்கை முறையில், தினமும் காலை எழுந்ததும் அவசர அவசரமாக இட்லி, தோசை, போன்டர் உணவுகளுக்கு தொட்டு கொள்ள குறைவான நேரத்தில் சட்னி , சாம்பாரை வைத்து விடுவோம். ஆனால், தினமும் ஒரே மாதிரியான உணவு சாப்பிட்டு அலுத்துப்போய் விட்டது என்றால், வித்தியாசமான உணவுகளை சாப்பிட ஆசை இருக்கும்.
Mushroom Gravy:
இருப்பினும், செய்ய டைம் இருக்காது. தற்போது, ஒரு சட்னி அரைக்கின்ற நேரத்தில் சூப்பரான மஷ்ரூம் குருமா வைக்க முடியுமா என்று கேட்டால் நிச்சயம் முடியும். இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, நான் ரொட்டி இவைகளுக்கு இந்த சைட் டிஷ் அசத்தலாக இருக்கும். பக்கத்து வீட்டு வரைக்கும் இதன் வாசம் வீசும், எனவே, பத்து வீடு மணக்கும் இந்த குருமா ரெசிபியை எப்படி செய்யலாம் என்பதை தெரிந்து வைத்து கொள்வோம்.
Mushroom Gravy:
தேவையான பொருட்கள்:
மஸ்ரூம் -200 கிராம்
எண்ணெய்- 2 டீஸ்புன்
சோம்பு – 1 டீஸ்புன்
சீரகம் – 1 டீஸ்புன்
மிளகு – 1/2டீஸ்புன்
ஏலக்காய் – 2
பட்டை – 1
கிராம்பு – 1
தோலுரித்த சின்ன வெங்காயம் – 10 பல்
பூண்டு – 5 பல்
Mushroom Gravy:
தோல் சீவிய இஞ்சி – 2 இன்ச்
வரமிளகாய் – 5
கருவாப்பிலை – 1 கொத்து
தேங்காய் துருவல் – 1 கப்
தக்காளி பழம் – 1
புதினா இலைகள் – 10,
வெங்காயம் -2
Mushroom Gravy:
செய்முறை விளக்கம்:
1. முதலில் 200 கிராம் அளவு மஸ்ரூமை எடுத்து சுத்தம் செய்து வெட்டி அதை தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இதையடுத்து, அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, சோம்பு,சீரகம், மிளகு, ஏலக்காய், பட்டை கிராம்பு, வெங்காயம் போன்ற பொருட்களை எல்லாம் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
2. பின்னர் ஆற வைத்து மிக்ஸி ஜாரில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.
Mushroom Gravy:
3. பிறகு, அடுப்பில் ஒரு குக்கரை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கிய தக்காளி, புதினா இலைகள், கருவேப்பிலை சேர்ந்து நன்றாக வதக்கி வீட்டா வேண்டும்.
4. பின்னர் மஸ்ரூமை அதில் சேர்ந்து நன்குகலந்து விட வேண்டும். பின்னர், மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை ஊற்றி குருமாவுக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி உப்பு போட்டு நன்றாக கலந்து குக்கரை மூடி ஒரே ஒரு விசில் விட வேண்டும். இப்போது மணக்க மணக்க சுவையான குருமா தயார்.