MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • தாங்க முடியாத குதிகால் வலி, வாதம், எரிச்சல் எல்லாமே ஒரு நொடியில் நீங்க பாட்டி வைத்தியம்..!

தாங்க முடியாத குதிகால் வலி, வாதம், எரிச்சல் எல்லாமே ஒரு நொடியில் நீங்க பாட்டி வைத்தியம்..!

குதிகாலில் ஏற்படும் வலி, எரிச்சல், வாதம், மதமதப்பு ஆகிய பிரச்சனைகள் சில நிமிடங்களில் தீர எளிய முறையை காணலாம். 

2 Min read
maria pani
Published : Mar 01 2023, 04:11 PM IST| Updated : Mar 01 2023, 08:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

குதிகாலில் ஏற்படும் வலி, பாத வலி ஆகியவை ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. உடல் எடை, கால்சியம் குறைபாடு, இரும்புச்சத்து குறைபாடு என பல காரணங்கள் குதிகால் வலி ஏற்பட காரணங்களாக உள்ளன. இதை போக்க சிலர் மாத்திரைகள் எடுத்து கொள்வார்கள். ஆனாலும் வலி குறையாது. சிலருக்கு பக்க விளைவுகள் கூட ஏற்படலாம். 

26

குதிகால் வலி சிலருக்கு பிற மருந்துகளின் பக்க விளைவாக இருக்கலாம். ஆனால் சில இயற்கை வைத்தியங்களை வைத்து குதிகால் வலியை நொடியில் போக்கலாம். அதை தெரிந்து கொண்டு செயல்படுத்த உங்களுக்கு சில வீட்டுப்பொருள்கள் போதும். 

36

வீட்டில் உள்ள அகலமான பாத்திரத்தை எடுத்து கொள்ளுங்கள். இதில் வெந்நீரை ஊற்றி வையுங்கள். முன்னதாக பாகற்காயை வட்டமாக நறுக்கி எடுத்து வைத்து கொள்ளுங்கள். இந்த நறுக்கிய பாகற்காயை வெந்நீரில் போட்டுவிடுங்கள். இதனுடன் ஒரு கையளவு கல் உப்பை போட்டு கொள்ளுங்கள். உப்பு நல்ல கிருமிநாசினியாக செயல்படும். ஆனால் வெந்நீர் ஆறும் முன் உப்பை போட்டுவிட வேண்டும். ஐந்து நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். 

46

சூடான வெந்நீர் என்தால் பாகற்காயில் இருக்கும் கசப்பு முற்றிலும் இறங்கிவிடும். அதன் பின் கால் பொறுத்து கொள்ளும் அளவு வெந்நீரின் சூடு இருக்கும்போது வலி கொண்ட இரண்டு பாதங்களையும் அதில் வைக்கவும். முதலில் பாதங்களுக்கு சூடு தெரியும். பின்னர் பழகிவிடும். இப்படியே 10 நிமிடங்கள் கால்களை தண்ணீரில் வைத்து கொள்ள வேண்டும். 

56

பாகற்காய் நீரில் கால்களை வைத்து வெளியே எடுத்த பின் அப்படியே முடிந்துவிடாது. இரண்டு துளிகள் தேங்காய் எண்ணெயை பாதங்களில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அதன் பிறகு தூங்க சென்றால் தூக்கமும் நன்றாக வரும். இப்படியே 2 அல்லது 3 நாள்கள் செய்து வந்தால் வலி படிப்படியாக குறையும். குதிகால் வலியில் மாத்திரை இல்லாமல் விடுதலை கிடைக்கும். 

இதையும் படிங்க: ஜீரணம் ஆகாம வயிற்றில் கேஸ், எரிச்சல்.. சாப்பிடும் போதே என்ன பண்ணனும் தெரியுமா?

66

நாம் பயன்படுத்தும் பாகற்காயில் இருக்கும் கசப்புத் தன்மை தான் பாதங்களில் இருக்கும் நச்சுக்களை நீக்கும். இந்த மசாஜ் செய்யும்போது பாதங்களில் இருக்கும் எரிச்சல், அவசியமில்லாத வாத நீர், உப்பு நீர் எல்லாமே குறைவதோடு இல்லாமல், குதிகாலில் உள்ள வலி, எரிச்சல் சுத்தமாக குறைந்துவிடும். 

இதையும் படிங்க: கருஞ்சீரகம் இப்படி சாப்பிட்டு பாருங்க.. இறப்பை தவிர எல்லா நோய்களுக்கும் தீர்வு.. அட யாரு சொன்ன தெரியுமா?

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved