அளவுக்கு அதிகமானால் ஆபத்தை தரும் பொருட்கள்..! கண்டிப்பா தெரிந்துகொள்ளுங்கள்..!
அனறாடம் நாம் மூலிகை தன்மை கொண்ட பொருட்களை எடுத்து கொள்வது தவறு இல்லை. ஆனால் இதை கூட அளவோடு எடுத்து கொள்வது சிறந்தது. இதனால் தான் பல யுகங்கள் வாழ வைக்கும் அமிர்தத்தை கூட அளவாக உண்ண வேண்டும் என முன்னோர்கள் கூறியுள்ளார்கள்.
பச்சரிசி அதிக அளவில் பயன்படுத்துவதால் சோகை தட்டும்.
ஆச்சு வெல்லம் அதிகமாக எடுத்துக்கொண்டால் அஜீரண கோளாறு குழந்தைகளுக்கு வரும்.
பலவகை பலகாரங்கள் அதிகமான தின்றால் வயிற்று வலி வரும்.
இஞ்சி அதிகமாக எடுத்து கொண்டால், மென் குரலும் இறுக்கமாக மாறும்.
வயதானவர்கள் தேங்காய் இரவில் எடுத்து கொண்டால் நெஞ்செரிச்சல் மற்றும் இரும்பல் உண்டாகும்.
கோதுமை பொருட்களை, சூட்டு உடம்பு உள்ளவர்கள் அதிகமாக எடுத்து கொள்ளவேண்டாம். வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் பித்தம் அதிகரிக்கும்.
முற்றிய முருங்கை காய் சாப்பிட, வாயு, சளி உண்டாகும்.
மிளகு, அதிக பலம் இல்லாதவர்கள் அதிகம் எடுத்து கொண்டால், உடலில் வெட்ப தன்மையை உணர்வர்.
காபி அதிகமாக குடித்தால், பித்தம் அதிகரிக்கும்.
டீ அதிகமாக குடித்தால், பித்தம், பசியின்மை போன்ற பிரச்சனைகள் வர கூடும்.
உப்பு எடுத்துக்கொள்ளாமல், அளவான அளவில் பயன்படுத்துவது சிறந்தது.
வெங்காயம் அதிகமானால் தலை வலி, மற்றும் சளி பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.